
ரஜினிக்கு கதை ரெடி பண்ணிட்டேன். அவரது ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில்
இந்தக் கதையை அமைத்திருக்கிறேன். எனக்கு ஒரு வாய்ப்பு தருவாரா ரஜினி சேர்? என்று
கேட்டுள்ளார் இயக்குநர் பேரரசு.
கோலிவுட்டில் ரொம்ப காலமாக இருக்கும் ரஜினி சேர் மட்டும் ரெடின்னா.... அவருக்கு
அசத்தலாக ஒரு கதை வச்சிருக்கேன். அல்லது ‘ரஜினி சேர்க்கிட்ட சொல்லியிருக்கேன்....
பேசலாமனு சொல்லியிருக்கார்’ என்று இயக்குநர்கள் சொல்லிக்கொள்வது தான். இப்படிச்
சொல்லிக் கொண்டவர்கள் பட்டியல் ரொம்பப் பெரியது. ஆனால் இதில் சுவாரஸ்யம்
என்னவென்றால்...

இவர்களில் ஒருவருடன் கூட ரஜினி படம் பண்ணவில்லை என்பது தான்!!
இப்போது இந்தப் பட்டியலில் புதிதாகச் சேர்ந்திருப்பவர் பேரரசு. சமீபத்தில் இவர்
கொடுத்த திருத்தணி பார்த்த பாதிப்பில் சில ரசிகர்கள் கிட்டத்தட்ட தமிழ் சினிமாவே
இனி பார்க்க வேணாம் என்று பின்னங்கால் பிடரியில் பட ஓடிவிட்டார்கள். இனி பேரரசுவின்
நிலை கேள்விக்குறியாகிவிட்ட சூழலில், ஒரு பப்ளிசிட்டி பிட்டைப் போட்டுள்ளார்.
(விஜய்யோட ஆஸ்தான இயக்குநராச்சே!) ரஜினிக்காக ஒரு கதை தயார் செய்து
வைத்துள்ளதாகவும், அது ரஜினி ரசிகர்களுக்கு விருந்ததாக அமையும் என்றும் அவர்
கூறியுள்ளார். இது குறித்து சமீபத்தில் அவர் கூறுகையில், ‘நான் ரஜினிக்காக ஏற்கனவே
திரைக்கதையும் தயாரித்து விட்டேன். அந்த கதைக்கு செங்கோட்டை என பெயரிட்டுள்ளேன்.
இந்தப் படம் ரஜினிக்கு மிகவும் பொருத்தமாக இருப்பது மட்டுமன்றி அவரது ரசிகர்களுக்கு
நல்ல விருந்தாக அமையும் என்றார்.
No comments:
Post a Comment