சௌகார்
ஜhனகி
பெயர் சொன்னால் போதும் அறிமுகமே தேவையில்லாத, நடிப்பாற்றல் மிக்க அற்புதமான நடிகை
செளகார் ஜானகி. தற்போது பெங்களூரில் வசித்து வரும் இவர் சமீபத்தில் நடந்த சினிமா
நூற்றாண்டு விழாவில் பங்குகொள்வதற்காகவே சென்னை வந்திருந்தார். “இந்திய சினிமா பேசத்
தொடங்கிய 1931ஆம் ஆண்டுதான் நான் பிறந்தேன்.

அவரது ஆலோசனைப்படியே லண்டன் சென்று காகிதத் தயாரிப்பு தொடர்பாக மூன்றாண்டு தொழில் படிப்பைப் படித்துவிட்டு வந்தார் என் தந்தை. இதன் காரணமாக கைகளால் காகிதம் தயாரிக்கும் முறையிலும் யந்திரம் மூலம் காகிதம் தயாரிக்கும் தொழில் நுட்பத்திலும் நிபுணத்துவம் பெற்றவராகத் திகழ்ந்தார். எனக்கு ஒரு அண்ணன், இரண்டு தங்கைகள், ஒரு தம்பி ஏராளமான படங்களில் நடித்திருக்கும் என தங்கை கிருஷ்ண குமாரியை எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.
மற்றொரு சகோதரி தேவகி காலமாகிவிட்டார். தம்பி பாஸ்கர் குளிர்சாதன தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தில் பொறுப்பான பதவியில் இருக்கிறார். எங்கள் எல்லோரையும் ஒழுக்கமான குழந்தைகளாகவும், கண்ணியமான பழக்க வழக்கங்கள் உடையவர்களாகவும் எங்கள் தந்தை வளர்த்தார். திரைப்படத் துறையினர் என்னுடைய நேரம் தவறாமை குறித்து பாராட்டிப் பேசுவார்கள். இதற்குக் காரணம் இது போன்ற நல்ல குணங்களை சாப்பாட்டுடன் சேர்த்து எங்களுக்கு ஊட்டி வளர்த்தது என் தந்தைதான். மேலும் இன்று நான் சிறப்பாக ஆங்கிலம் பேசுவதற்குக் காணமும் என் தந்தைதான்.
தினமும் காலை ஆங்கிலச் செய்தித்தாள்களை எடுத்து வைத்துக் கொண்டு குறைந்த பட்சம் அரை மணி நேரமாவது படித்து, புதிது புதிதாக ஆங்கிலச் சொற்களை அன்றாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற பழக்கத்தை எங்களுக்கு அவர் ஏற்படுத்தினார். என் தந்தை முதலில் ஆந்திராவிலுள்ள தாயாராம் சன்ஸ் என்ற பேப்பர் மில்லில் பணியாற்றினார்.
பின்னர் பெங்காலில் உள்ள ஷட்டகா பேபர் மில்லுக்குச் சொன்றார். இப்படி பல மாநிலங்களுக்கும் அவர் பணி மாறிய காரணத்தால் என்னால் பள்ளிப்படிப்பை இரண்டாவது பாரத்துக்கு மேல் தொடர முடியவில்லை. சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் நாங்கள் சிறிது காலம் வசித்த போது, சாரதா வித்தியாலயா பள்ளியில் நான் படித்தேன்.
அப்போது சிறு குழந்தைகளுக்காக நடத்தப்படும் ரேடியோ நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் செல்வேன். அப்போது பல ரேடியோ நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற பிறகு, எனது குரல் நன்றாக இருப்பதாகக் கூறி பெரியார்கள் பங்கு பெறும் நிகழ்ச்சிகளிலும் எனக்கு வாய்ப்பளிக்க ஆரம்பித்தனர். எனக்கு அப்போது ‘ஏ கிரேட் ஆர்டிஸ்ட்’ என்ற அந்தஸ்தையும் அளித்தனர். பள்ளியில் படித்த காலத்தில் எனக்கு கணக்கு கணக்குப் பாடம் சுத்தமாக வரவில்லை. கணக்கு என்றாலே அலர்ஜியாக இருந்தது.
எனவே என் தந்தையிடம் மன்றாடி கணக்குப் பாடம் இல்லாத வகையில் வேறு பள்ளியில் என்னை மாற்றிவிடச் சொல்லிக் கேட்டுக் கொண்டேன். எனவே என் தந்தை சமஸ்கிருதம், தெலுங்கு ஆகியவற்றை முக்கிய பாடங்களாகக் கொண்ட பாடத் திட்டத்தின் கீழ் ஆந்திரா மகிள சபா பள்ளியில் சேர்த்துவிட்டார். ஆந்திரா மகிள சபா பள்ளியில் படித்த போது என்னால் ஒரு மறக்க முடியாத சம்பவம் நடந்தது. காந்தி அப்போது சென்னை வந்து மூன்று நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இந்தி பிரசார சபாவில்தான் தங்கியிருந்தார். அப்போது காந்திஜிக்கு மூன்று நாட்களும் உடனிருந்து பணிவிடை செய்ய ஆந்திரா மகிள சபா நிர்வாகி துர்காபாய் தேஷ்முக் என்னை தேர்வு செய்து அனுப்பினார். காந்தி சென்னையில் இருந்த மூன்று நாள்களும் அவருக்குப் பணிவிடைகள் செய்ததை என் வாழ்க்கையில் கிடைத்த பாக்கியமாகக் கருதுகிறேன். இந்தப் பள்ளியில் நடக்கும் கலை விழாவின் போது நான் நாடகங்களில் தவறாமல் பங்கு கொள்வேன். ஒரு முறை துர்க்காபாய் தேஷ்முக் என் தந்தையிடம் உங்கள் பெண்ணுக்கு படிப்பைவிட கலைகளில் ஈடுபாடு அதிகம் இருக்கிறது.
