Wednesday, March 26, 2014

எம். ஜி ஆருக்கு மீண்டும் சினிமாவில் வாய்ப்பு

தன் மகன்களுக்கு எப்படியாவது படத்தில் நடிக்க சீக்கிரமாக வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நினைத்து அம்மன் கோயிலுக்கு மகன்களுக்கு தெரியாமல் சென்று பூஜை செய்து வந்தார் எம். ஜி. ஆரின் அம்மா.
இப்படி இருக்கிற காலகட்டத்தில் இருவருக்கும் சில படங்களில் நடிக்க சிறு சிறு வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தன்னுடைய விடா முயற்சியால் இம் மாதிரி வாய்ப்புக்கள் கிடைப்பதில் குறைவு ஒன்றும் இல்லை ஆனாலும் அவர் மனதிற்குள் நாம் எப்போது கதாநாயகனாக நடிக்க போகிறோம் என்ற ஏக்கம் இருந்துகொண்டு இருந்தது.
இப்படியொரு காலகட்டத்தில் ஒரு சிலருடைய முக்கிய சிபாரிசின்படி டைரக்டர் ஏ. எஸ். ஏ. சாமி பட தயாரிப்பாளர் சோமசுந்தரம் இவர்கள் இருவரும் இணைந்து ராஜகுமாரி என்ற பெயரில் ஒரு படத்தை தயாரிக்க எல்லா ஏற்பாடுகளையும் முடித்துக் கொண்டு கதாநாயகன் தேர்வு நடத்தப்பட்டது. அப்பொழுது எம். ஜி. ஆரும் இந்த தேர்வில் கலந்துகொண்டார்.
தேர்வை டைரக்டர் ஏ. எஸ். ஏ. சாமி மிகக் கவனமாக தெளிவாக நடத்தினார். இதில் எம். ஜி. ஆர். ஆள் வாட்டசாட்டம், அழகு, நிறம் மற்றும் பயிற்சிகள் இவைகள் எல்லாமே சரியாக இருந்தன.
உடனே எம். ஜி. ஆரிடம் ஏதும் சொல்லாமல் ‘உன் வீட்டு விலாசத்தை கொடுத்து செல் நாங்கள் உன் வீட்டிற்கு தகவல் அனுப்புகிறோம்’ என்று சொல்லி எம். ஜி. ஆரை அனுப்பி வைத்தார்கள். எம். ஜி. ஆர் மன திருப்தி இல்லாமல் வீட்டிற்குச் சென்றவர் அம்மாவிடமும், அண்ணனிடமும் தான் கதாநாயகனாக நடிக்க தேர்வு ஒரு கம்பனியில் நடந்தது என்ற விவரத்தை சொன்னார்.
இதைக் கேட்ட அம்மாவும் அண்ணனும் மகிழ்ச்சி அடைந்து ‘மகனே நீ கவலைப்படாதே இந்த தேர்வில் நீதான் வெற்றி அடைவாய்’ என்று அம்மா சொன்னார்.
மறுநாள் தொடர்ந்து வேலை தேடும் படலம் தொடர்ந்தது. ஒரு வார காலத்தில் மேற்படி டைரக்டர் ஏ. எஸ். ஏ. சாமி எம். ஜி. ஆரை அழைத்து வரும்படி ஒரு ஆளை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். ஆனால் எம். ஜி. ஆர். வீட்டில் அவர் வேறு ஒரு படப்பிடிப்புக்கு சென்று உள்ளார் அம்மா அந்த ஆளிடம் ‘மகன் வந்தால் அனுப்பி வைக்கிறேன்’ என்றார்.
எம். ஜி. ஆர் இரவு வீட்டிற்கு வந்தார். மகன் எப்போது வருவான் என்று காத்துக்கொண்டு இருந்த தாய் ‘ஏண்டா மகனே இவ்வளவு நேரம்’ உடனே மகன் சொல்கிறார் ‘நான் ஊர் சுற்றி கொண்டா வருகிறேன். எனக்குக் கிடைத்த ஒரு சின்ன வாய்ப்பு நடித்து முடித்தவுடன் நேராக வீட்டிற்கு வருகிறேன்’ என்று சொல்லி பாத்ரூமூக்கு சென்று குளித்து விட்டு வந்தவுடன் சாப்பாடு தயார். மகன் சாப்பாடு சாப்பிடும் போது டைரக்டர் ஏ. எஸ். ஏ. சாமி ஆள் ஆனுப்பி வைத்த விவரத்தைச் சொன்னார். அப்படியாமா மறுநாள் காலையில் கம்பனிக்கு சென்றார். டைரக்டர் சாமி இவரை பார்த்தவுடன் ‘நேத்திக்கே வரசொன்னேன் ஏன் வரவில்லை’ என்று கேட்டார்.
