Friday, December 7, 2012

நிறைவேறாத கனவு

விருந்துகளில்
அதிகமாக அவரைப் பார்க்க முடியாது. தேவையில்லாமல் பத்திரிகைப் பேட்டிகள் கொடுப்பதில்லை. ஆனாலும் பத்திரிகைகளில் பரபரப்பாக அடிபடுபவர் ஏறத்தாழ 50 படங்களில் நடித்துவிட்டார். அதில் பாதிக்கு மேற்பட்ட படங்கள் வெற்றிப் படங்கள். அல்லது பாராட்டையும் விருதுகளையும் அள்ளிக் குவித்த படங்கள். ‘அய்யா’ படத்தின் வெற்றியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ராணி முகர்ஜி மனம் திறக்கிறார்.
* வலைத் தளங்களில் இல்லாமல் இருப்பது பற்றி :-
‘நான் எப்போதும் அடக்கி வாசிப்பதையே விரும்புகிறவள். எனக்கு விருந்துகளில் கலந்து கொள்வது இணையத் தளத்தில் உறவாடுவது வலைத்தளத்தின் மூலம் கருத்துப் பரிமாறிக் கொள்வது என்பதில் எல்லாம் ஈர்ப்பு இல்லை. ஏன் இல்லை என்றால் இல்லை. அவ்வளவுதான். ஏதாவது முக்கியமான செய்தி சொல்ல வேண்டும் படம் வெளி வருவதற்கு முன்னால் அதுபற்றிக் கருத்துத் தெரிவிக்க வேண்டும் என்றால் மட்டும்தான் பேட்டி கொடுப்பது வழக்கம்.
எனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி எதுவும் பேச நான் விரும்புவதில்லை. நான் எனது ரசிகர்களையும் வாசகர்களையும் திரைப்படங்களில் எனது நடிப்பின் மூலமாக மட்டுமே சந்திப்பதை விரும்புகிறேன். மற்றவர்களைப் பற்றி நான் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை.
* அய்யா படத்தைப் பற்றி
நான் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் எனது முழு உழைப்பையும் கொடுத்து அதன் வெற்றிக்குப் பாடுபடுகிறேன். நான் விரும்பி நடிக்கிறேன், முழு மனதுடன் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். ஒவ்வொரு திரைப்படமும் ரசிகர்களின் மனதைக் கவர வேண்டும். விமர்சகர்களின் பாராட்டைப் பெற வேண்டும் என்கிற எதிர்பார்ப்புடன்தான் எடுக்கப்படுகிறது. வெற்றி தோல்வி என்பது நமது கையில் இல்லை. யாராலும் எந்தத் திரைக்கதையானாலும் இது நிச்சயம் வெற்றி பெறும் என்று சொல்லிவிட முடியாது.
* ‘அய்யா’ திரைப்பட மேக்கப்புக்காக 10 இலட்ச ரூபாய செலவிட்டது உண்மையா?
பொய்யைக் கூறிவிட்டு இது உண்மையா என்று கேட்டால் எப்படி? மேக்கப்புக்கு 10 இலட்சம் செலவானது என்று சொல்பவனை விடுங்கள், கேட்பவர்களுக்கு புத்தி எங்கே போயிற்று?
* பிரித்விராஜுடன் நடித்த அனுபவம்
பிரித்விராஜ் ஒரு அற்புதமான நடிகர். நடிப்பு அவரது ரத்தத்திலேயே இருக்கிறது என்பது அவர் நடிப்பதிலிருந்தே தெரிகிறது. அவர் நடிக்க வருவதற்கு முன்பே நான் நடித்த ‘குச் குச் ஹோத்தா ஹை’ திரைப்படத்தைப் பார்த்து எனது ரசிகராகி விட்டதாகக் கூறினார் மகிழ்ச்சியாக இருந்தது.
‘அய்யா’ திரைப்படத்தைப் பொறுத்தவரை நான் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். பிரித்விராஜிடமிருந்து நடிப்புக் கலை பற்றிக் கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது.
* பிரித்விராஜுக்கு நீங்கள் சிபாரிசு செய்வது பற்றி
நான் பிரித்விராஜுக்கு சிபாரிசு செய்கிறேனா? எனது சிபாரிசை ஏற்றுக்கொண்டு அவருக்கு வாய்ப்புத் தரப் போகிறார்களா? அப்படித் தருவதாக இருந்தால் நான் சிபாரிசு செய்யத் தயார் என்னிடம் அவரைப் பற்றிக் கேட்டால் நிச்சயமாக ஒரு திறமையான நடிகர் என்று பரிந்துரைப்பதில் எனக்குத் தயக்கமே இருக்காது.
நம்முடன் நடிக்கும் ஒருவரது நடிப்பு நன்றாக இருந்தால் அதைப் பற்றி பேசத்தானே செய்வோம்? யாருக்குத் தலையில் என்ன எழுதி இருக்கிறதோ அதுதான் நடக்கும். கிடைக்கும். யார் எந்த இடத்தை அடைவார்கள் என்பதை யாரும் தீர்மானித்துவிட முடியாது.
* ஆதித்ய சோப்ராவைத் திருமணம் செய்து கொண்டீர்களாமே?
என்னுடைய திருமணம் பத்திரிகையாளர்களுக்கும் வம்பு பேசுபவர்களுக்கும் வேடிக்கையாகத் தெரிகிறது. ஆளுக்கு ஆள் இஷ்டத்திற்குக் கதை கட்டுகிறார்கள். என்ன செய்வது சினிமா போன்ற ஒரு தொழிலில் ஈடுபட்டால் நம்மைப் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதவும் பேசவும் மற்றவர்களுக்கு உரிமை வந்துவிடுகிறது. இது தவிர்க்க முடியாதது.
என்னைப் பொறுத்தவரை திருமணம் என்பது
வேடிக்கைக்காக ஏற்பட்டது அல்ல. மிகவும் கவனமாகவும் தீர யோசித்தும் முடிவு செய்ய வேண்டிய ஒன்று.
உலகத்திற்கு வரும் எல்லா உயிர்களும் ஜோடி ஜோடியாகத்தான் வருவதாகச் சொல்வார்கள். எனக்காக எங்கேயோ ஒருவர் இல்லாமலா இருப்பார்?
அவர் வரும்வரை நான் தனிமையை ரசிக்கிறேன்.
மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்பட நான் தயாராக இல்லை.
நிறைவேறாத கனவு.

ஒத்தவீடு

சாமி என்றால் காப்பாற்றத்தான் செய்யும், தண்டிக்காது. சாமி தண்டிப்பதாகச் சொல்லி ஒருவருக்கு துன்பம் ஏற்பட்டால் அது ஆசாமி தரும் தண்டனையாகத்தான் இருக்கும் என்ற கருத்தை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது “ஒத்தவீடு”
“திகில் கதைக்களத்தோடு, மூட நம்பிக்கையால் ஏற்படும் விளைவுகளையும், குடும்ப உறவுகளுக்குள் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளையும் நாகரிகமாகச் சொல்லியிருக்கிறேன்” என்கிறார் படத்தின் இயக்குநரான பாலு மலர்வண்ணன்.
இவர் யாரிடமும் உதவி இயக்குநராகப் பணிபுரிந்ததில்லை. பத்திரிகையாளராகவும், மக்கள் தொடர்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். இந்த அனுபவங்களைக் கொண்டே தன் முதல் படத்தை இயக்குகிறார் பாலு மலர் வண்ணன்.
படத்தில் திலீப்குமார் ஜானவியின் காதல் எதார்த்தமாக இருக்குமாம். ஹீரோ திலீப்குமாரின் அண்ணன் தேவ்குமார் படத்தைத் தயாரிக்கிறார். இசையமைப்பாளர் வி. தஷி பல்வேறு படங்களுக்கு இசையமைத்தும், இரண்டாயிரம் படங்களுக்கு மேல் இசைக்குறிப்புகள் எழுதியும் உள்ளார்.
ஒளிப்பதிவாளர் ஸ்ரீரஞ்சன்ராவ் கே. பாலசந்தர் தயாரித்த படங்களில் உதவி ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்துள்ளார்.
“சாமியாடி கேரக்டரில் வரும் எம்.எஸ்.பாஸ்கரின் காமெடிக்கும், வெள்ளந்தித் தாயாக வரும் வடிவுக்கரசியின் நடிப்பு சென்டிமென்டுக்கும் கியாரண்டி என்கிறார் பாலு மலர்வண்ணன். எழுத்தாளர் கெளதம் நீலாம்பரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

காதலனைப் பிரிந்த

எமி ஜhக்ஸன்

தமிழில் ஆர்யா ஜொடியாக மதராசி பட்டினம் படத்தில் அறிமுகமானவர் லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்ஸன். இதையடுத்து விக்ரம் ஜோடியாக தாண்டவம் படத்தில் நடித்தார். இதற்கிடையில் தமிழில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா படத்தை கெளதம் மேனன் இந்தியில் ‘ஏக் திவானா தா’ என்ற பெயரில் இயங்கினார். இதில் பிரதீக் ஹீரோவாக நடித்தார். ஹீரோயினாக எமி நடித்தார். அப்போது பிரதீக், எமி இருவருக்கிடையே நட்பு மலர்ந்தது.
இதையடுத்து இருவரும் பல்வேறு இடங்களில் ஜோடியாக சுற்றினர். நெருக்கமான காதலர்களான நிலையில் இருவரும் அதன் நினைவாக தங்கள் பெயர்களை பச்சை குத்திக் கொள்ள முடிவு செய்தனர். பிரதீக் லண்டன் சென்று எமி ஜாக்ஸன் பெயரை பச்சை குத்திக் கொண்டார். அங்கு வசிக்கும் எமியின் குடும்பத்தாரையும் சந்தித்துப் பேசினார். இவர்களின் காதலை எமியின் பெற்றோர் ஏற்றுக் கொண்டனர். மும்பையில் உள்ள பிரபலமான பச்சை குத்தும் ஷொப்பிற்கு சென்று தனது கையில் பிரதீக் பெயரை பச்சைக் குத்திக்கொண்டார் எமி.
காதல் மலர்ந்து ஒரு வருடம் மட்டுமே கடந்த நிலையில், இருவருக்குள்ளும் திடீரென்று மனக்கசப்பு ஏற்பட்டது. இதையடுத்து பிரதீக்கை பிரிந்து லண்டன் புறப்பட்டுச் சென்றார் எமி. அதாவது, பிரிவை தாங்க முடியாமல் வருத்தம் அடைந்து வீட்டிலேயே முடங்கினார் பிரதீக். இனி எமியிடம் நெருக்கமாவதற்கு வாய்ப்பில்லை என்று தெரிந்ததும். மனதை தேற்றிக்கொண்டு வெளியில் வர ஆரம்பித்திருக்கிறார். இதையடுத்து புது நங்கைகளிடம் அவர் நட்பு தேடத் தொடங்கி இருக்கிறார் என பொலிவூட் வட்டாரங்கள் தெரிவித்தன.

