Wednesday, November 28, 2012

தமிழ்ப்பட வாய்ப்புகளை புறக்கணிக்கும

தமிழ் பட கதைகள் என்னை கவராததால் ஏற்கவில்லை என்றார் பிரியாமணி. இது பற்றி அவர் கூறியதாவது:- டோலிவுட்டில் அங்குலிகா என்ற படத்தில் நடிக்கிறேன். இதுவொரு பொது கருத்துள்ள கதை. இதற்கு முன் இப்படியொரு கதாபாத்திரம் செய்யவில்லை. இப்படத்தின் கதை இரண்டு காலகட்டங்களில் நடக்கிறது. ஒரு பகுதியில் இளவரசியாக நடிக்கிறேன். இது வழக்கமான இளவரசி கதாபாத்திரம் இல்லை. முந்தைய பிறவியின் கதாபாத்திரம். கடந்த கால வாழ்க்கையை குறிக்கும் இந்த கதையில் ஆத்மாவை சந்திக்கிறேன்.
அதன் பிறகு நடப்பதுதான் கதை. அடுத்தமாதம் முதல்வாரம் ஷ¥ட்டிங். இதுதவிர இன்னொரு தெலுங்கு படத்தில் சமுத்ரா இயக்கத்தில் நடிக்கிறேன். இது ஹீரோயினை மையமாக வைத்த கதை. வித்தியாசமான அணுகு முறையுடன் இதன் கரு அமைக்கப்பட்டுள்ளது. இதில் எனக்கு ஜோடி கிடையாது. ஆனாலும் முன்னணி நடிகர் ஒருவரை நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் பேசி வருகின்றனர். தமிழில் எனக்கு வாய்ப்புகள் வருகிறது. ஆனால் எதுவும் என்னை கவரவில்லை. அதனால் எந்த படத்தையும் ஏற்கவில்லை இவ்வாறு பிரியாமணி கூறினார்.

நிர்வாணமாக நடித்தேனா?

முழுப்பொய்  ஆன்ட்ரியா
ஜீவா நடிக்கும் என்றென்றும் புன்னகை படத்தில் நிர்வாண போஸ் கொடுத்து நடித்ததாக வெளியான தகவல்கள் முழுப் பொய் என்று கூறியுள்ளார் நடிகை ஆன்ட்ரியா.
சர்ச்சைகளின் நாயகியாகத் திகழும் ஆன்ட்ரியா பற்றி இப்போது புதிதாகக் கிளம்பியுள்ள தகவல், அவர்நிர்வாண கோலத்தில் நடித்தார் என்பதுதான்.
ஓவியக் கல்லூரி மாணவர் படம் வரைவதற்காக இது போன்று போஸ் கொடுத்து அவர்நடித்துள்ளதாகவும் கூறப்பட்டது.
இது குறித்து ஆன்ட்ரியாவிடம் கேட்ட போது நிர்வாண போஸ் என்பதெல்லாம் பொய்யான செய்திகள்.
என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்துகிற வகையில் ஒரு காட்சியில் நடித்து இருக்கிறேன். அந்தக் காட்சி நிச்சயம் எனக்கு பெயர் பெற்றுத் தரும். ஆனால் அந்தக் காட்சி குறித்து இப்போதே சொல்ல முடியாது என்றார்.

கன்னடத்தில் ஸ்ரேயா பிஸி

தமிழ், தெலுங்கு படங்கள் கைகொடுக்காததால் கன்னட திரையுலகிற்கு சென்று விட்டார் நடிகை ஸ்ரேயா. ரஜினியுடன் சிவாஜி படத்தில் நடித்த பிறகு முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா, கமல், அஜீத் தவிர அத்தனை முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்த ஸ்ரேயா, தமிழில் வாய்ப்புகள் குறைந்ததால் இந்திப்பட உலகிற்கு சென்றார். அங்கு ஓரிரு படங்கள் நடித்த ஸ்ரேயாவுக்கு திடீரென ஆங்கிலப் பட வாய்ப்பு கிடைத்தது. மீரா நாயரின் இரு படங்களில் அடுத்தடுத்து நடித்தார் ஸ்ரேயா. ஆங்கிலப் படங்களில் நடித்ததால் ஹாலிவுட்டுக்குப் போய்விட்டோம் என்று நினைத்துக் கொண்டிருந்த ஸ்ரேயாவுக்கு அந்த வாய்ப்புதான் ஆபத்தாக அமைந்துள்ளது.
தற்போது அவரை தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகம் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டது. தனக்குத் தெரிந்த பிரபலங்கள் மூலம் தூது விட்டும் வாய்ப்புகள் எதுவும் கிடைத்ததாக தெரியவில்லை. இதனால் கன்னட திரையுலகில் தஞ்சம் புகுந்து விட்டார் ஸ்ரேயா. கன்னடத்தில் தயாராகி, தமிழ், தெலுங்கில் டப்பாகவிருக்கும் சந்திரா படத்தில் அவர்தான் கதாநாயகி. சரித்திரப் படம்தான் என்றாலும், திகட்டத் திகட்ட கவர்ச்சி காட்டியிருக்கிறாராம் ஸ்ரேயா. இந்த அஸ்திரம் மீண்டும் தனக்கு தமிழில் வாய்ப்பு தரும் இல்லாவிட்டால் கன்னடத்திலாவது ஒரு இடத்தைப் பிடித்துத் தரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம் ஸ்ரேயா.

