Tuesday, January 1, 2013

7 வயதில் சினிமாவுக்கு குரல் கொடுத்தவர்

மறக்க முடியாத பழைய குரல்களில் ஒன்று ஜமுனா ராணியினுடையது. இன்று குத்துப்பாடல்கள் என இள அளைக் கவரும் பாடல்களை அன்று பாடியவர்களில் ஜமுனாராணியும் ஒருவர்.
ஜமுனாராணி எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோரின் அந்தக் கால குத்துப்பாடல்கள் அந்தக் கால இளைஞர்களை மட்டுமல்லாது முதியவர்களையும் கவர்ந்திழுத்தன. 1952 ம் ஆண்டு மொர்டன் தியேட்டர்ஸ் தயாரித்த வளையாபதி படத்தில் டி.எம்.எஸ்.ஸ¤டன் இணைந்து குளிர் தாமரை மலர்ப் பொய்கை என்ற பாடலை முதன் முதலாக பாடினார்.
ஜமுனாராணி அவருடைய குரலில் ஒரு கவர்ச்சி இருந்தது. அதே படத்தில் உள்ள இன்னொரு பாடலான குலுங்கிடும்பூவில் எல்லாம் தேனருவி பாய்வதனால் என்ற பாடல்தான் ஜமுனா ராணியை அடையாளம் காட்டியது. இந்த இரண்டு பாடல்களும் பாரதிதாசனால் எழுதப்பட்டவை.
டி.எம். செளந்தர ராஜனின் கம்பீரக் குரலுக்கு இணையாக ஜமுனாராணி பாடிய பாடல்கள் இன்றைக்கும் மறக்க முடியாதவையாக உள்ளன. ஏழு வயதில் சினிமாவுக்கு குரல் கொடுத்தவர், 14 வயதில் கதாநாயகிக்காக பின்னணி பாடியவர், நான்கு வயதில் சங்கீதப் போட்டியில் முதல் பரிசு பெற்றவர், ஐந்து வயதில் வானொலிக்காக தேர்வு செய்யப்பட்டவர் போன்ற பெருமைகளின் சொந்தக்காரர் ஜமுனாராணி.
1964 ம் ஆண்டு தெலுங்குத் திரைப்படமான தியாகய்யா வெளியான போது பிரபல இசை வித்தகர்களின் பாடல்கள் அப்படத்தில் இடம்பெற்றன. அவர்களுடன் ஏழு வயதான ஜமுனாராணியும் மதுரை நகரிலே என்ற பாடலைப்பாடி இருந்தார்.
நடன மங்கையாகத்தான் சினிமாவில் ஜமுனாராணி அறிமுகமானார். நாடகங்களில் தனியாகவும் குழுவாகவும் நடமாடினார். தீன பந்தாஜீவன் முக்திராவால்மீது, கருடகர்வ பங்கயம் போன்ற தெலுங்குப் படங்களில் ஜமுனாராணி நடனமாடி இருந்தார். 1952 ம் ஆண்டு வெளியாகி தமிழ்த்திரை உலகின் பெரும் புரட்சியை உருவாக்கிய தேவதாஸ் படத்தில் ஜமுனாராணி பாடிய “ஓ தேவதாஸ் படிப்பு இதானா வாத்தியாரு தூங்கிப் போனா ஓட்டம் பிடிக்கிறே” என்ற பாடல் ஜமுனாராணிக்கு பெரும் புகழைத் தேடிக் கொடுத்தது.

No comments:

Post a Comment