* இயக்குனர் கே. சங்கர் 1940 ல் கோயம்புத்தூரில் ரூம் போயாக வேலை செய்து வந்திருக்கிறர். பின் உதவி இயக்குனராகவும், எடிட்டராகவும் பணியாற்றினார். ஏ. வி. எம். நிறுவனத்தின் படத்தை இயக்கி, இயக்குனராக அறிமுகமானார். கடந்த 50 வருடங்களாக இயக்குனராக இருந்து வந்தவர் கே. சங்கர்.
* ‘சோஷியல் ஈவில்’ (1929) என்ற திரைப்படம் செக்ஸ் பற்றி எடுக்கப்பட்ட முதல் செக்ஸ் படமாகும்.
* உலகப் புகழ்பெற்ற நாவலாசிரியர் ‘கே. ஏ. அப்பாஸ்’ தயாரித்த ‘ஆஸ்மான் மஹால்’ (1965) என்ற திரைப்படம்தான் முதன் முதலில் செட்டிங்க் இல்லாமல் முழுவதும் வெளிப்புற காட்சிகளைக் கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். ‘பிருதிவிராஜ் கபூர்’ இப்படத்தில் பிரதான வேடத்தில் நடித்திருந்தார்.
* ‘நூர்ஜஹான்’ (1931) என்ற திரைப்படம்தான் இந்தியாவில் தயாரிக்கப் பட்ட முதல் இந்திய - ஆங்கிலப் படமாகும். படத்தை இயக்கியவர் ‘எஸ்ராமிர்’ என்பவர்.
* ராஜ்கபூர், ராஜ்ஸ்ரீ நடித்த பச்சிஸின் ‘அரவுண்ட் தி வேர்ல்டு’ என்ற திரைப்படம்தான் முதல் 70 எம். எம். சினிமாவாக ப்ளே-அப் செய்யப் பட்டு திரையிடப்பட்டது. இது டெக்னிக் கலரிலும், ஸ்டீரியோ ஃபோனிக் சவுண்டிலும் உருவானது. ஜி. பி. சிப்பி தயாரித்த ‘ஷோலே’ (1975)
No comments:
Post a Comment