Wednesday, July 3, 2013

டாப்சி


‘ஆடுகளம்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்சி. இவர் தற்போது லோரன்சுடன் ‘கங்கா’ படத்திலும், கோபி சந்த்துடன் ‘சாகசம்’ என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.
டாப்சி கூறியதாவது :- எனக்கு சாகச காட்சிகளில் நடிக்க ஆசை. ‘சாகசம்’ படத்தில் அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. கிளாமர் இல்லாத சினிமாவை யாராலும் நினைத்து பார்க்க முடியாது. ஆனால் கிளாமர் என்பது அருவருப்பாக மாறி விடக்கூடாது. கிளாமருடன் நடிப்பும் தெரிந்தால்தான் சினிமாவில் முன்னுக்கு வர முடியும்.
‘ஆடுகளம்’ படம் எனக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. அதில் சேலஞ்சிங் ரோலில் நடித்தேன். இதுபோன்ற வாய்ப்பு கிடைப்பது அரிதானது ஆனால் எனக்கு முதல் படத்திலேயே கிடைத்துள்ளது.
சினிமாவில் 10 வருடம் மட்டும்தான் கதாநாயகியாக தாக்குபிடிக்க முடியும். தொடர்ந்து கதாநாயகியாக நடிக்கலாம் என்று யார் கூறினாலும் நம்ப மாட்டேன். 10 வருடங்களுக்கு பிறகு சினிமாவில் வாய்ப்பு வராத பட்சத்தில் நான் நடிகை என்று தெரியாத இடங்களுக்குச் சென்று சாதாரண பெண் போல வாழ்க்கையை நடத்துவேன். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment