Wednesday, December 26, 2012

தயாரிப்பாளரானார் செல்வபாரதி

‘நினைத்தேன் வந்தாய்’, ‘பிரியமானவளே’, ‘வசீகரா’ ஆகிய படங்களை இயக்கிய செல்வபாரதி இப்போது தயாரிப்பாளராகி உள்ளார். சென் மூவிஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி ‘காதலைத்தவிர வேறொன்றுமில்லை’ என்ற படத்தை தயாரித்து இயக்குகிறார். யுவன், சரண்யா, மோகன் நடிக்கிறார்கள். ஸ்ரீகாந்த் தேவா இசை, பூபதி ஒளிப்பதிவு.
படம் பற்றி செல்வபாரதி கூறியதாவது, காதல் வலியைத் தரக்கூடியது மட்டுமல்ல, வழியையும் காட்டக்கூடியது என்ற கருத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை. பள்ளி காதல், கல்லூரி காதல் நிறைய பார்த்து விட்டோம். இது டியூசன் காதல். டியூசன் டீச்சராக நடித்திருக்கிறார் சரண்யா மோகன். அவருக்கும் யுவனுக்கும் வருவது காதலா, நட்பா என்று புரிந்து கொள்ள முடியாத உணர்வுக்கு எளிய தீர்வு சொல்கிறது. படம் சிறுவர்களைக் கொண்டு உருவாக்கி இருக்கிறேன். டியூசனில் படிக்கும் மாணவர்களாக எனது மகன்கள் ராகுல், ரோஹித் நடித்துள்ளனர்.

No comments:

Post a Comment