Wednesday, March 19, 2014

உலக சினிமா

* இந்திப் பட உலகில் தென்னக நடிகர்கள் நீண்ட காலம் நிலைத்திருப்பதில்லை. இருப்பினும் அவற்றையெல்லாம் முறியடித்து விட்டு 1955 முதல் 1965 வரையில் தென்னக நடிகர் ஒருவர் இந்திப்பட உலகில் முன்னணி கதாநாயகனாகத் திகழ்ந்தார். வாள் வீச்சு, நடனம், நடிப்பு என்ற அனைத்திலும் முத்திரை பதித்த ‘ரஞ்சன்’ தான் அந்த நடிகர்.

* வெளிநாட்டுத் தயாரிப்பு படத்தில் நடித்த முதல் தமிழ் நடிகை
என்ற பெயர் பெற்றவர் நடிகை பத்மினி. இந்திய - ரஷ்ய
கூட்டுத் தயாரிப்பான ‘பரதேசி’ (இந்தி) என்ற படம்தான் அது.
* ஜெய்சங்கர் நடித்த ‘காலம் வெல்லும்’ என்ற தமிழ்ப் படம்தான் தமிழில் வெளியான முதல் ‘கெளபோய் படம்’ என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் அதற்கு முன்பே ‘முல்லை வனம்’ (1955) என்ற படம்தான் முதல் தமிழ் கெளபோய் படமாகும். இதில் ஸ்ரீராம், வீரப்பா, குமாரி ருக்மணி ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
* இயக்குநர் ஏ. பி. நாகராஜன் ஆரம்ப காலகட்டங்களில் நடிகராகத்தான் இருந்தார். ‘பெண்ணரசி’ (1955) என்ற படத்திலும், ‘நால்வர்’ என்ற படத்திலும் ஹீரோவாகவும், ‘நம் குழந்தை’ என்ற படத்தில் வில்லனாகவும் நடித்திருக்கிறார். ‘நால்வர்’ படத்தில் சிறப்பாக நடித்ததால், இவர் ‘நால்வர் நாகராஜன்’ என்று அழைக்கப்பட்டார்.

No comments:

Post a Comment