
ஹன்சிகா, அமலா பால்ன்னு உங்களுக்கு பின்னாடி வந்தவர்கள், எங்கேயோ போய் விட்டார்கள். உங்களால் ஏன் முடியவில்லை?
சினிமாவை நான் இப்போதுதான் சீரியஸாக பார்க்க ஆரம்பித்திருக்கிறேன். வருஷத்துக்கு இரண்டு மூன்று படங்கள் என மலையாளத்தில் வாய்ப்பு வரும். அது மட்டுமே போதும் என நினைத்துக் கொண்டேன். மலையாள சினிமாவைத் தவிர வேறு எங்கேயும் போகக் கூடாது என்ற முடிவிலும் இருந்தேன். சென்னைக்கு வந்த போதுதான், சேரன் சேரின் ‘ராமன் தேடிய சீதை’ படத்தில் நடிக்க அழைத்தார்கள்.
சேரன் சேர் சினிமா எனக்கு ரொம்பவே பிடிக்கும். ‘ஓட்டோகிராப்’ என் ஓல் டைம் பேவரைட் மலையாள சினிமா உலகையே சேரன் சேர் பேச வைத்தார். அதனால் அவரை பிடிக்கும். ‘ராமன் தேடிய சீதை’ நல்ல படம். இருந்தாலும் சரியாகப் போகவில்லை. அதன் பின் தமிழ்ப் பட வாய்ப்புகள் வரவில்லை.
யாராவது அழைத்தால் பார்க்கலாம் என இருந்தேன். சினிமாவில் ஆர்வம் இருந்ததே தவிர அங்கே எப்படி வேலை பார்க்கலாம் என்பதற்கான ஐடியாவே இல்லை. ‘ராமன் தேடிய சீதை’ படத்தில் கிடைத்த ஓப்பனிங்கையும் தவற விட்டு விட்டேன். அதன் பின் நான் தேர்ந்தெடுத்த இரண்டு, மூன்று படங்கள் தவறாக இருந்திருக்கலாம் என இப்போது தோன்றுகிறது.
அதனால்தான் இப்போது மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்கிறேன். அந்த கணக்கின் தொடக்கம்தான் ‘பீட்சா’ இப்போதுதான் புதிதாக நடிக்க வந்த மாதிரி சின்சியராக இருக்கிறேன். அதே சமயம் கதை தேர்வுகளிலும் நேர்த்தி இருக்கும். அடுத்த பேட்டியின் போது நீங்க இந்த கேள்வியை நிச்சயம் கேட்க மாட்டீங்க.
கிளாமரில் உங்களை அதிகமாக பார்க்க முடிவதில்லையே. ரேவதி, சுஹாசினி மாதிரியான கேரக்டர்கள்தான். உங்களுக்கு எடுபடும் என நீங்களே முடிவு எடுத்து விட்டீர்களா?
ஆமாம் எனக்கு கிளாமர் சுட்டுப் போட்டாலும் வராது நிச்சயம் தமிழ் சினிமாவில் என் கேரக்டர்கள் புதிதாக இருக்க வேண்டும். அந்த எண்ணம் மட்டும்தான் இப்போது இருக்கிறது. நான் ரொம்பவே போல்டான பொண்ணு ஆனால் ஸ்டைலான பொண்ணு கிடையாது. எனக்கு எது வருமோ அதை மட்டுமேதான் முயற்சி செய்வேன்.
எதையும் யாரும் என்னிடம் திணிக்க முடியாது. ஒரு பாடலில் இடுப்பு தெரிய டான்ஸ் ஆடினேன். அதை பற்றி என்னிடம் முதலில் சொல்லவே இல்லை. திடீரென்று கேட்டார்கள். தயாரிப்பாளருக்கு சிரமம் கொடுக்க கூடாதென ஆடினேன். என் கேரக்டர்களிலும், படங்களிலும் ரசிகர்கள் நேர்த்தியை மட்டுமே எதிர்பார்க்க வேண்டும்.
கிளாமரை எதிர்பார்த்தால் அதற்கு நான் ஆளில்லை. போல்டா, கிளாமரா ஒரு கேரக்டர் வந்து அதற்கு கிளாமர் தேவைப்பட்டால் நடிக்கலாம். ஆனால் அதற்கும் நிறைய யோசிப்பேன். முதல் இடம். அதிக சம்பளம் மட்டுமே எனக்கு தேவையில்லை. அதில் எனக்கு ஈர்ப்பும் இல்லை.
‘பீட்சா’வுக்குப் பின் எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. இந்த சமயத்தில் இப்படி துணிச்சலா பேசுaங்க. சினிமாவில் இது சரியாக வருமா?
ன் நடிப்பை மட்டுமேதான் நம்பி இங்கே வந்திருக்கிறேன். அதற்கான கதைகள் மட்டுமே எனக்கு கிடைத்தால் போதும். இப்போது ‘ரெண்டாவது படத்தில் இதுவரை பார்க்காத ரம்யாவை நிச்சயம் பார்க்கலாம். கயல்விழின்னு நல்ல கேரக்டர்.
‘நீங்கதான் இதுக்கு பொருத்தம்’ன்னு அழைத்து வாய்ப்பு தந்தார். அமுதன் சேர் அவருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் நான் வாய்ப்பு கேட்கவே இல்லை மலையாளத்தில் வருகிற வாய்ப்புகளே எனக்கு போதும். தமிழில் மனசுக்கு பிடித்த பத்து சினிமாவில் நடித்தாலே போதும்.
அமுதன் சார் படத்தில் விமல், விஜயலெட்சுமி பெரிய கூட்டமே இருக்கிறது. எல்லோரும் தங்களை ஒரு விதத்தில் நிரூபித்தவர்கள். அதில் நான் எப்படி தெரிகிறேன் என பாருங்கள். அப்படி தெரிந்தால் என்னை பாராட்டுங்கள் அழைத்து வாய்ப்பு கொடுங்கள். நல்ல கேரக்டர் என்றால் என்னை வருத்தியும் நடிக்க நான் தயார். சினிமாவில் ஜெயிக்க ஒரு நடிகைக்கு இதைவிட வேறு ஏதாவது வேண்டுமா என்ன?
இருந்தாலும், ஸ்டார் ஹீரோக்களின் பார்வை பட்டால் தான் நல்லது.
No comments:
Post a Comment