
நீ ஆயிரத்தில் ஒருவன் ஆயிரத்தில் ஒருவன்
என்னை நான் கொடுத்தேன் என் ஆலயத்தின் இறைவன்
என் ஆலயத்தின் இறைவன்
உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்
உன்னை நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில் ஒருவன் ஆயிரத்தில் ஒருவன்
பொன்னைத்தான் உடல் என்பேன் சிறு
பிள்ளை போல் மனம் என்பேன்
கண்களால் உன்னை மணந்தேன் தொட்ட
கைகளால் நான் மலர்ந்தேன்
உள்ளத்தால் வள்ளல்தான் ஏழைகளின் தலைவன்
எண்ணத்தால் உன்னைத் தொடர்ந்தேன்
ஒரு கொடி போல் நெஞ்சில் படர்ந்தேன்
சொல்லத்தான் அன்று துடித்தேன்
கொண்ட நாணத்தால் அதை மறைத்தேன்
மன்னவா உன்னை நான் மாலையிட்டால் மகிழ்வேன்
உன்னை நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில் ஒருவன் ஆயிரத்தில் ஒருவன்
என்னை நான் கொடுத்தேன் என் ஆலயத்தின் இறைவன்
என் ஆலயத்தின் இறைவன்
உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன்
உன்னை நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில் ஒருவன் ஆயிரத்தில் ஒருவன்
No comments:
Post a Comment