Wednesday, November 7, 2012

சுப்பர் சிங்கர் ஆஜித்

ஆஜித்தின் சொந்த ஊர் திருச்சி. ஆஜித்தை வளர்த்ததும் அவனுக்கு குருவாக இருந்ததும் அவனோட பெரியம்மா சமீதாதான். ஆஜித்தோட அம்மா, அப்பா சபானா- நிஷழருக்கு கல்யாணமாகி 10 வருடம் கழிந்து பிறந்த குழந்தை இவன். 6 மாசக் குழந்தையா இருக்கிறப்பவே டி.வியில் சினிமா பாட்டு கேட்டா அதை மழலை பாஷையில் குதப்புவானாம்.
இது கடவுள் வரம்னு அவங்க குடும்பம் உற்சாகப்படுத்தியிருக்கு, கே. கே. நகரில் 4000 குழந்தைகள் படிக்கிற ஆல்ஃபா பள்ளிக்கூடத்தில்தான் ஆஜித்தும் படித்தான். அவங்க பெரியம்மா அங்கேதான் ஆசிரியராக இருந்தார்.
அதனால் அவர்தான் அவனோட இசை ஆர்வத்தை கண்டுபிடித்து வளர்த்தவர். யு. கே. ஜி படிக்கும் போதே வந்தே மாதரம் பாட்டை பாடி, குட்டி ஏ. ஆர். ரகுமான்னு பெயர் எடுத்தவன். அப்ப அதைக் கிண்டல் கூட பண்ணினாங்க. ஆனா இப்ப 11 வயசிலே அதே ஏ. ஆர். ரகுமான் கையால பரிசு வாங்கி சாதித்திருக்கார் என்றார் அவரது அம்மா

பிரகதிக்கு சினிமா வாய்ப்பு

விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பான சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இறுதிப்போட்டிவரை சென்று இரண்டாவது இடம் பிடித்த பிரகதிக்கு பாலாவின் பரதேசி படத்தில் பாட்டுப் பாட வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதர்வா, தன்ஷிகா, வேதிகா நடிக்கும் பரதேசி படத்திற்காக ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்து வருகிறார். இப்படத்தில் வரும் கடைசி பாடலை வித்தியாசமாகவும் புதிய குரலிலும் இசையமைக்க வேண்டும் என்று விரும்பிய ஜி.வி. பிரகாஷ் சுப்பர் சிங்கர் ஜூனியரில் வித்தியாசமான குரலில் பாடி அனைவரையும் கவர்ந்த பிரகதியை தேர்ந்தெடுத்திருக்கிறார். விரைவில் இப்படத்தின் இசை வெளியிடப்பட உள்ளது.
சுப்பர் சிங்கர் ஜூனியரில் இறுதிப்போட்டியில் பாடுவதற்காக நடுவர்கள் மூலம் நேரடியாக தேர்வு செய்யப்பட்டவர் பிரகதி. அமெரிக்காவில் வசித்துவரும் பிரகதி சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவே சென்னைக்கு வந்து தங்கியிருந்தார். இப்போது இவருக்கு ஜி.வி. பிரகாஷ் இசையில் பாட வாய்ப்பு


