
இதில் நான் மீனவனாகவும், ஜீவா இசைக் கலைஞனாகவும் நடிக்கிறோம் மங்களூரில் ஷ¥ட்டிங் நடந்தபோது.,
எனக்கு அருகில் ஒரு பெண் வந்தார். நான் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது, அவரும் செய்தார். தன் காலை கழுத்தில் தூக்கிப் போட்டுகொண்டார். அவரை அசத்தலாம் என்று ஜிம்மில் ஏகப்பட்ட வெயிட்டைத் தூக்கிய நான். அவரது செயலைப் பார்த்து ஷொக் ஆனேன். பிறகு ‘நீ யார்?’ என்றேன் நான் உங்ககூட நடிக்கப்போறேன் என்றார். பிறகுதான் அவர் இஷா ஷெர்வானி என்று தெரிந்தது.
அவரது அப்பா, அம்மாவுக்கு நடனத்தில் ஈடுபாடு இருந்ததால், அவர்களின் ஜீன் இஷாவுக்குள்ளும் இருந்ததில் வியப்பில்லை. இந்தப் படத்தில் மீனவனாக நடித்ததை மறக்க முடியாது. கடலில் சுழன்றடிக்கும் காற்றில் படகு செல்லும்போது இஷாவுடன் நடித்த காட்சிகளை கஷ்டப்பட்டு படமாக்கி இருக்கிறார்கள். இதில் ஜீவாவுடன் இணைந்து நடித்ததும் சிறந்த அனுபவமாக இருந்தது. இவ்வாறு விக்ரம் பேசினார். இதில் ஜீவா, இஷா, ஷெர்வானி, அனிரூத், பாடகர் கார்த்திக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment