Tuesday, July 23, 2013

வாலியால் வந்த வாளி

மறைந்த முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கிய நேரம். அவர் ஒருதடவை நெல்லைக்கு கட்சி பிரசார கூட்டத்தில் பங்கேற்க சென்றிருந்தார். அவர் தன்னுடன் கவிஞர் வாலியை அழைத்து சென்றிருந்தார்.
கூட்டம் முடிந்த மறுநாள் காலை தன் அறையில் இருந்து வெளியில் வந்த எம்.ஜி.ஆர். சுற்றும் முற்றும் பார்த்தபடி, வாலி எங்கே? வாலி எங்கே? என்றார். இதைக் கேட்ட தொண்டர் ஒருவர் எம்.ஜி.ஆர். வாளியைத்தான் கேட்கிறார் என்று தவறாகப் புரிந்து கொண்டு ஒரு பெரிய வாளியை தூக்கிக் கொண்டு ஓடி வந்தார்.
அதைப் பார்த்ததும் எம்.ஜி.ஆரும், மற்றவர்களும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

No comments:

Post a Comment