Wednesday, December 26, 2012

கதாநாயகியாக நடித்தவர் கமலினி செல்வராசன்

பிரபலமான வானொலி, திரைப்பட, தொலைக்காட்சி நடிகையும், ஒலிபரப்பாளரும், ஒளிபரப்பாளருமான இவர் கவிஞர் சில்லையூர் செல்வராசனின் துணைவியாவார். “அன்னைதயை”, “தமிழன் எங்கே”, “ஈழநாட்டு தமிழ் சுடர்மணிகள்” போன்ற நூல்களை எழுதிய தென்புலோலி மு. கணபதிப் பிள்ளையின் மகளான இவர், ஒரு பட்டதாரியுமாவார்.
சில்லையூர் செல்வராசன் எழுதிய ‘தணியாத தாகம்’ வானொலித் தொடர் நாடகத்தில், குடும்பத்தின் இளைய மகளாக ‘கமலி’ பாத்திரத்தில் நடித்தவர். வானொலியில் ‘கலைக் கோலம்’ முதலாவன சஞ்சிகை நிகழ்ச்சிகள் பலவற்றை தயாரித்து வழங்கியிருக்கிறார்.
ரூபவாகினியில் ஒளிபரப்பான அருணா செல்லத்துரையின் நெறியாள்கையில், கே.எஸ். பாலச்சந்திரன் எழுதிய ‘திருப்பங்கள்’, எஸ். ராம்தாசின் ‘எதிர்பாராதது’, எஸ்.எஸ். கணேசபிள்ளை எழுதிய ‘சமூக சேவகி’ போன்ற பல தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துப் புகழ்பெற்றவர். ரூபவாகினியிலும், ஐ.ரி.என் தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கியவர். இவர் கோமாளிகள் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

No comments:

Post a Comment