Wednesday, January 16, 2013

மூன்றாவது தலைமுறை நடிகை ஐஸ்வர்யா


குமாரி, ருக்மணி, லட்சுமி, இவர்களைத் தொடர்ந்து மூன்றாவது தலைமுறை நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா. ரஜினி, கமல், சூர்யா, விக்ரம், பிரபு போன்ற பலருடன் வெள்ளித் திரையில் நடித்தவர். தற்போது ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் ஏ. வி. எம்.மின் ‘மனதில் உறுதி வேண்டும்’ தொடரில் நடித்து வருகிறார். அவருடனான சந்திப்பிலிருந்து....
தற்போது நடித்து வரும் தொடர், படங்கள் பற்றி சொல்லுங்கள்?
இப்போதுதான் ஒரு தமிழ் படம் முடிந்தது. அடுத்து தெலுங்கு நடிகர் மோகன்பாபு மகள் இயக்கி வரும் ‘வருவான் தலைவர் தமிழ் படத்தில் நடிக்கிறேன். அதன் தெலுங்கு பதிப்பிலும் நான் நடித்திருந்தேன். அதே கேரக்டரில் இப்போது தமிழில் நடிக்கிறேன்.
அடுத்து ‘ஓடுதளம்’ என்கிற தமிழ் படம் அதன் இயக்குநர் சசி மோகன் சேர் அவர் திடீர்ன்னு இறந்துட்டாரு. அந்தப் படமும் இப்போது ரிலீஸ் செய்யப் போறங்க, இதை தவிர மூன்று மலையாளப் படங்களில் நடித்து வருகிறேன். இதனால் சீரியல்களில் அவ்வளவாக கவனம் செலுத்த முடியவில்லை.
இப்போதைக்கு ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் ஏ. வி. எம்.மின் ‘மனதில் உறுதி வேண்டும்’ தொடரில் மட்டும் தான் நடித்து வருகிறேன். அதில் ராம்ஜி சேரோட சித்து கேரக்டர் செய்கிறேன். சின்னதா நெகட்டிவ் ரோல் மாதிரி இருக்கும். ஆனால் வில்லி கேரக்டர் கிடையாது.
தென்றல் தொடரில் உங்கள் கதாபத்திரம் பேசும்படியாக இருந்ததே அதில் இருந்து ஏன் வெளியே வந்தீங்க?
நான் வெளியே வரவில்லை. அந்த நேரத்தில் எனக்கு தெலுங்கு பிராஜக்ட் ஒண்ணு போய்கிட்டு இருந்தது. அப்போது டேட்ஸ் பிரச்சினையால் ரெண்டு புரொடியூசருக்குள்ளும் சில கருத்து வேறுபாடு ஆகிவிட்டது. ஒரே ஒரு நாள் ரெண்டு பேருமே விட்டுக் கொடுக்கவில்லை. அதனால் நான் வெளியே வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.
இல்லை என்றால் அது போன்ற ஒரு நல்ல பேனரில், நல்ல இயக்குநர், நல்ல கதாபாத்திரம், பிரபல சேனல் அப்படியிருக்கும் போது நான் ஏன் வெளியே வரவேண்டும்? ரெண்டு பேருக்கும் விட்டுக் கொடுக்க மனமில்லாததால் நான் பாதிக்கப்பட்டேன். அவ்வளவு தான். அப்பவே முடிவு பண்ணிட்டேன் இனி ரெண்டு மெகா தொடர்கள் ஒரே நேரத்தில் செய்யக் கூடாதுன்னு.
நீங்கள் சினிமாவுக்கு வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. நடிப்பை தவிர தயாரிப்பு, இயக்கம் என டெக்னிக்கல் பக்கம் போகாதது ஏன்?
அய்யோ தயாரிப்பு வேண்டாம். இயக்கம் பக்கம் கொஞ்சம் ஆர்வம் இருக்கு. அதற்கான முயற்சிகள் செய்து வருகிறேன். கதையெல்லாம் எழுதி தயார் செய்து விட்டேன். அபியும் நானும் படத்தின் போதே ராதாமோகன் சேர்கிட்ட அந்த கதையை பற்றி விவாதித்தேன். அவர் கதை நல்லா இருக்கு நீங்க செய்யலாம்ன்னு ஐடியா கொடுத்தாரு. குடும்பம் நடிப்புன்னு இருப்பதால் டயலொக் எழுத நேரம் கிடைக்கவில்லை. இப்போ எழுதி வருகிறேன் விரைவில் படத்தை இயக்கவிருக்கிறேன்.
குடும்பம், நடிப்பு எப்படி சமாளிக்கிaங்க?
எங்க குடும்பத்தில் எல்லோருமே இப்படித்தான், கேரியர், குடும்பம் ரெண்டுமே சூப்பரா செய்துடுவோம். அம்மா இப்பவும் அப்படி தான். பாட்டி இருக்கும் போதும் அப்படி தான் வீட்டு வேலைகள் அனைத்தையும் நாங்களே செய்துவிடுவோம். சமைப்பது துணி துவைப்பது, என் பொண்ணு அனேனாவுக்கு சாப்பாடு கொடுப்பது என எல்லாமே என் வேலை தான். உண்மையா சொல்லனும்ன்னா அவுஸ் ஓய்ப் வேலை தான் ரொம்ப ரொம்ப கடினம். நடிப்பது சுலபமா செய்துடுவேன். ஹோட்டலில் சாப்பிடுவது எனக்கு பிடிக்காது. எத்தனை மணி ஆனாலும் நானே போய் தான் சமைப்பேன். சமைப்பது எனக்கு ரொம்பவும் பிடிக்கும். எல்லோரும் என்னை கேலி செய்வார்கள். ஐஷ¥ கிச்சன்னு ஒண்ணு ஆரம்பித்துவிடுன்னு.

No comments:

Post a Comment