ரஜpனியின் லவ் ஸ்டோரி
ரஜினி தன் காதலச் சொல்லி திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்டதற்கு லதா வெட்கப்பட்டுக் கொண்டு தனது பெற்றோரிடம் சம்மதம் கேட்குமாறு கூறியுள்ளார்.
சென்னை எத்திராஜ் கல்லூரியில் படித்த லதா கல்லூரி பத்திரிகைக்காக ரஜினியை பேட்டி எடுக்கச் சென்றபோதுதான் அவரை முதன் முதலாக சந்தித்தார்.
அவரை முதல் தடவைப் பார்த்ததுமே எனக்கு பிடித்துவிட்டது. ஒரு சினிமா நடிகரைச் சந்தித்தோம் என்ற மாதிரியே இல்லை. ஏதோ நீண்ட காலம் பழகியவரை சந்தித்தது போன்று இருந்தது என்றார் லதா.
ரஜினி உதவியாளர் சத்ய நாராயணா கூறுகையில், அந்த பேட்டியின்போதே ரஜினி லதாவிடம் தன்னை மணக்க இஷ்டமா என்று கேட்டார். அவர் வெட்கப்பட்டுக் கொண்டு எனது பெற்றோரிடம் கேளுங்கள் என்றார். லதா ரஜினியை சந்தித்தபோது தான் அவர் உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு தேறி வந்தார்.

பெரிய ஹீரோவாக ஆன ரஜினிக்கு ஒரு துணை தேவைப்பட்டது. அந்த நேரத்தில் தான் லதா வந்தார். லதாவின் பெற்றோரை திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளச் செய்யும் பொறுப்பு நடிகர் ஓய்.ஜி. மகேந்திரனின் தலையில் விழுந்தது.

