கண்ணதாசன் பாட்டுகளில் நிறைய இலை மறைவு காய்மறைவாய் குறும்புகள் கொப்பளிக்குமாம்.
எனக்குத் தெரிந்த அப்படி ஒரு பாடல்
கட்டோடு குழலாட ஆட ஆட
கண்ணென்ற மீனாட ஆட ஆட
இப்படி இளமைக்கு உதாரணம் சொல்லிக் கொண்டு போகும் கவிஞர் சட்டென்று குறும்பு கொப்பளிக்கும் வரிகளை எடுத்து விடுகிறார் பாருங்கள்.
பாவடை காற்றோடு ஆட ஆட
பருவங்கள் பந்தாட ஆட ஆட
காலோடு கால் பின்னி ஆட ஆட
கள்ளுண்ட வண்டாக ஆடு
இப்படி பாட்டு எழுதியவர் ஒரு சிறுவனிடமோ!
இசையமைப்பாளரிடமோ சிக்கிக் கொண்டாராம்
முதிராத நெல்லாட ஆட ஆட
முளைக்காத பல்லாட ஆட ஆட
என்று எழுதி வைத்திருக்கிறார். அதைப் படித்தவர் கேட்டாராம் முளைக்காத பல் எப்படி ஆடும்? அப்படி பல் ஆடினால் முதியோர்கள் அல்லவா! பல் இளங் குழந்தைக்கும் ஆடும் ஆனால் முளைக்காத பல் ஆடாது என்பது சரி தான் என்று கூறி
‘முதிராத நெல்லாட ஆட ஆட
முளைக்காத சொல் ஆட ஆட
என்று மாற்றினாராம். என்ன இருந்தாலும் கவியரசர் அல்லவா தான் செய்தது தவறு என்று யார் சொன்னாலும் அது உண்மையெனில் உணர்ந்து திருத்திக் கொள்ளும் பக்குவம் அவருக்கு இருந்ததால் தான் கவியரசர் ஆனாரோ.
No comments:
Post a Comment