
அதோடும் விடவில்லையாம். அந்த மனநிலையில் தன்னிடம் கதை சொல்வதற்காக தினமும் ஸ்பாட்டுக்கு அலைந்துகொண்டிருந்த சில புதுமுக இயக்குனர்களிடம் இப்ப நான் கதை கேட்கிற மூடிலேயே இல்லை. மனசு முழுக்க விஜய் சாருடன் நடிக்கப்போகிற படத்தைப்பற்றிய சிந்தனையில்தான் பறந்துகொண்டிருக்கிறது. அதனால் இப்போதைக்கு என்னை தொந்தரவு செய்யாதீர்கள் என்று விரட்டியடித்து விட்டாராம். இதற்கிடையே, கேரவனுக்குள் காலை ஆட்டியபடி அமர்ந்து விஜய் நடித்த படங்களையே போட்டுப் பார்த்துக்கொண்டிருந்த அமலாபால், டேக் ரெடியாகிவிட்டது என்று உதவி இயக்குனர்கள் வந்து ஒரு தடவைக்கு பலதடவை சொன்ன பிறகுதான் வேண்டாத வெறுப்பாக ஸ்பாட்டுக்கு வந்தாராம். அதைப்பார்த்து, படாதிபதிகளும், இயக்குனர்களும் செம டென்சன் அடைந்தாலும், அம்மணிக்கு சுக்கிரன் உச்சத்தில் இருப்பதால், இப்போதைக்கு மோத வேண்டாம் என்று அடக்கி வாசித்தார்களாம்.
No comments:
Post a Comment