உடனே எம். ஜி. ஆர். ‘அய்யா நான் வேறு ஒரு படத்தில் சூட்டிங்க் முடித்து வீட்டிற்கு போக இரவு 9 மணியாகியது. அதனால் தான் நான் இப்போது வந்தேன்’ என்றவுடன் டைரக்டர் ‘சரி பராவாயில்லை. உன்னை எங்கள் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்ய போகிறோம். நாளைக்கு நல்ல நாள் உனது அண்ணன் சக்கரபாணியையும் அழைத்துக் கொண்டு வந்து ஒப்பந்த தாளில் கையெழுத்து போடனும்’ என்று சொல்லி அனுப்புகிறார்.
இதைக் கேட்டவுடன் எம். ஜி. ஆர். வேறு எங்கையும் செல்லாமல் நேராக வீட்டிற்கு வந்தார். இதற்கு இடையில் தன் இளைய மகனுக்கு அந்த கம்பனியில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று சொல்லி அம்மன் கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்து பிரசாதம் வாங்கி தன் இளைய மகனுக்காக காத்துக் கொண்டு இருந்தார். இளைய மகன் எம். ஜி. ஆர். சந்தோஷத்தோடு வீட்டிற்கு வந்தார்.
இடை இடையே சிறு தோல்விகள் சந்தித்த எம். ஜி. ஆர். இதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்து போட மறுநாள் அன்று வெள்ளிக்கிழமை காலையில் எழுந்து மகன் இருவரும் கம்பனிக்கு புறப்படும் போது அம்மனுடைய குங்குமம் நெற்றியில் இட்டு ஆசீர்வாதம் செய்து அனுப்பி வைத்தார். குங்குமம் பொட்டோட சென்ற இருவரையும் டைரக்டர் கம்பனி முதலாளி பார்த்து ‘வாங்க வாங்க நாங்கள் உங்களுக்காக காத்துக்கொண்டு இருக்கிறோம்’ என்று சொல்கிறார்கள்.
அன்று காலை நல்ல நேரம் 9 - 10.30 நேரம் என்றும் இந்த நேரத்தில் தான் எடுக்கப் போகும் படத்தின் பெயர் ‘ராஜகுமாரி’ இந்தப் படத்தின் தொடக்க விழா பூஜை நடைபெறுகிறது. இதில் நடிக்கும் கதாநாயகன், கதாநாயகி சக நடிகர்களும், சக தொழிலாளர்களும் அங்கு கூடி இருக்கிறார்கள். இந்த பூஜையில் விசேஷமாக வினாயகர் படம், சரஸ்வதி லட்சுமி படம், ஒரு அம்மன் படம், ராஜராஜேஸ்வரி படம் வைக்கப்பட்டு இருந்ததை எம். ஜி. ஆர். மிக கவனமாக கவனித்தார்.
பூஜை முடிந்தவுடன் கதாநாயகன் எம். ஜி. ஆரிடம் ஒப்பந்த கடிதத்தில் கையெழுத்து இடும்படி சொன்னார்கள். உடனே அண்ணன் சக்கரபாணி அந்த ஒப்பந்தத்தைப் படித்து காண்பிக்க சொன்னார். அதில் இந்தப் படம் சூட்டிங் முடியும் வரையில் நான் வேறு எந்த படத்திற்கும் நடிக்க ஒப்பந்தம் செய்துகொள்ள மாட்டேன் நீங்கள் சூட்டிங்குக்கு அழைக்கும் போது எல்லாம் வரவேண்டும். உங்களுக்கு சம்பளம் பிறகு நிர்ணயிக்கப்படும்.
இப்பொழுது முன் தொகையாக ரூ. 1001/- தருகிறோம். இது தான் ஒப்பந்தப்பத்திரம். அண்ணனும் தம்பியும் ஒருவருக்கு ஒருவர் முகத்தை பார்த்துக் கொள்கிறார்கள். உடனே அண்ணன் தம்பிக்கு முகத்தினால் கையெழுத்துபோட சைகை காண்பிக்கிறார். தம்பி கையெழுத்து போட்டார். அண்ணனும் சாட்சி கையெழுத்து போட்டார். உடனே முதலாளியும், டைரக்டர் சாமியும், ரூ. 1001/- முன்தொகையாக கொடுத்தார்கள். எம். ஜி. ஆர். அதை பெற்றுக்கொண்டார். பிறகு சூட்டிங் திகதிகளை நாளைக்கு சொல்கிறோம்.