பிரசவ நிகழ்வுகளை படமாக்கிய விவகாரம்

கேரள மாநிலத்தில், மாடலிங் துறையில் பிரபலமானவர் நடிகை ஸ்வேதா மேனன் (வயது 38) இவர் மலையாள திரைப் படங்கள் பலவற்றில் நடித்துள்ளார். இவருக்கும் மும்பையைச் சேர்ந்த ஸ்ரீவத்சனுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. கர்ப்பமடைந்த ஸ்வேதாவுக்கு கடந்த செப்டம்பர் 29ம் திகதி மும்பை நானாவதி மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. அவர் மருத்துவமனையில் சேர்ந்தது முதல் பிரசவித்தது வரையிலான நிகழ்வுகள் மலையாள திரைப்பட இயக்குனர், பிளஸ்சி என்பவரால், களிமண்ணு என்ற படத்திற்காக படமாக்கப்பட்டன. இந்தப் படத்தில் நடிகை ஸ்வேதாமேனனும் நடிக்கிறார். பிரசவ காட்சிகள் திரைப்படமாக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பெண்ணின் பிரசவத்தை திரைப்படமாக்கிய செயல் மனித சமுதாயத்திற்கு தேவையற்றது. பெண்மையை அவமானப்படுத்தும் செயல், எனவே நடிகை ஸ்வேதா மேனன் மற்றும் இயக்குனர் பிளஸ்சி உள்பட 5 பேர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி எர்ணாகுளத்தை சேர்ந்த பவுலோஸ் என்பவர் அங்குள்ள முதன்மை குற்றவியல் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

 அஞ்சலி போடும் புதுக் கணக்கு!

குடும்பக் குத்து விளக்கு அஞ்சலி கவர்ச்சி குத்து நடிகையான பிறகு கதை என்பதை மறந்து காசில்தான் முழுக் கவனத்தையும் பதித்திருக்கிறார். கேட்கிற காசை கொடுத்துவிட்டால் போதும் அது புதுமுக நடிகரின் படமாக இருந்தாலும் அம்மணி கண்டுகொள்வதில்லை. வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கி விடுகிறார். அதனால் இப்போது அஞ்சலி வேண்டும் என்று நினைப்பவர்கள் கதையைகூட ரெடி பண்ணாமல் கரன்சி கட்டுகளை ரெடி பண்ணிவிட்டுத்தான் அவரைசந்திக்கிறார்கள்.

அந்த வகையில், முன்னணி டைரக்டர், முன்னணி ஹீரோக்களின் படம் என்றால் சம்பள விசயத்தில் கறாலாக பேசாத அஞ்சலி, வளர்ந்துவரும் ஹீரோக்களின் படங்கள் என்றால் கண்ணை மூடிக்கொண்டு சம்பளம் பேசுகிறாராம். மாட்டுத்தரகு செய்வது போல் டவலை கைமேல் போட்டு மூடிக்கொண்டு அவர் விரல் வித்தை காட்டுவதைப் பார்த்து ஆடிப்போகிறார்கள் படாதிபதிகள். என்றாலும் அஞ்சலிக்கென்று தற்போது ஒரு மார்க்கெட் இருப்பதால், சரியில்லாத படத்தையும் தனது கவர்ச்சியால் தூக்கி நிறுத்தி விடுவார் என்று அவரை முற்றுகையிடுகிறார்கள் படாதிபதிகள். இதனால் அருகில் தாய்குலத்தையும் உட்கார வைத்துக்கொண்டு சரியாக கல்லாக்கட்டி வருகிறார் அஞ்சலி.


No comments:

Post a Comment