Wednesday, March 26, 2014

பாலு சிபாரிசு செய்யாதது ஏன்?

பாலுவின் சகோதரி எஸ்.பி. சைலஜா ஒரு நல்ல பாடகி. 10 வயதுச் சிறுமியாக இருந்தபோது ஒரு குழந்தை  நட்சத்திரத்திற்காகப் பின்னணி பாடியிருகிறார். அதன் பிறகு, தெலுங்கில் பாட ஆரம்பித்து, தமிழில் நுழைந்து, ஒரு நல்ல பாடகி என்று பெயர் எடுத்தவர் சைலஜா. பாலு பல படங்களில் பாடிக்கொண்டிருக்கும்போது சுலபமாக சைலஜாவிற்கு சிபாரிசு செய்து படத்திற்கு இரண்டு பாடல்கள் வாங்கியிருக்க முடியும்.
ஆனால் பாலுவிற்கு அப்படிச் செய்ய மனம் இடம் தரவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று தான் தங்கைக்காக சிபாரிசு செய்வதால் இன்னொரு பாடகிக்கு கிடைக்கக் கூடிய வாய்ப்பு பறிபோய்விடும் என்பது இரண்டாவது காரணம், தான் சிபாரிசு செய்தால் அது இசையமைப்பாளரை இக்கட்டான நிலைக்குத் தள்ளும் என்பது.
இதனாலேயே சிபாரிசு செய்யாமல் இருந்தார். பாலுவே இசையமைத்த படங்களில் கூட சைலஜாவிற்குப் பாடல்கள் தருவதற்கு யோசிப்பார் பாலு. தயாரிப்பாளர் முன் வந்து சொன்னால் தான் தங்கைக்குப் பாட்டு கொடுப்பார்.
இதைக்கூட பாலு, சைலஜா தன்னுடைய தங்கையாக இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் அதிகமான பாடல்கள் பாடியிருக்கக்கூடிய திறமையான பாடகி என்று கூறுகிறார். பாடும் விதத்தில் குடும்பத்தில் ஏற்பட்ட சிறு பிரச்சினை சைலஜாவிற்கு தான் சந்தர்ப்பம் வாங்கிக்கொடுக்காதது தான் என்கிறார் எஸ்.பி.பி.
தினசரி ஒரு புரளி, கிசுகிசு என இயங்கும் சினிமா உலகில் பாலு பல ஆண்டுகள் எந்தவிதச் சிக்கலிலும் சிக்காமல் தவிர்த்து வந்தார். ஆனால் விதி வலியது ஆயிற்றே. பாலுவும் ஒரு சிக்கலில் மாட்டினார்.

No comments:

Post a Comment