Friday, November 1, 2013

உலக சினிமா

* இந்திப்பட உலகின் புகழ்பெற்ற இயக்குனர் வி. சாந்தாராம். இவர் தனது பிரபாத் ஃபிலிம் கம்பெனியில் தயாரித்த படம் - ‘சீதா கல்யாணம்’, வெளிவந்த ஆண்டு 1933. மொழி தமிழ்.
* 1949 ஆம் ஆண்டு ‘மனதேசம்’ என்ற படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்திருந்தாலும், 1950 ஆம் ஆண்டு கதாநாயகனாக ‘பாதாள பைரவி’ மூலம் அறிமுகமானவர் ‘என்.டி.ராமாராவ்’.
* 1938 ஆம் ஆண்டு ராஜா சந்திரசேகர் இயக்கத்தில் உருவான ‘தக்ஷயாகம்’ என்ற படத்தில் எம்.ஜி.ஆர். ஏற்று நடித்த வேடம் என்ன தெரியுமா? ‘மகா விஷ்ணு’.
* தான் விரும்பியவனை திருமணம் செய்து கொள்ள பெண்ணுக்குள்ள சுதந்திரத்தை உரிமையை முழக்கிய தமிழகத்தின் ஆரம்பகால கலைப் படைப்புகளில் முதன்மையானது ராஜா சாண்டோ தயாரித்தளித்த படம் ‘அனாதைப் பெண்’. ராஜா சாண்டோ மெளனப் படங்களில் நடித்து இந்தியாவில் புகழ்பெற்ற புதுக்கோட்டை தமிழர் ஆவார்.
* சென்னை நகரில் ‘சீனிவாசா சினிடோன்’ என்ற ஸ்டுடியோவை ஏ. நாராயணன் என்பவர் உருவாக்கினார். இதற்கு மற்றொரு பெயரும் உண்டு ‘சவுண்ட் சிட்டி’ உருவான நாள் 1.4.1934. அந்தஸ்டுடியோவில் தயாரித்த படம் “ஸ்ரீநிவாச கல்யாணம்”.
* சேத்துப் பட்டில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உருவான இந்த ஸ்டுடியோவில் ஏ. நாராயணனின் துணைவியார் மீனா நாராயணன் ஒலிப்பதிவாளராகப் பணிபுரிந்தார்.
* திரைப்படங்களில் அந்த காலத்தில் இயக்குனர் பெயரும், கம்பெனி பெயரும் மட்டுமே காட்டப்பட்டு வந்தன. நடிகர் நடிகைகளின் பெயர்களையும் இந்தியப் படங்களில் முதன் முதலில் வெளியிடச் செய்தவர் ‘ராஜா சாண்டோ’ ஆவார்.
* 1923 ஆம் ஆண்டில் சென்னையில் ‘கோவர்த்தனா’ என்ற ஆய்வுக்கூடம் (ழிaboratory) ஆர்.எஸ். பிரகாஷ் என்பவரால் முதன் முதலில் நிறுவப்பட்டது.
* சினிமாச் செய்திகளை வெளியிடுவதற்காக முதன் முதலாக ‘மூவி மிரர்’ என்ற பத்திரிகை 1927 இல் ஆரம்பிக்கப்பட்டது. இதன் ஆசிரியர் ‘எஸ்.கே. வாசகம்’ ஆவார்.
* 1917 ஆம் ஆண்டு நடராஜ முதலியாரால் தயாரிக்கப்பெற்ற ‘திரெளபதி வஸ்திராபகரணம்’ என்ற திரைப்படத்தில் திரெளபதியாக நடிப்பதற்கு எந்த தமிழ்ப் பெண்ணும் நடிக்க முன்வராத காரணத்தால் மேலை நாட்டைச் சார்ந்த வெள்ளைக்காரப் பெண்மணி ஒருவரால் நடிக்கப்பெற்றுக் காட்சி படமாக்கப்பட்டது.
* திரைப்படத்தில் ஆண் வேடத்தில் நடித்த முதல் பெண்மணி ‘கே.பி. சுந்தராம்பாள்’ ஆவார். அதேபோல் ஒரு இலட்சம் ரூபாய் நடிப்பு ஊதியம் பெற்ற முதல் தமிழ்க் கலைஞர் என்கிற பெருமையையும் இவரே பெறுகிறார்.
* 1936 ஆம் ஆண்டில் ‘ராஜா தேசிங்கு’ என்னும் முதல் சரித்திரப் படம் தயாரிக்கப்பட்டு வெளிவந்தது.
* 1937 ஆம் ஆண்டில் சேலம் மொடர்ன் தியேட்டர்ஸின் முதல் தமிழ்த் திரைப்படமான ‘சதி அகல்யா’ தயாரித்து வெளியிடப்பட்டது.
* ஏ.வி. மெய்யப்ப செட்டியார் (ஏ.வி.எம்) தயாரித்த ‘நந்தகுமார்’ 1938 இல் வெளிவந்தது. இப்படத்தில் தான் ‘டி.ஆர்.மகாலிங்கம்’ முதன் முறையாக அறிமுகமானார். இத்திரைப்படத்தில்தான் முதன் முறையாக சொந்தக் குரலில் பாடாமல் பின்னணி பாடலுக்கு வாயசைக்கும் முறை புகுத்தப்பட்டது.

No comments:

Post a Comment