
பிரபல பொலிவுட் நடிகை, வித்யா பாலன் (34), மறைந்த நடிகை, சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட “தி டர்ட்டி பிக்சர் என்ற இந்திப் படத்தில், நடித்து பிரபலமானவர். இந்தப் படத்தில் நடித்ததற்காக வித்யாவுக்கு தேசிய விருதும் கிடைத்தது. இதற்கு முன் ‘தம்மாரே தம், ககானி உள்ளிட்ட படங்களிலும், இவர் நடித்துள்ளார்.
இவர் “யு டிவி நிறுவன தலைவர் சித்தார்த் ராயை காதலித்தார். இருவருக்கும் திருமணம் முடிக்க பெற்றோர் முடிவு செய்தனர். மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள ஒரு பங்களாவில், இவர்களுக்கு திருமணம் நடந்தது. வித்யா பாலன், பாலக்காட்டு தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவர். சித்தார்த் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். இதனால் இவர்களது திருமணம், தென் மற்றும் வட மாநில கலாசார முறைப்படி நடந்தது. திருமணச் சடங்கின் போது வித்யா, கடுகு மஞ்சள் நிற பட்டுப் புடவையும், இளம் சிவப்பு நிற ஜாக்கெட்டும் அணிந்திருந்தார்.
சித்தார்த், பஞ்சாப் கலாசாரப்படி, மஞ்சள் நிற குர்தாவும் இளம் சிவப்பு நிற தலைப்பாகையும் அணிந்திருந்தார். வித்யாவின் கழுத்தில் தமிழ் பாரம்பரிய முறைப்படி சித்தார்த் ராய், தாலி கட்டினார், தொடர்ந்து, வித்யாவின் கால் விரல்களில் மெட்டி அணிவித்தார். அப்போது, வித்யா பாலன், உணர்ச்சிவசப்பட்டு, ஆனந்த கண்ணீர் வடித்தார். அம்மி மிதித்து, அருந்ததி பார்க்கும் சடங்குகளும் நடந்தன. பஞ்சாப் முறைப்படியும் திருமணச் சடங்குகள் நடந்ததால் சடங்குகள் முடிவடைய ஒரு மணி நேரத்துக்கும் மேலானது.
இந்தத் திருமணத்துக்கு வித்யா மற்றும் சித்தார்த்தின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். வெளி நபர்கள் யாரும், அனுமதிக்கப்படவில்லை. திருமணம் நடந்த பங்களாவைச் சுற்றி தனியார் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சென்னை, கொச்சி உள்ளிட்ட நகர்களில் நடக்க உள்ளது.
சமந்தாவுக்கு ´உபத்திரவம்
சமந்தா என்றாலே க்யூட்டான நடிகை என்பார்கள். அவரை அப்படி ரசிப்பது கொலிவுட்
சினிமாவினர்தான். ஆனால் ஆந்திராவைச் சேர்ந்தவர்களோ சைவ நடிகையான அவரையும் அசைவ நடிகை
கண்ணோட்டத்திலேயே பார்க்கிறார்களாம். குறிப்பாக சில டைரக்டர்கள் அவரை டூ - பீஸ்
நடிகையாக்கும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் சமந்தா மீது ஈர்ப்புக் கொண்ட சில நரைமுடி ஹீரோக்கள், சமீபகாலமாக தங்களுடன் டூயட் பாடுவதற்கு சமந்தாவுக்கு அழைப்பு விடுத்து வருகிறார்களாம். அதோடு கேட்கிற சம்பளத்தை தருவதாகவும் ஆசை காட்டுகிறார்களாம் என்றாலும், முதிர்ச்சியான நடிகர்களுடன் நடித்தால் தனது இமேஜ் போய்விடும் என்று தொடர்ந்து தட்டிக்கழித்து வருகிறாராம் நடிகை. இப்படி தொடர்ந்து சமந்தா தங்களுக்கு டேக்கா கொடுப்பதால் சில நடிகர்கள் நேரடியாக அவருக்கு போன் போட்டும் டார்ச்சர் கொடுக்கிறார்களாம். இதன் காரணமாக அடுத்து தெலுங்கு படங்களில் நடிப்பதை குறைத்து விட்டு தமிழில் கூடுதல் கவனம் செலுத்த முடிவெடுத்திருக்கிறாராம் சமந்தா.
ரகசிய திருமணமா? லட்சுமிராய் மறுப்பு

லட்சுமிராய்க்கு ரகசியமாக திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியாயின. அதனை அவர் மறுத்துள்ளார். இதுபற்றி லட்சுமிராய் அளித்துள்ள பேட்டியில் எங்கள் வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடந்து வருவது உண்மைதான். திருமணம் எனக்கில்லை. என் அக்கா அஸ்வினிராய்க்கு. அடுத்து எனக்குத்தான் திருமணம். ஆனால் அது இப்போது இல்லை. இப்போதுதான் சினிமாவில் இரண்டாவது ரவுண்டை ஆரம்பித்திருக்கிறேன். இன்னும் தேசிய விருது வரைக்கும் போகவேண்டும். பிறகுதான் திருமணம். எப்போது திருமணம் செய்தாலும், அது காதல் திருமணம்தான். தற்போத யாரையும் காதலிக்கவில்லை. எனது திருமணம் ரகசியமாக நடக்காது, என்று கூறியுள்ளார்.
பாரதிராஜா ரஜினி, கமலுக்கு அழைப்பு

