Wednesday, July 31, 2013

மஞ்சுளா...

அன்று எம். ஜி. ஆரால் சாந்தி நிலையத்தில் சிறு பெண்ணாக நடித்திருந்தாலும் ரிக்ஷாக்காரன், அழகிய தமிழ் மகள் இவள்... பாடல் காட்சி மிகவும் பிரசித்தமானது. இப்படம் மூலம் உலகறிய வலம் வந்தவர்.
தொடர்ந்து உலகம் சுற்றும் வாலிபனில், இதய வீணையில் லக்ஷ்மியுடன் நடித்திருந்தார். நினைத்ததை முடிப்பவன், நேற்று இன்று நாளை என்று தொடர் வெற்றிப் படங்கள் என்று பல படங்களில் நடித்தவர், சிவாஜியுடன் டாக்டர் சிவா, உத்தமன், அன்பே ஆருயிரே... மல்லிகை முல்லை பூப் பந்தல்... பாடல், என்று பல படங்களில் அன்றைய காலக் கட்டத்தில் கதாநாயகியாகிய இளமையான நடிகை இவர் ஒருவரே.
நடிகர் விஜயகுமாரை மணந்த பிறகு திரை உலக வாழ்வில் இருந்து ஒதுங்கிக் கொண்டார் எனலாம். மறுபிறவியில் முத்துராமனோடு நடித்தவர். பெரும்பாலும் இவர் நடித்த படங்கள் வெற்றிப் படங்களே. பாடல்களும் இவருக்கு நன்கமைந்தன. ஒரு புராணப் படத்திலும் இவர் நடித்துள்ளார்.
தமிழ்த் திரையில் இடையில் ஒதுங்கியிருந்தாலும் இவருக்கென்று ஒரு தனி நினைவு உண்டு. அது யாரும் மறுக்க முடியாது.

No comments:

Post a Comment