* மறைந்த தயாரிப்பாளர் ‘சாண்டோ சின்னப்பதேவர்’ தான் தயாரிக்கும் படத்தில் ஏதாவது ஒரு காட்சியில் தன் முகத்தைக் காண்பிக்காமல் இருக்கமாட்டார். இவரைப் போல மயிர்க்கூச்செறியும் மர்மப் படங்களைத் தயாரித்து உலகப் புகழ்பெற்ற ‘ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்’ கிற்கும் இந்தப் பழக்கம் உண்டு. தான் தயாரிக்கும் படங்களில் ஏதாவது ஒரு வினாடியாவது தம் தலையை நீட்டி வைப்பார்.
அவர் தயாரித்த ‘லைட் போட்’ என்ற படத்தில் ஒன்பது நடிகர்களுக்கு மட்டுமே பங்கு இருந்தது. அவரது வழக்கப்படி தன் த¨லையைக் காண்பிப்பதற்கு அந்தப் படத்தில் இடம் இல்லாதிருந்தது.
ஹிட்ச்காக் தமது வழக்கமான ஆசையை இந்தப் படத்தில் நிறைவேற்றிக்கொள்ள முடியாது என்றே அனைவரும் கருதியிருந்தார்கள். ஆனால் படத்தின் கடைசிக் கட்டத்தில் நடிகர் ஒருவர் பத்திரிகையைப் பார்க்கும் காட்சி வந்தது. அந்தப் பத்திரிகையில் ஒரு விளம்பரம் காணப்பட்டது. அந்த விளம்பரத்தில் ‘ஹிட்ச்காக்’ படம் இடம்பெற்றிருந்தது.
* பக்திப் படங்கள் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த அந்தக் காலத்தில் ஒரு குருமகா சந்நிதானத்தின் (சாமியாரின்) அயோக்கியத்தனங்களை அம்பலப்படுத்திக்கொண்டு வெளிவந்த தமிழின் முதல் படம் ‘சந்திரகாந்தா’ (கதை ஜே. ஆர். ரங்கராஜு : இயக்கம் பி. கே. ராஜா சாண்டோ, தயாரிப்பு ஜுபிடர் பிக்சர்ஸ்)
* பேரறிஞர் அண்ணா எழுதிய புகழ்பெற்ற நாடகங்களுள் ஒன்று ‘ஓர் இரவு’ இந்த நாடகம் திரைப்படமாக்கப்பட்டது. இதனை முதன் முறையாக ‘ப. நீலகண்டன்’ இயக்கினார். இப்படத்தில் ‘ஏ. நாகேஸ்வரராவ்’ முதன் முதலில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிவந்த ஆண்டு 1951.
* ட்ரூமன் கேபார்ட் என்ற நாவலாசிரியர் எழுதிய சிறுகதையைப் படமாக்க ஐந்து இலட்சம் டொலருக்கு வாங்கினார் படத் தயாரிப்பாளர்.... இது இங்கிலாந்தில்....ஹிட்ச்காக் ஒரு கட்டுரையில் ‘சஸ்பென்ஸ்’ பற்றி இவ்வாறு கூறுகிறார். ‘சஸ்பென்ஸ்’ என்பது கொலை, கொள்ளைகள் நிறைந்த கதைகளில்தான் இடம்பெற வேண்டும் என்று சிலர் நினைப்பது பைத்தியக்காரத்தனமானது.
வெறும் காதல் மட்டுமே உள்ள கதையில்கூட சஸ்பென்ஸ் இருக்க முடியும். காதலர்கள் கடைசியில் ஒன்றாக இருக்கின்றார்களா... என்பதே ஒரு சஸ்பென்ஸ்தான் முடிவு என்னவாக இருக்கும் என்ற ஆவலை ரசிகர்களின் மனதில் ஏற்படுத்தக்கூடிய எல்லாக் கதைகளுமே ‘சஸ்பென்ஸ்’ கதைகள் தான்.
* ‘நல்ல தம்பி’ படத்திற்கு கதை வசனம் எழுதியதற்காக பேரறிஞர் அண்ணா கலைவாணர் என். எஸ். கேயிடம் எந்தவித சன்மானத்தையும் பெற்றுக்கொள்ளவில்லை. ஆனால், என். எஸ். கே. அண்ணாவிற்கு ஒரு கார் வாங்கி கொடுத்திருந்தார். இந்தக் காரையே அண்ணா, கலைவாணர் கடைசி காலத்தில் கஷ்டப்படும்போது திரும்பிக் கொடுத்துவிட்டதான செய்தி பல ரசிகர்களுக்குத் தெரியாது.
No comments:
Post a Comment