Thursday, January 3, 2013

79 நாயகர்களும் 78 நாயகிகளும் அறிமுகம்

கடந்த ஆண்டு 79 கதாநாயகர்கள் அறிமுகமானார்கள், அவர்களில், உதயநிதி ஸ்டாலின் (ஒரு கல் ஒரு கண்ணாடி) விஜய் அண்டனி (நான்) விக்ரம் பிரபு (கும்கி) ஆகியோர் வெற்றி பெற்றார்கள்.
சிவகார்த்திகேயன் (மெரீனா), வாசகர் (பச்சை என்கிற காத்து), லகுபரன் (ராட்டினம்), தினேஷ் (அட்டக்கத்தி) ஆகியோர் கவனிக்க வைத்தனர்.
78 கதாநாயகிகள் அறிமுகமானவர்கள் அவர்களில், லட்சுமி மேனன், (சுந்தரபாண்டியன், கும்கி), வரலட்சுமி (போடா போடி), ராதிகா ஆப்தே (டோனி), மனீஷா, ஊர்மிளா (வழக்கு என் 18/9, ஸ்வாதி (ராட்டினம்), நந்திதா (அட்டக்கத்தி), காயத்ரி (18 வயசு) ஆகியோர் கவனிக்க வைத்தனர்.
கடந்த ஆண்டு 97 இயக்குநர்கள் தங்கள் முதல் படைப்பை தந்திருக்கிறார்கள். அவர்களில் கார்த்திக் சுப்புராஜ் (பீட்சா), எஸ். ஆர். பிரபாகரன் (சுந்தரபாண்டியன்), ஜீவா சங்கர் (நான்), பாலாஜி மோகன் (காதலில் சொதப்புவது எப்படி), ஹரி சங்கர் - ஹரிஷ் நாராயணன் (அம்புலிமாமா), எம். அன்பழகன் (சாட்டை), பாலாஜி தரணிதரன் (நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்) பா. ரஞ்சித் (அட்டகத்தி) ஆகியோர் வெற்றியை சுவைத்தார்கள்.
ஐஸ்வர்யா தனுஷ் (3 பிரகாஷ்ராஜ் (டோனி), கீரா (பச்சை என்கிற காத்து), கே. எஸ். தங்கசாமி (ராட்டினம்), கமலக்கண்ணன்
(மதுபானக்கடை), தனபார் பத்மநாபன் (கிருஷ்ணவேணி பஞ்சாலை), எல்ரெட் குமார் (முப்பொழுதும் உன் கற்பனையில்), இரா சுப்பிரமணியம் (சேவற்கொடி), சத்யசிவா
(கழுகு), எஸ். ஜெய்சங்கர் (மன்னாரு), அஸ்லம் (பாகன்) லட்சுமி ராமகிருஷ்ணன் (ஆரோகணம்), எஸ். பாலன் (உடும்பன்), ஆண்ட்ரோ லூயிஸ் (லீலை), விக்னேஷ் மேனன் (விண்மீன்கள்) ஆகியோர் பாராட்டும்படியான படைப்பைக் கொடுத்தார்கள் எஸ். எஸ். ராஜமெளலி (நான் ஈ), சந்தோஷ் சிவன் (உருமி), கெளரி (இங்கிலீஷ் விங்கிலிஷ்) ஆகியோர் வேறு மொழிகளிலிருந்து தமிழுக்கு வந்தார்கள்.

No comments:

Post a Comment