
இவருடைய வாழ்க்கையை மையமாக வைத்து இந்தியில் ஒரு படத்தை உரு வாக்க இருக்கிறார்கள். இந்தப் படத்தில் மேரிகோம் வேடத்தில் முன்னாள் உலக அழகியும், பொலிவுட்டின் பிரபல நடிகையுமான பிரியங்கா சோப்ரா நடிக்கிறார். இப்படத்திற்காக கடுமையாக பொக்ஸிங் பயிற்சிகளை எடுத்து வருகிறார் பிரியங்கா.
பொக்ஸிங் சம்பந்தப்பட்ட விஷயங்களை அறிந்து கொள்வதற்காக சமீபத்தில் மேரிகோமை சந்திக்க அவரது சொந்த ஊரான மணிப்பூரிலுள்ள இம்பால் நகருக்கு சென்று அவருடன் சில நாட்கள் தங்கி பொக்ஸிங் சம்பந்தப்பட்ட விஷயங்களை விவாதித்து விட்டு வந்துள்ளார். மேலும் மேரிகோமின் பயிற்சியாளரையும் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். இந்த சந்திப்பின் போது இயக்குனர் ஓமாங்குமாரும் உடனிருந்தார்.
இப்படத்திற்காக தினமும் எட்டு மணி நேரம் குத்துச்சண்டை பயிற்சிக்கு வருகிறாராம் பிரியங்கா. இவர் போதுமான பயிற்சி பெற்றதும் படப்பிடிப்பை தொடங்க முடிவெடுத்துள்ளனர். இப்படம் தன்னுடைய சினிமா வாழ்வில் ஒரு மைல்கல்லாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு களமிறங்கியிருக்கிறார் பிரியங்கா சோப்ரா.
No comments:
Post a Comment