* சீன் கானரி தன் 32 வது வயதிலேயே ‘007 ஜேம்ஸ்பாண்ட்’ ஆகி உலகப் புகழ்பெற்றார். ரோஜர் மூர் என்ற நடிகரோ 1973 ல் தான் ஜேம்ஸ்பாண்ட்டாக நடிக்க ஆரம்பித்தார். அப்போது ரோஜர் மூரின் வயது என்ன தெரியுமா? 44 ஆண்டுகள்.
* ஹார்டி ஆரம்ப காலத்தில் பெரும்பாலும் வில்லனாகத் தான் நடித்தார். ‘ஹிhலீ தீizarனீ’ என்ற படத்தில் அவரது வில்லன் நடிப்பு நினைவில் நிக்கும்படி அமைந்திருந்ததாம்.
* லாரல் கதை வசனம் எழுதி இருவரும் இணைந்து நடித்த முதல் படமான ‘ஷிlipping wivலீs’ என்ற படம் சக்கைபோடு போட்டதாம். இதில் லாரலுக்கு மிகச் சிறிய வேஷம்தான்.
* சென்னையில் அமைக்கப்பட்ட முதல் ஏர்கண்டிஷன் தியேட்டர் ‘மினர்வா’.
* முதன் முதலாக ஒரே கட்டடத்திற்குள் அமைக்கப்பட்ட மூன்று தியேட்டர்கள் சஃபையர், ப்ளூ டைமண்ட், எமரால்டு. (தற்போது இல்லை)
* இந்தியாவிலேயே முதன் முதலாக அமைக்கப்பட்ட சினிமா தியேட்டர் பெங்களூரிலுள்ள ‘கபாலி’ தியேட்டராகும்.
* போதனா சீனிவாசராவ் என்பவர் 1921 ஆம் ஆண்டு ஆந்திராவில் விஜயவாடா நகரில் ‘மாருதி தியேட்டர்’ என்ற பெயரில் நிரந்தரமான தியேட்டர் ஒன்றினை முதன்முதலாக கட்டினார்.
* 1905 ஆம் ஆண்டில் சந்தோணி, ஆல்பர்ட்னி ஆகிய இரண்டு திரைக்கலைஞர்களும் ஒன்றாக இணைந்து ‘டூரின்’ (ஹிurin) என்ற இடத்தில் முதல் முறையாக ‘சினி ஸ்டுடியோ’ என்ற பெயரில் ஆரம்பித்தனர். இந்த ஸ்டுடியோதான் இத்தாலியில் ஆரம்பிக்கப்பட்ட முதல் திரைப்பட ஸ்டுடியோவாகும்.
* 1 1914 ஆம் ஆண்டில் ‘பாஸ்ட்ரோன்’ என்ற இத்தாலிய திரைக்கலைஞர் ‘காபிரியா’ என்ற திரைப்படத்தை உருவாக்கி வெளியிட்டார். இத்திரைப்படத்தில்தான் முதன் முதலாக ‘டாலி’ (ளிolly) யை உபயோகப்படுத்தி படமாக்கினார்.
* ரஷ்ய நாட்டில் ‘ஜார்ஜ் நிக்கோலஸ்’ பட்டம் சூட்டிக்கொண்ட விழாவினை லுமியர் காமிராமேன்கள், பிரான்ஸிஸ் டப்ளியர் மற்றும் சார்லஸ் மாய்சன் ஆகியோர் படம் பிடித்தனர். இப்படப்பிடிப்புதான் ரஷ்ய நாட்டில் நிகழ்ந்த முதல் படப்பிடிப்பு ஆகும்.
* 1907 ஆம் ஆண்டில் முதன் முதலாக ‘அலெக்சாண்டர் ட்ரான்கோ’ என்ற புகைப்படக்காரர்தான் ரஷ்ய நாட்டில் முதன் முதலாக திரைப்படக் கம்பெனியைத் தொடங்கினார்.
* 1908 ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பதேயும், கெளமாண்ட்டும் இணைந்து முதன் முதலாக மாஸ்கோவில் திரைப்பட ஸ்டுடியோவையும், சோதனைக் கூடத்தையும் நிறுவினர்.
* லெனின் ஆட்சிக் காலத்தில்தான் ரஷ்யாவில் முதன் முறையாக ‘பிலிம் இன்ஸ்டிடியூட்’ தொடங்கப்பட்டது.
* 1922 ஆம் ஆண்டு இந்தியாவில் திரையிடப்பெற்ற திரைப்படங்களுக்கு - குறிப்பாக, கல்கத்தாவிலும், பம்பாயிலும் திரையிடப்பெற்ற திரைப்படங்களுக்குக் கேளிக்கை வரி வசூலிக்கப்பட்டது.
* அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ‘எல்லீஸ் ஆர். டங்கன்’ தமிழ் மொழியில் இயக்கிய முதல் படம் ‘சதிலீலாவதி’. வந்த ஆண்டு 1936. கதை எஸ். எஸ். வாசன். இப்படத்தில் சிறிய வேடத்தில் அறிமுகமானார் மக்கள் திலகம் ‘எம். ஜி. ஆர்’.
* எல்லீஸ் ஆர். டங்கன் தான் தமிழ்த் திரைப்பட உலகில் முதன்முறையாக தண்டவாளங்கள் அமைத்து (traணீks) அதன் மீது trolly - யை வைத்து, அதன்மீது காமிராவை வைத்து படமாக்கினார். இவர் தமிழ் மொழியில் இயக்கிய படங்கள் எட்டு தான். என்றாலும் ஒவ்வொரு படமும் திரைக் காவியங்கள் எனலாம்.
* தமிழ்த் திரை உலகின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான ‘கே. சுப்பிரமணியம்’ மூடநம்பிக்கை, பெண்ணடிமைத்தனம், விடுதலை உணர்ச்சி இல்லாமை - இவைகளுக்கு எதிராக சீர்திருத்த நோக்கோடு படம் எடுத்த சாதனையாளர். அமரர் கல்கியின் புகழ்பெற்ற நாவலான ‘தியாகபூமி’யைப் படமெடுத்து விடுதலை உணர்ச்சிக்கு வித்திட்டார். அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம் இப்படத்திற்கு தடை விதித்தது.
No comments:
Post a Comment