Tuesday, November 12, 2013

எம்.ஜி.ஆர் பற்றி சுவையான சிறுகுறிப்புகள்

எம்.ஜி.ஆர். பற்றி சுவையான சிறுகுறிப்புகள்

சினிமா, அரசியல் தாண்டி ஓர் ஆளுமையாக எம்.ஜி.ஆர். அனைவருக்குமான ரோல் மாடல். இன்னமும் அவரைப் பற்றி சிலாகித்துச் சொல்ல ஆயிரம் சங்கதிகள் இருந்தாலும் சில.
எம்.ஜி.ஆர். நடித்த மொத்தப் படங்கள் 136. முதல் படம் சதிலீலாவதி (1936). கடைசிப் படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1977).
பெரும்பாலும் (60 படங்கள்) தெலுங்குப் படங்களைத்தான் ரீ-மேக் செய்வார் எம்.ஜீ.ஆர். அத்தனையும்என்.டி.ஆர். நடித்ததாகவே இருக்கும். ‘உரிமைக்குரல்’ மட்டும் விதிவிலக்கு. அது நாகேஸ்வர ராவ் நடித்த தெலுங்குப் படம்.
எம்.ஜி.ஆரின் முதல் மனைவி தங்கமணி. இரண்டாவதாக சதானந்தவதியைத் திருமணம் செய்தார். அவரது மறைவுக்குப் பிறகு வி.என். ஜானகி.
எம்.ஜி.ஆர். நடித்த 50 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். அவரின் ‘அச்சம் என்பது மடமையடா.... அஞ்சாமை திராவிட உடைமையடா’ பாட்டு எம்.ஜி.ஆரின் காரில் எப்போதும் ஒலிக்கும்.
சிகரெட் பிடிப்பது மாதிரி நடிப்பதைத் தவிர்த்தார். நினைத்ததை முடிப்பவன்’ படத்தில் சிகரெட்டை வாயில் வைப்பார். இழுக்க மாட்டார். மலைக்கள்ளளனில் ‘ஹீக்கா’ பிடித்தது மாதிரி வருவார். இந்தக் காட்சியை வைப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்திலேயே படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டதாம்.
முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டால் iட்டிங் போக முடியாது என்பதால் பதவியேற்பு விழாவையே 10 நாட்கள் தள்ளிப்போட்டு மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தை முடித்துக் கொடுத்தார்.
‘கர்ணன்’ படத்தில் சிவாஜிக்கு முன்னதாக எம்.ஜி. ஆரைத்தான் கேட்டார்கள். ‘புராணப் படம் பண்ண வேண்டாம்’ என்று அண்ணா சொன்னதால் மறுத்துவிட்டார் எம்.ஜி.ஆர்.
நம்பியாரும் அசோகனும் தான் எம்.ஜி.ஆருக்குப் பிடித்த வில்லன்கள். பி.எஸ். வீரப்பாவும், ஜஸ்டினும் இருந்தால் சண்டைக் காட்சிகளில் குஷியாக நடிப்பார்.
எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் சரோஜா தேவி. அடுத்தது ஜெயலலிதா.
எம்.ஜி.ஆர். கருணாநிதி இணைந்து வெற்றி பெற்ற படம். ‘மலையக்கள்ளன’ ஜனாதிபதி விருது வாங்கிய முதல் தமிழ் சினிமா. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் எடுக்கப்பட்ட படம் இது.
காஞ்சித் தலைவனில் இருந்து தனது கட்டுமஸ்தான் உடம்பைக் காண்பித்து நடிக்கத் தொடங்கினார். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் ‘உரி¨மைக் குரல்’ காட்சி பெண்களை அவர் பக்கம் ஈர்ப்பதில் பெரும் பங்கு வகித்தது.
நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் மூன்றும் எம்.ஜி.ஆர். டைரக்ஷ்ன் செய்த படங்கள்.
னிமாவில் அதுவரை கட்சிக் கருத்துக்களைப் புகுத்தினார். தி.மு.க. கொடி, உதயசூரியன் சின்னம் அண்ணா படம் இல்லாத படமே இல்லை என்ற அளவுக்கு வைத்தார்.
எம்.ஜி.ஆர். எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரை முருகன். சினிமாவில் வலம் வந்த கோவை சரளா.
தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி 1970 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். அடித்த கமென்ட் இதுதான் அந்தக் காலத்து ரசிகர்கள் மாதிரி இப்ப உள்ளவங்க இல்லை. 10 நிமிடங்களுக்கு ஒரு களைமாக்ஸ் கேட்குறாங்க அப்படி வெச்சாத்தான் படம் ஓடும்.
“பொன்னியின் செல்வன்” கதையைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுக்க நினைத்தார் எம்.ஜி.ஆர். ஆங்கில வசனத்தை அண்ணாவை எழுதவும் கேட்டுக்கொண்டார். ஆனால் ஆசை நிறைவேறவில்லை.
அறிமுகம் இல்லாதவராக இருந்தால், உடனே கை கொடுத்து “நான் எம்.ஜி.ராமச்சந்திரன் சினிமா நடிகர்” என்று அறிமுகம் செய்துகொள்வார்.
ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும், சிங்கமும் வளர்த்தார் எம்.ஜி.ஆர். இவற்றைக் கவனிக்க தனி டாக்டர் வைத்திருந்தார்.
ரொம்பவும் நெருக்கமானவர்களை ‘ஆண்டவனே’ என்றுதான் அழைப்பார்.
அடி¨மைப் பெண் பட ஷ¥ட்டிங்குக்காக ஜெய்ப்பூர் போன எம்.ஜி.ஆர். குளிருக்காக வெள்ளைக் தொப்பி வைக்க ஆரம்பித்தார். பிடித்துப்போகவே அதைத் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தார்.
எம்.ஜி.ஆர். பகிரங்கமாகக் காலில் விழுந்து வணங்கிய பெருமை இரண்டு பேருக்கு உண்டு. ஒருவர் நடிகர் எம்.கே. ராதா. கத்திச் சண்டை, இரட்டை வேடங்களுக்கு இவர்தான் எம்.ஜி.ஆரூக்கு இன்ஸ்பிரேஷன். இரண்டாமவர், ஹிந்தி டைரக்டர் சாந்தாராம். இவரது படங்களைத்தான் நிறைய பின்பற்றினார். எம்.ஜி.ஆர்.
முழுக்கை சில்க் சட்டை, லுங்கியுடன் தொப்பி, கண்ணாடி இல்லாமல் தன் காரை தானே டிரைவ் செய்து எப்போதாவது சென்னையை வலம் வருவது எம்.ஜி.ஆரின் வழக்கம். ‘யாருக்கும் என்னைத் தெரியலை. தொப்பி கண்ணாடி இருந்தாதான் கண்டுபிடிப்பாங்க போல” என்பாராம்.
அன்னை சத்யாவை வணங்க ராமாவரம் தோட்டத்துக்குள்ளேயே கோயில் வைத்திருந்தார்.
“நான் ஏன் பிறந்தேன்” ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர். எழுதிய சுயசரிதைத் தொடர் அதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. அடுத்ததாகத் தொடங்கிய “எனது வாழ்க்கை பாதையிலே” தொடரும் முற்றுப் பெறவில்லை. இன்றும் அவர் வாழ்ந்து கொண்டு இருப்பதாகவே நினைக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். முற்றுப் பெறவில்லை அவர் பெருமைகள்.

No comments:

Post a Comment