அடுத்து ரூபாய் 1001/- பெற்றுக்கொண்டு நேராக வீட்டிற்கு சென்று அம்மாவை பார்த்து காலில் விழுந்து வணங்கி அம்மாவிடம் காசை கொடுத்தார். நடிப்பில் நடிக்க முன்தொகையாக ரூபாய் 1001/- கிடைத்ததை நினைத்து அந்த அம்மனை நினைத்து ஆனந்த கண்ணீர் வடித்தார் அன்னை. அடுத்து மறுநாள் ஒப்பந்தப்படி கம்பனிக்கு சென்றார்.
அங்கு டைரக்டர் சாமியும் கம்பனி முதலாளியும் எம். ஜி. ஆரிடம் தான் இந்தப் படத்தில் நடிக்க போகும் கதாபாத்திரத்தையும் தன்னுடன் நடிக்கும் கதாநாயகி மாலதி என்ற ஒரு பெண் நடிக்க இருக்கிறார் அவள் தான் ராஜகுமாரி இத்துடன் டி. எஸ். பாலையா, எம். என். நம்பியார் என்று விவரத்தை சொல்லுகிறார்கள்.
கதாநாயகி மாலதி தெலுங்கு தேசத்தை சேர்ந்தவர் (தாய்மொழி) டி. எஸ். பாலையா, எம். என். நம்பியார், நாராயணபிள்ளை போன்றவர்கள் எல்லாம் எம். ஜி. ஆரை விட நடிப்பில் அனுபவத்தில் மூத்தவர்கள் இந்த விவரங்களை தெரிந்து கொண்ட எம். ஜி. ஆர். தன்னுடைய வயசுக்கு மீறிய திறமைகளை காட்டி திறமைகளுடன் நடிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகிவிட்டது. 1946 ல் சூட்டிங் ஆரம்பிக்கப்பட்டது. 1936 சதிலீலாவதி முதல் படம். 10 ஆண்டுகள் கழித்து இவருக்கு கதாநாயகன் வேடம் கிடைத்தது.
இதற்கு இடையில் சிறு சிறு வேடங்களில் 14 படங்களில் நடித்து உள்ளார். சிறு வயதில் நாடகத்தில் நடித்து கைதட்டலும் பாராட்டுகளையும் பெற்று பிறகு 14 சினிமா படங்களில் நடித்த அனுபவங்களை வைத்து கொண்ட இவருக்கு கொடுத்த கதாபாத்திரங்களில் சிரமம் இல்லாமல் தங்கு தடை இல்லாமல் நடிக்க முடிந்தது. இந்தப் படத்தில் இவர் ஒரு நாட்டின் ராஜகுமாரன். கதாநாயகியும் ஒரு நாட்டின் இளவரசி. இந்த இளவரசியை வில்லன்கள் ஒரு சமயத்தில் கடத்தி செல்கிறார்கள்.
இதை எதிர்பாராமல் பார்த்த ராஜகுமாரன் எம். ஜி. ஆர். விலன்களுடன் குதிரையில் போராடும்போது டி. எஸ். பாலையாவுக்கும் எம். ஜி. ஆருக்கும் கத்தி சண்டை ஏற்படுகிறது. இந்த கத்தி சண்டையின் படப்பிடிப்பின் போது டைரக்டர் இந்த காட்சியை மிக தெளிவாக படப்பிடிப்பை படம் எடுக்கிறார். இதில் இயற்கையானவை எம். ஜி. ஆர். அவர்களிடம் வாள் வீச்சு திறமை இயற்கையாகவே உள்ளது.
மிக வேமாகவும் உள்ளது என்பதை கவனித்த டைரக்டர் மிக மகிழ்ச்சி அடைந்தார். இந்த சண்டை காட்சி மிக அருமையாக அமைந்து உள்ளது என்பதை பட தயாரிப்பாளர்கள் எல்லோரும் பாராட்டினார்கள். படம் 1947 வெளியிடப்பட்டது. இந்தப் படம் வெளிவந்த பிறகு அடுத்து அடுத்து பல படங்களில் இவர் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தங்கள் ஏற்பட்டன. இவர் எத்தனை படங்களில் எப்படி எப்படியெல்லாம் நடித்து பாராட்டுகளை பெற்றார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.

No comments:

Post a Comment