கல்யாணமாகிவிட்டால் ஹீரோயினாக நடிக்கக் கூடாதா?

கல்யாணமாகிவிட்டால் ஹீரோயினாக நடிக்கக் கூடாதா என்றார் சினேகா கிஷோர் சினேகா நடிக்கும் படம் ‘ஹரிதாஸ்’. ஜி. என். ஆர். குமாரவேலன் எழுதி இயக்குகிறார். விஜய் ஆண்டனி இசை அமைக்கிறார். வி. ராமதாஸ் தயாரிக்கிறார். இப்படத்தில் நடிப்பதுபற்றி சினேகா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது, திருமணத்துக்கு முன்பே ஹரிதாஸ் பட கதையை என்னிடம் சொல்ல வந்தார் இயக்குனர் குமாரவேலன். அப்போதே அவரிடம், சீக்கிரமே எனக்கு திருமணம் நடக்க உள்ளது. உங்கள் பட ரிலீசுக்கு முன்பே திருமணம் ஆகிவிடும் திருமணமான நடிகை ஹீரோயினாக நடிக்கக் கூடாது என்ற நிலைதான் ஹோலிவூட்டில் இருக்கிறது.
அதனால் இப்படத்தில் நான் நடிப்பதுபற்றி நீங்கள்தான் முடிவு செய்துகொள்ள வேண்டும் என்று அவரிடம் கூறினேன். அதைக்கேட்ட அவர், அதுபோன்ற சென்டிமெண்டில் எனக்கு நம்பிக்கை இல்லை. இந்த கதாபாத்திரத்துக்கு நீங்கள்தான் பொருத்தமாக இருப்பீர்கள் என்று சொன்னார். பிறகுதான் நடிக்க ஒப்புக்கொண்டேன். திருமணத்துக்கு பிறகு ஹீரோயினாக நடிக்கக் கூடாது என்று யார் சொன்ன விதியோ தெரியவில்லை. இப்பட ஹீரோ கிஷோர் தன்னைப்பற்றி குறிப்பிடும்போது; ‘பேட் ஆக்டர் என்று சொல்லிக்கொண்டார். அதை ஏற்க முடியவில்லை. தனது கதாபாத்திரத்தை உணர்ந்து இதில் நன்றாக நடித்திருக்கிறார்.
தன்னை பேட் ஆக்டர் என்று அவர் குறைத்து மதிப்பிடக்கூடாது. பிருத்விராஜ்தாஸ் என்ற சிறுவனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறான்.

பூஜா ரகசிய திருமணம்

உள்ளம் கேட்குமே படத்தில் அறிமுகமானவர் பூஜா. அதன் பிறகு பல படங்களில் நடித்தாலும் பாலாவின் நான் கடவுள்அவருக்கு தேசிய விருது பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்க வைத்தது.
மாநில விருது கிடைத்தது. அதன் பிறகு பூஜா எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. அவர் எங்கிருக்கிறார் என்பதேதெரியாததால் வாய்ப்பு கொடுக்க நினைப்பவர்களும் அவரை நெருங்க முடியவில்லை. கடைசியாக கிடைத்த தகவல் படி அவர் பெங்களூரில் ஒரு சொப்ட்வேர் கொம்பனியில் உயர் அதிகாரியாக இருப்பதாகவும் அந்த நிறுவனத்தின் அதிபர் மகனை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டதாகவும் சொல்கிறார்கள்.
பூஜா இலங்கையை சேர்ந்தவர். அம்மா சிங்களவர், அப்பா தமிழர். தற்போது அவர் சிங்களப் படத்தில் நடித்து வருவதாகவும், சிங்களவர் ஒருவரைதிருமணம் செய்துகொண்டு இலங்கையிலேயே செட்டிலாகிவிட்டதாகவும் சொல்கிறார்கள். இதில் எது உண்மை. எது வதந்தி என்பதை பூஜா சொன்னால்தான் தெரியும்.



No comments:

Post a Comment