Wednesday, July 24, 2013

ஐந்து வருடத்திற்குப் பின் திருமணம்

சிம்பு - ஹன்சிகா இருவரும் தங்கள் காதலை உறுதி செய்தனர். ஹன்சிகாவை மணக்கப் போவது எப்போது? என்று சிம்புவிடம் கேட்டபோது, ஹன்சிகாவை காதலிப்பது உண்மை. திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளோம். ஆனால் விரைவில் நடக்காது. ஹன்சிகாவுக்கு திரையுலகில் பிரகாசமான வாய்ப்புகள் இருக்கின்றன. முதலில் அவர் அதை நிறைவேற்றட்டும். நானும் நிறைய பணிகள் ஒப்புக் கொண்டிருக்கிறேன். அதை கண்டிப்பாக நிறைவு செய்ய வேண்டும். எங்கள் இரண்டு குடும்பமும் காதலுக்கு பச்சைகொடி காட்டி இருக்கிறார்கள் என்றார்.
ஹன்சிகா கூறும்போது, ‘வேட்டை மன்னன்’ படத்தில் எங்களுக்கு காதல் பிறக்கவில்லை. அதற்கு பிறகு தான் காதல் மலர்ந்தது. நட்பாக பழகி வந்தோம் எங்களுக்குள் இருப்பது நட்பல்ல காதல் என்பது பிறகுதான் தெரிந்தது. எதையும் வெளிப்படையாக பேசுபவள் நான். இதுசரியான நேரம் என்பதால் காதல் கிசு கிசுக்களுக்கு பதில் அளித்தேன். நான் இப்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறேன் சில படங்களில் நடித்து வருகிறேன் இன்னும் சிலகாலம் நடிக்க முடிவு செய்துள்ளேன் அதனால் இன்னும் 5 வருடம் கழித்தே திருமணம் செய்வேன் என்றார்.

No comments:

Post a Comment