நாடகங்களில் சிறப்பாக நடிக்கிறாள்’ என்று பாராட்டிச் சொன்னார். ஒரு முறை நான் பங்கு பெற்ற ரேடியோ நாடகம் ஒன்றைக் கேட்ட தயாரிப்பாளர் பி. என். ரெட்டி ரேடியோ ஸ்டேஷனைத் தொடர்பு கொண்டு என்னைப் பற்றி விசாரித்திருக்கிறார். பிரபல தயாரிப்பாளர் நாகிரெட்டியின் மூத்த சகோதரர் இவர் பின்னர் ரேடியோ ஸ்டேஷனுக்கே வந்து அங்குள்ள அதிகாரிகள் மூலம் என்னைப் பார்த்தார்.
‘உன் குரலைப் போலவே நீயும் அழகாகத்தான் இருக்கிறாய். நான் எடுக்கும் ‘குண சுந்தரி கதா’ என்ற படத்தில் நீ நடிக்கின்றாயா? என்று கேட்டார் அவர் இப்படிக் கேட்டதும் நான் அடைந்த ஆனந்தத்துக்கு அளவேயில்லை. சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை என் ஆழ மனதில் இருந்திருக்க வேண்டும். அதனால்தான் எனக்கு அப்படி ஒரு சந்தோஷம் ஏற்பட்டிருக்கிறது. “வீட்டில் கேட்டுவிட்டுச் சொல்கிறேன்’ என்று சொல்லி விட்டேன். எங்கள் வீட்டைப் பொறுத்தவரை எனது அண்ணனின் ஆதிக்கம்தான் அதிகம். பல முக்கிய முடிவுகளை அண்ணன்தான் எடுப்பார்.
சினிமாவில் நடிக்க வந்த வாய்ப்பைப் பற்றி வீட்டில் சொன்னதுதான் தாமதம் அவ்வளவுதான்... பெல்ட்டை எடுத்து என்னை அடிக்க ஆரம்பித்துவிட்டார் அண்ணன். வீடே இரண்டுபட்டுப் போனது. சினிமாவில் நடிப்பது குறித்து பேச்சு வந்ததுதான் தாமதம், உடனடியாக எனக்கும் திருமணம் செய்து வைத்துவிடுவது என்ற முடிவுக்கு வீட்டில் உள்ளவர்கள் வந்துவிட்டார்கள்.
அவசரத்தில் எனக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தன. காக்கிநாமாவிலுள்ள ரேடியோ நிலையத்தில் பணியாற்றும் சீனிவாசராவ் என்பவரை முடிவு செய்துவிட்டனர். என் அப்பாவுக்கு இவரை மிகவும் பிடிக்கக் காரணம் நன்கு படித்த நல்ல வேளையில் இருந்த இவருக்கு சிகரட், மது போன்ற எந்த கெட்ட பழக்கமும் இல்லை. பார்ப்பதற்கும் மிகவும் அழகாக இருப்பார். 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி இந்தியாவுக்கு சுதந்திரம் வந்தது. அதே ஆண்டு நவம்பர் மாதம் 5ம் திகதி என் சுதந்திரம் பரிபோனது. ஆம் அன்றுதான் என் திருமணம் நடைபெற்றது.
திருமணத்துக்குப் பிறகு விஜயவாடாவில் சத்திய நாராயணபுரம் என்ற பகுதியில் ஒரு சிறிய வீட்டில் குடி புகுந்தோம். அப்போது என் தந்தை அஸ்ஸாம் மாநிலத்தின் ஷில்லங்கல் உள்ள ஒரு காகித ஆலையில் பணியாற்றி வந்தார். என் கணவருக்கு தான் பார்க்கும் வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்கு மாற வேண்டும் என்ற எண்ணம் என்ன காரணத்தாலோ ஏற்பட்டுவிட்டது.
உடனே என் தந்தையுடன் தொடர்பு கொண்டு அஸ்ஸாமிலேயே தனக்கு ஒரு ‘ரி(ளிlழி ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்க, அவரும் சரி வாருங்கள் என்று சொல்லிவிட்டார். உடனே என் கணவரும் அப்போது பார்த்து வந்த வேலையை ராஜினாமாச் செய்துவிட்டு அஸ்ஸாம் புறப்படத் தயாராகி விட்டார். இவையெல்லாம் எனக்கு பின்னர்தான் தெரிய வந்தது. என்னைக் கலந்தாலோசிக்காமலேயே அவர் எல்லாவற்றையும் செய்து விட்டார். வேறு ஒரு நல்ல வேலை உறுதியாகாமல் தற்போது பார்த்து வந்த வேலையை விட்டது தவறு என்பதையும் பின்னர் அவர் உணர்ந்தார். கணவரும் நானும் ஷில்லாங் போய் இறங்கும் போது எனக்கு நல்ல காய்ச்சல்.
ஆஸ்பத்திரிக்குச் சென்றால் நான் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்தார் டொக்டர். ஷில்லாங்கில் என் கணவர் வேலை தேட ஆரம்பித்தார். அப்போது மெட்ரிக்குலேஷன் படித்து வந்த என் தங்கையின் புத்தகங்களை நானும் வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். பகலில் தங்கை படிக்கும் அதே புத்தகங்களை இரவில் நான் படிப்பேன். இப்படியே படித்து தனியாக மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதினேன்.
No comments:
Post a Comment