அந்தப் படத்தில் கமல் சப்பானி கெரக்டரிலும், ரஜினி பரட்டை வேடத்தில் வில்லனாகவும், ஸ்ரீதேவி மயிலு கேரக்டரிலும் நடித்தனர். இப்படம் வெற்றிகரமாக ஓடியது. தற்போது பாரதிராஜா நீண்ட இடைவெளிக்குப் பின் அன்னக்கொடியும் கொடி வீரனும் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடியும் தறுவாயில் உள்ளது. இதன் பாடல் வெளியீட்டு விழாவைத்தான் மதுரையில் நடத்த பாரதிராஜா ஏற்பாடு செய்துள்ளார்.
இதற்காக மூவரிடமும் பாரதிராஜா பேசி வருகிறார். அவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் தொடக்க விழா தேனி அல்லி நகரத்தில் அமர்க்களமாக நடந்தது நினைவிருக்கலாம். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார்.
ரஜினி கெட்டப்பில் சிங்கமுத்து

அதில் ரஜினி போன்று நடிப்பவர் சிங்கமுத்துவாம். அதாவது, எந்த நேரமும் வீட்டில் தூங்கிக்கொண்டிருப்பாராம் சிங்க முத்து. அவரை, அவ்வூர் மக்கள், அரசியலுக்கு வாங்க என்று அழைப்பார்களாம். அதற்கு அரசியலுக்கு வந்தால் நிறைய செலவாகுமே என்று அவர் சொல்வாராம். அதான் நிறைய சொத்தெல்லாம் இருக்குல்ல விற்று செலவு பண்ணுங்க என்பார்களாம். அதைக்கேட்டு, ஒருவேளை அரசியலில் குதித்து தோற்றுவிட்டால், மொத்த பணமும் போய் விடுமே. அப்படியொரு நிலைமை ஏற்பட்டால் நான் என்ன பண்றது என்று மக்களைப் பார்த்து கேட்பாராம் சிங்கமுத்து.
அதற்கு இப்ப திண்ணையில் தூங்குறத தெருவோரம் போய் தூங்க வேண்டியதான் என்று கொமெடியாக சொல்வார்களாம். ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்ற ரஜினி ரசிகர்களின் ஆசையை சொன்னாலும், அதை கொமெடிக்காக இப்படி ஜாலி பண்ணியிருக்கிறாராம் இயக்குனர்.
2 1/4 மணி நேர படத்தை 2 மணிநேரத்தில் எடுத்து சாதனை
,ரண்டே கால் மணி நேரம் ஓடும் படத்தை இரண்டு மணி நேரத்தில் எடுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர் அகடம் படக்குழுவினர். அதுமட்டுமல்ல, முழுப் படத்தையும் ஒரே ஷட்டில் எடுத்துள்ளார்களாம். இந்த விவரங்களை கின்னஸ் அமைப்புக்கு எழுதி, அங்கிருந்து அங்கீகாரக் கடிதமும் பெற்றுள்ளனர் அகடம் குழுவினர். தமிழகத்தில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் புதுமுகம் சீனி அய்யர், பாஸ்கர், கலை, தமிழ் உட்பட முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ளனர். நெளஷத் ஒளிப்பதிவு செய்ய, ஷ்யாம் பெஞ்சமின் இசையமைத்துள்ளார். இஸட் முகமது இசாக் கதை திரைக்கதை வசனம் எழுதி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இவருக்கு இதுதான் முதல்படம்.ஸ்க்ரிப்ட், நடிகர்கள், ஷ¥ட்டிங் ஸ்பாட் என அனைத்தையும் பக்காவாக ஏற்பாடு செய்தது கொண்ட இசாக், இரவில் இரண்டு மணிநேரத்தில் மொத்தப் படத்தையும் எடுத்து முடித்துவிட்டாராம்! இந்தப் படம் விரைவில் இந்தியிலும் தயாராகிறது.
8 நிமிட நடனத்துக்கு ரூ 1 கோடி 40 இலட்சம்

ராய்ப்பூர் நகரில் பிரபல இந்தி நடிகர்கள், நடிகைகள் பங்கேற்ற பிரமாண்ட நட்சத்திர இரவு நடத்தப்பட்டது. இதற்காகவே மும்பையில் இருந்து பல லட்சம் ரூபாய் செலவு செய்து 245 நடிகர், நடிகைகள், நடன கலைஞர்களை ராய்ப்பூருக்கு அழைத்து சென்றிருந்தனர்.
இந்த விழா கடும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது. மாநில அரசின் பணம் தேவை இல்லாமல் செலவழிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து கலைநிகழ்ச்சிக்கு செய்யப்பட்ட செலவு விவரங்களை சத்தீஷ்கர் மாநில சுற்றுலா துறை மந்திரி பிரிஜ்மோகன் அகர்வால் வெளியிட்டுள்ளார்.
ஒரு வாரம் நடந்த விழாவுக்கு மொத்தம் 5 கோடியே 21 இலட்சத்து 22 ஆயிரத்து 500 ரூபாய் கலைஞர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் நடிகை கரீனா கபூருக்கு மட்டும் ஒரு கோடியே 40 இலட்சம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது.
![]()
ஊர்வசி, முன்னாள் கணவர்
|
|
||
![]()
கமல், சரிகா, வாணி கணபதி
|
![]()
சிம்ரன், கணவர்
|
||
![]()
விஜய், சங்கீதா
|
![]()
குஷ்பூ, சுந்தர்
|
||
![]() |
No comments:
Post a Comment