Wednesday, December 26, 2012

நடிகர் அசோகன் பாடிய பாடல்

எறந்தவன சொமந்தவனும் எறந்திட்டான் - அதை
இருப்பனுவம் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்
எறந்தவன சொமந்தவனும் எறந்திட்டான் - அதை
இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்

பறந்து பறந்து பணம் தேடி பாவக் குளத்தில் நீராடி
பறந்து பறந்து பணம் தேடி பாவக் குளத்தில் நீராடி
பிறந்து வந்த நாள் முதலாய்ப் பேராசையுடன் உறவாடி
இறந்தவன - அப்படி
எறந்தவன சொமந்தவனும் எறந்திட்டான் - அதை
இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்

தாயாரின் வேதனையில் பிறக்குறான் - மனுஷன்
தன்னாலே துடிதுடிச்சு எறக்குறான்
தாயாரின் வேதனையில் பிறக்குறான் - மனுஷன்
தன்னாலே துடிதுடிச்சு எறக்குறான் - இடையில்
ஓயாத கவலையிலே மிதக்கிறான் இடையில்
ஓயாத கவலையிலே மிதக்கிறான் - ஒருநாள்
உடலை மட்டும் போட்டு எங்கோ பறக்குறான் - ஒருநாள்
உடலை மட்டும் போட்டு எங்கோ பறக்குறான் - அப்படி

எறந்தவன சொமந்தவனும் எறந்திட்டான் அதை
இருப்பனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்
இளமையிலே சில நாள் முதுமையிலே சில நாள்
இளமையிலே சில நாள் முதுமையிலே சில நாள்
இன்பத்திலே சில நாள் துன்பத்திலே சில நாள்
அன்னையும் மனைவியும் அருமைப் பிள்ளையும்
அன்னையும் மனைவியும் அருமைப் பிள்ளையும்
கண்ணீர் சிந்திடவே கடைசி வழி ஒருநாள்
கடைசி வழி ஒருநாள் அப்படி

எறந்தவன சொமந்தவனும் எறந்திட்டான் - அதை
இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்

No comments:

Post a Comment