
இதே முக்கியத்துவத்தை தமிழ், மலையாளம் படங்களுக்கு தருகிறேன். தமிழில் எதிர்பார்த்த வாய்ப்பு வரவில்லை. மலையாளத்தில் இப்போது நல்ல வாய்ப்புகள் வருகின்றன. கடந்த வருடம் கன்னட படங்களில் கவனம் செலுத்தினேன். இந்த வருடம் மலையாளத்தில் 3 படங்கள் நடித்து முடித்திருக்கிறேன்.
ஆனால் ஒரு மொழியில் மட்டுமே தொடர்ந்து நடித்துக்கொண்டிருக்க விருப்பமில்லை. தென்னிந்தியாவில் எல்லா மொழியிலும் நடிக்க ஆசை. எல்லா சமயத்திலும் பணம்தான் முக்கியம் என்று பார்ப்பதில்லை. நல்ல கதைகளும் முக்கியம். ஆனால் மற்ற தொழிலைப்போல் சம்பளம் என்பதும் முக்கியம். நல்ல வாய்ப்புகள் வரும்போது அதை மிஸ் செய்ய மாட்டேன். நிறைய வாய்ப்புகள் வருகிறது. அதற்காக எல்லாவற்றையம் ஏற்பதில்லை. தேர்வு செய்தே ஒப்புக்கொள்கிறேன். இவ்வாறு பாமா கூறினார்.
No comments:
Post a Comment