அம்மாவும் சற்றும் யோசிக்காமல் மகனே நான் பணத்துக்கு ஏற்பாடு செய்கிறேன். நீ புறப்படுவதற்கு தயாராகு என்று சொல்லிவிட்டு அடுத்த நிமிடம் சக்கரபாணியை அழைத்து மகனே நீ சென்று கேசவனிடம் ராமச்சந்திரனை எப்போது அனுப்ப வேண்டும் என்று கேட்டறிந்து வா என்று சொல்லி அனுப்பிவிட்ட பிறகு சத்தியதாய் தன்னிடம் எவ்வளவு பணம் இருக்கின்றது என்று பார்த்து அதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

சென்ற உடன் நமக்கு மதியம் தான் பம்பாய்க்கு ரயில் அதனால் நீங்கள் இங்கேயே இருங்கள் என்று சொன்னார். அதன்படி அவர்களும் அங்கு தங்கி இருந்து மதியம் ரயிலுக்கு சென்று பம்பாய் ரயிலில் தம்பியை வழி அனுப்பிவிட்டு சக்கரபாணி வீட்டிற்கு வந்து, தம்பியை பாம்பாய்க்கு வழி அனுப்பிவிட்டு வருகிறேன் என்று அம்மாவிடம் சொல்லிவிட்டுச் சென்றார்.
அன்று முழுவதும் அம்மா சற்று மனவருத்தத்துடன் இருப்பதைக் கண்டு ‘அம்மா என்ன ஒரு மாதிரியாக இருக்கிறாய் தம்பி நடித்த முதல் படம் ஜெ ஜெ என்று ஓடி கொண்டு இருக்கிறது 2வது படத்தில் நடிக்க தம்பி வட இந்தியாவுக்கு செல்கிறான். அதை நினைத்து நீங்க ஏன் வருத்தப்பட்டு கொண்டு இருக்கிaர்கள்’ என்று கேட்டார்.

அவரும் சக்கரபாணியை அடிக்கடி நீ என்னை வந்து பார்த்து செல் என்றார். சக்கரபாணி வெள்ளைக்காரர் சினிமா பட டைரக்டர் ஒருவரிடம் ‘இவரால் எப்பிடி சரளமாக ஆங்கிலத்தில் பேச முடிந்தது? தன் தகப்பனார் கோபாலன் நன்றாக ஆங்கிலம் படித்தவர். பெரும்பாலும் இவர் கண்டியில் ஆங்கிலத்தில்தான் பேசுவார்.
(ஆங்கில ஆட்சிக் காலம்) சில சமயங்களில் கோபாலன் தன் மூத்த குழந்தைகளுக்கு ஆங்கிலப் பாடங்களை சொல்லி கொடுப்பார். அப்போது சக்கரபாணி சிறு குழந்தையாக இருந்தாலும் அவருக்கு வயது 4 அவரும் மற்ற குழந்தை அண்ணன், அக்காவுடன் அமர்ந்து ஆங்கில உச்சரிப்புகளை கவனிப்பார். அதோடு மட்டுமல்லாமல் தன்னுடன் சகோதர சகோதரிகளிடம் அவர்கள் ஆங்கிலத்தில் தான் பேசுபவர்கள்.
அப்போது எனக்கு ஆங்கிலம் சொல்லி கொடுங்கல் என்று கேட்பாராம் இப்படி சக்கரபாணி ஆங்கிலத்தின் மேல் ஆர்வம் கொண்டவராக இருந்தார். அதுதான் இப்போது பயன் அளித்தது. பாம்பேக்கு வந்து பட முதலாளியை சந்தித்து எம். ஜி. ஆருக்கு ஏதாவது ஒரு நல்ல சான்ஸ் கொடுங்கள் என்று சொன்னார்.
பட முதாளியும், டைரக்டரும் எம். ஜி. ஆரை ஏற இறங்க பார்த்தார்கள். அந்த சமயம் எம். ஜி. ஆர். ஜிப்பா, பைஜாமா அணிந்து இந்தி நடிகர் போல் நல்ல வாட்ட சாட்டமாக நிற்பதைக் கண்டு எம். ஜி. ஆரிடம் உனக்கு என்ன என்ன தொழில் தெரியும் என்று கேட்டார். உடனே எம். ஜி. ஆர். கடகட என தனக்கு தெரிந்த நடிப்புகளையெல்லாம் வரிசையாக சொன்னார்.
இதைக் கேட்ட அந்த இருவரும் எம். ஜி. ஆருக்கு அருகாமையில் நின்று கொண்டு இருந்த கேசவனை பார்த்தார்கள். இதை புரிந்துகொண்ட கேசவன் பார்க்கும் பார்வைக்கு அர்த்தம் புரிந்து கொண்டு பையன் ஏற்கனவே நாடக கம்பனியில் எல்லா நடிப்பிலும் தேர்ச்சி பெற்றவன் என்று சொன்னார். ஓ. அப்படியா சரி, பையன் ஒரு லொட்ஜியில் தங்க வையுங்கள்.
சாப்பாடு, லொட்ஜ் வாடகை எல்லாம் கம்பனி கொடுத்துவிடும். பிறகு இந்தப் படத்தில் பையனுக்கு என்ன வேசம் கொடுக்கலாம் என்பதை பார்த்து முடிவு எடுக்கலாம். இந்த நேரத்தில் எம். ஜீ. ஆருக்கு வயது 20 ஆகிறது. நேரத்துக்கு நன்றாக சாப்பிட்டுவிட்டு லொட்ஜில் தங்கி இருந்தார். அதிகாலையில் எழுந்து எப்போதும் செய்வது போல் உடற்பயிற்சிகளை செய்வதில் தவறுவதில்லை.
(யோகாசனம்) படப்பிடிப்பு ஆரம்பமாகி நடந்து கொண்டு இருந்தது. இடையில் எம். ஜி. ஆர். டைரக்டர், பட முதலாளி, கேசவன் இவர்களை சந்திப்பதிலும் தவறுவதில்லை. எம். ஜி. ஆர். இந்தப் படத்தில் சி. ஐ. டி. ஒபீசராக வேடம் கொடுக்கலாம் என்று முடிவு செய்தார்கள். பிறகு அந்த வேடம் வேறு ஒருவருக்கு கொடுக்கப்பட்டுவிட்டது. பிறகு எம். ஜி. ஆருக்கு ஜமீன்தார் வேடம் கொடுக்க முடிவானது.
பிறகு அதுவும் அந்த வேடத்திற்கு டீ. எஸ். பாலையாதான் மிக பொருத்தமானவர் என்று ஜெமீன்தார் வேடத்தை டீ. எஸ். பாலையாவுக்கு கொடுத்துவிட்டார்கள். எம். ஜி. ஆருக்கு இந்தப் படத்தில் சரியான கதாபாத்திரம் கொடுக்க முடியவில்லை.
ஆதலால் கம்பனி முதலாளி மிக சிரமப்பட்டு எம். ஜி. ஆரிடம் ரூ. 500/- கொடுத்து ஆறுதல் கூறி அடுத்த படத்தில் கண்டிப்பாக உனக்கு நல்ல கதாபாத்திரம் தருகிறேன் என்று சொல்லி எம். ஜி. ஆரை கேசவனிடம் சென்னைக்கு அனுப்பிவிட்டு வா என்று சொல்லி அனுப்பி வைத்தார் பட முதலாளி.
அதன்படி கேசவன் எம். ஜி. ஆருக்கு சமாதானம் சொல்லி சென்னைக்கு ரயில் மூலமாக அனுப்பி வைத்தார். பாம்பாயிலிருந்து புறப்பட்ட எம். ஜி. ஆர். சென்னை ரயிலில் இறங்கி காலை வீட்டிற்கு வரும் வழியில் அம்மாவையும், அண்ணனையும் எதிர்பாராமல் பார்க்கிறார். எம். ஜி. ஆரை பார்த்தவுடன் அம்மாவுக்கும், அண்ணனுக்கும் அதிர்ச்சி ஆகிறது.
அம்மா மகனை என்ன திடீர் என்று வந்து விட்டாய், அம்மா எங்க நீங்க போயிட்டு வருகிaர்கள் என்று அம்மாவிடம் எம். ஜி. ஆர் கேட்டார். அம்மா உடனே நானும் அண்ணனும் கோயிலுக்கு சென்று அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து விட்டு வந்து கொண்டு இருக்கிறோம். நான் வேலை கிடைக்காமல் ஊர் ஊராக அலைந்து கொண்டு இருக்கிறேன்.
அந்த சமயத்தில் நீங்கள் தேவையில்லாமல் அனாவசிய செலவுகள் செய்து கொண்டு இருக்கிaர்கள். சிறப்பு பூஜை என்றும் தெய்வம் என்று அனாவசிய செலவு செய்தால் அந்த கல்லா எனக்கு வேலை வாங்கி தரப்போகிறது. கோபமாக ரோட்டில் நடந்து கொண்டே அம்மாவிடம் சற்று கோபமாக பேசினார்.
அம்மா மகனே வீட்டில் சென்று பேசி கொள்ளலாம் 1}Z மூவரும் வீட்டிற்கு வந்தார்கள். முதலில் நீ குளித்து விட்டு வா, மெதுவாக உட்கார்ந்து பேசலாம் என்று அன்போடு சொன்னார்.
அவரும் அதன்படி குளித்துவிட்டு சாப்பிட்டுவிட்டு அம்மாவிடமும் அண்ணனிடமும் தானாகவே பாம்பாயில் நடந்த சம்பவங்களை சொன்னார். அதன் பிறகு உள்ளே என்று பெட்டியை திறந்து அவர்கள் கொடுத்த ரூபாயில் 500/- வழியில் சாப்பிட்ட செலவு போக மீதியை அம்மாவிடம் கொடுத்தார். அடுத்த நாள் மீண்டும் சென்னையில் உள்ள சினிமா கம்பனிகளுக்கு ஸ்டுடியோக்களுக்கு வேலை தேடி நடந்தார்.
No comments:
Post a Comment