இதையடுத்து ரஜினியின் நண்பர் ராஜா பாதர் போயஸ் கார்டன் வீட்டுக்கு சென்று மணப்பெண் பற்றி கேட்டார். ரஜினி தன் காதலைப் பற்றியும் லதாவை மணக்க விரும்புவதைப் பற்றியும் ராஜாவிடம் தெரிவித்தார்.
உடனே ரஜினி லதாவை போன் செய்து வரவழைத்து இவர் தான் நான் மணக்க விரும்பும் பெண் என்றார். அதன் பிறகு ராஜா பாதர் பெண் குறித்து பல கேள்விகளை கேட்டுவிட்டு ஓ.கே. கல்யாணம் செய்துகொள் என்றார்.
கலைவாணரிடம் நடிகவேள் பட்டம் பெற்றவர் லடிஸ் வீரமணி
லடிஸ் வீரமணி (இறப்பு: மே 5. 1995) இலங்கையில் மேடை நாடகத்துறையில் நடிகராக, நாடகாசிரியராக, இயக்குனராக அறியப்பட்டவர். இவர் இயக்கிய நாடகங்களில் ‘சலோமியின் சபதம்’ ‘மதமாற்றம்’ என்பன குறிப்பிடற்குரியனவாகும். அரைநூற்றாண்டு காலம் தமிழ் நாடக மேடையின் ஆற்றல் மிகுந்த கலைஞராக தனது ஆளுமையை நிலை நாட்டியுள்ளார்.
1954 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் – மதுரம் குழுவினருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில் லடிஸ் வீரமணியின் நடிப்புக்காக நடிகவேள் என்ற பட்டத்தை வழங்கினார் என்.எஸ்.கே.
ஆரம்ப காலங்களில் இவரை நெறிப்படுத்தியவர்களில் மிக முக்கியமானவர் ஏ. இளஞ் செழியன். மற்றவர் முற்போக்கு இலக்கிய முன்னோடியுமான அ.ந. கந்தசாமி. அ.ந. கந்தசாமி எழுதிய மத மாற்றம் என்ற நாடகம் தமிழ் நாடக மேடையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
மதமாற்றத்தை சிறப்பாக நெறியாள்கை செய்தார் லடீஸ் வீரமணி அ.ந. கந்தசாமி மகாகவியிடம் வீரமணியை அறிமுகப்படுத்தியதன் காரணமாக அவருக்காகவே கண்மணியாள்காதை என்ற வில்லுப்பாட்டை மகாகவி எழுதினார்.
1983இல் இலங்கையில் ஏற்பட்ட இனக் கலவரத்தின் பின் தமிழகத்திலிருந்தார் வீரமணி. அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று கண்மணியாள் காதை என்ற வில்லிசை நிகழ்ச்சியை அங்கு நடத்தினார். அவர் வெண்சங்கு, வாடைக் காற்று ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இல்லத்தரசிகளின் அன்றாட பணிகளின் அழகியலை தனித்துவப்படுத்தி காட்சிப்படுத்திய பாடல்
ஆணி முத்து வாங்கி வந்தேன்
குறும்புகார சிறுமிகள் போல் ஆடி குதூகலிக்கும் அழகு
ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே என்ற பாடல் கே. பாலசந்தர் இயக்கத்தில்
வெளியான ‘பாமா விஜயம்’ என்ற படத்தில் இடம்பெற்றது.
செளகார் ஜானகி, ஜெயந்தி, காஞ்சனா ஆகிய மூவரும் கதையின் மூன்று முக்கிய பாத்திரங்கள். மூவருமே இல்லத்தரசிகள். அவர்களது அன்றாட வேலைகளையே பாடல் காட்சிப்படுத்தியிருக்கிறது. அது தான் இப்பாடலின் தனித்துவம்.
சினிமாவில் பாடல்கள் எப்போதும் பெரிதும் மிகைப்படுத்தல் ஒன்றாகவே இருக்கிறது. கனவுக் காட்சி என்று அயல் நாட்டின் வணிக வீதிகளிலோ, பனிமலையிலோ ஓடியாடிப் பாடுவார்கள் அல்லது ஊட்டி, கொடைக்கானலின் புல்வெளிகளில் உருண்டு திரிந்து மரங்களைச் சுற்றிப் பாடுவார்கள்.
அதுவுமில்லை என்றால் ஒரு பிரம்மாண்டமான செட்டில் கைகால்களை இழுத்து வலிந்து ஆடிப்பாடுவார்கள். அதுபோன்ற எந்த மிகையுமற்று அன்றாடக் காரியங்களின் அழகியலைக் காட்சிப்படுத்தியிருக்கிறது என்பதற்காகவே இந்தப் பாடலை முக்கியமானது என்று கருதுகிறேன்.
கிணற்றடியில் தண்ணீர் இறைப்பது, பாத்திரம் கழுவுவது, துணிதுவைப்பது, குளிப்பது, அம்மி அரைப்பது, உரலில் இடிப்பது, விளக்கேற்றுவது, ஒருவரையொருவர் கேலி செய்து தண்ணீரை வாரி அடித்துக் குளிப்பது, தலைவாரிவிடுவது, காய்கறிகள் நறுக்குவது சமைப்பது, சாப்பாடு பரிமாறுவது, பல்லாங்குழி ஆடுவது, தயிர் கடைவது, காய்ந்த துணிகளை மடித்து வைப்பது, குழந்தைகளைத் தூங்க வைத்துத் தானும் அருகில் படுத்துக் கொள்வது என்று வீட்டுக்குள்ளாகவே நாளைக் கழிக்கும் பெண்களின் அன்றாட உலகை முழுமையாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது இப்பாடல். அந்த மூன்று பெண்களுக்குள் உள்ள அந்நியோன்யமும், பரஸ்பர கேலி கிண்டல்களும், ஒருவர் மற்றவர் மீது காட்டும் அக்கறையும் அபாரமான அழகாகயிருக்கிறது.

காஞ்சனா இந்தக் காட்சியில் நடந்து வரும் துள்ளல் நடை தனித்த வசீகரமானது. ஒருத்தி மற்றவள் மீது தண்ணீர் ஊற்றிக் குளிக்கச் செய்கிறாள். அவர்கள் பரஸ்பரம் வேடிக்கை செய்து கொள்கிறார்கள. அதைப் படமாக்கியுள்ள விதத்தில் அவர்களின் வயது கரைந்து போய் மூன்று குறும்புக்காரச் சிறுமிகள் ஒன்றாக விளையாடுவது போல அத்தனை ஆனந்தமாக உள்ளது.
மூவரும் நடுத்தரவர்க்க குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், மூவருக்கும் பகல் முழுவதும் வேலைகள் இருந்து கொண்டேயிருக்கின்றன. அத்தனை வேலைகளையும் அலுக்காமல் செய்தபடியே அதைத் தாண்டி அன்றாட வாழ்வின் சங்கீதத்தைக் கேட்டு தன்னை மறந்து ஆடுபவர்களைப் போல வீட்டிற்குள்ளாக ஆடிப்பாடுகிறார்கள்.
அதில் ஒரு மருமகள் வீட்டின் ஹோலில் காலைச் சுழற்றி சர்வ சுதந்திரமாக ஆடிப்பாடுகிறாள். இந்த உலகில் அவர்கள் மூவர் மட்டுமே இருக்கிறார்கள் என்பது போன்ற களிப்பு அவர்களிடமிருக்கிறது.
No comments:
Post a Comment