சர்ச்சை

அதேநேரத்தில் இந்த சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மறுபக்கத்தையும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டத் தவறவில்லை. முதல் பரிசு என்பது திறமையின் அடிப்படையிலா ஓட்டுகளின் அடிப்படையிலா என்ற குழப்பம் உள்ளது என்பதைக் குறிப்பிடும் அவர்கள் “முதல் சுற்றில் கிளாசிக்கல் பாட்டு பாடவேண்டும் என்று நிபந்தனை விதித்தவர்கள், அருமையாக கிளாசிக்கல் பாடிய பிரகதியை விட்டு விட்டு கிளாசிக்கல் வரைமுறைக்குள்ளேயே வராத “வந்தே மாதரம்” பாடலைப் பாடிய ஆஜீத்துக்கு பரிசு கொடுத்தது எப்படி? இந்தப் போட்டியில் கலந்து கிட்ட சின்னப்புள்ளைகளை தொலைக்காட்சி நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்ய வைத்த தங்களோட டி.ஆர்.பி. ரேட்டிங்கை அதிகப்படுத்திக்கிறது சட்டப்படி சரியானதுதானா?” என்று கேள்வி எழுப்புவதுடன் இந்தப் போட்டி நடத்தும் விதம், தேர்வு முறை, பரிசுத் தொகை அனைத்தையும் விமர்சனத்திற்குட்படுத்துகிறார்கள். 11 வயது பையனுக்கு 60 இலட்சம் ரூபா மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்படும் போது அதன் மதிப்பு அந்தப் பையனுக்குத் தெரியாது.
அது அவனது பெற்றோருக்குத்தான் பயன்படும். பெற்றோரின் வானளாவிய ஆசைகளுக்குப் பிள்ளைகளைப் பயன்படுத்தும் போக்கையே இத்தகையப் போட்டிகள் வளர்க்கின்றன என்றும் “சமுதாயத்தால் இது மற்ற பிள்ளைகளின் மீதும் மன அழுத்தத்தை உண்டாக்கும்” என்றும் குறிப்பிடுகின்றனர்.
குழந்தைகள் நல குழுமத்தின் முன்னாள் தலைவர் டொக்டர் மனோ ரமா இதுபற்றி கூறும் போது,
“ரியாலிட்டி ஷோக்கள் மூலமாக குழந்தைகளின் திறமையை வெளிக்கொண்டு வருவது பாராட்டுக்குரியதுதான். அதை ஒளி பரப்பும் முறைகள் சரியான வகையில் இல்லை. போட்டியில் தோற்றுப் போகும் குழந்தைகளின் அழுகையை க்ளோசப்பில் காட்டுவது, அப்போது அவர்களின் பெற்றோர் படும் பதற்றத்தை ஸ்லோ மோஷனில் காட்டுவது, இதில் ஜெயித்தால் மட்டுமே வாழ்க்கை என்பதுபோல பிள்ளைகளை தீவிரப்படுத்துவது இவையெல்லாம் தவிர்க்கப்பட வேண்டும்.
அதுபோல பரிசுத் தொகையும் அவர்களுக்கான புலமைப்பரிசிலாகவோ, சுற்றுலாகவோ இசை சம்பந்தப்பட்டதாகவோ இருந்தால் வளர்ச்சிக்கு உதவும்” என்கிறார் தெளிவாக. இளம் வயதிலேயே திறமையால் அசத்திய சாதனைத் திலகங்களை சரியான வழியில் அழைத்துச் செல்ல வேண்டிய கடமை பெற்றோருக்கும் ஊடகங்களுக்கும் இருக்கிறது.
சக மனிதர்களான நமக்கும்தான்.

மதுஷாலினி தமிழ்ப் படங்களுக்கு முழுக்கு போட முடிவு

தமிழ் படங்களுக்கு முழுக்குப்போட்டு விட்டு பொலிவுட் படத்தில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார் மது ஷாலினி. ‘அவன் இவன் படத்தில் நடித்தவர் மதுஷாலினி.
இப்படத்துக்கு பிறகு ராம் கோபால் வர்மா இயக்கத்தில் டிபார்ட்மென்ட் இந்தி படத்தில் நடித்தார். தொடர்ந்து அவரது இயக்கத்தில் ‘பூத் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் நடித்தார். படம் வெளியாகி வெற்றிபெற்றதையடுத்த தொடர்ந்து திகில் படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறதாம். இதுபற்றி மதுஷாலினி கூறியதாவது: பூத் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்த பிறகு தொடர்ந்து திகில் படங்களில் நடிக்கவே வாய்ப்பு வருகிறது.
பொலிவுட்டில் புதிய படக்குழுவினர் தொடங்கும் மற்றொரு திகில் படத்தில் நடிக்கிறேன். அதேபோல் தெலுங்கு படமொன்றிலும் நடிக்கிறேன். அதுவும் திகில் படம்தான். பூத் ரிட்டர்ன்ஸ் பட ஷ¥ட்டிங்கில் திகில் காட்சிகளில் நடித்த போது எனக்கு எந்த பயமும் ஏற்படவில்லை. இயக்குனர், பட குழுவினர் என்னை சுற்றியே இருந்ததால் பயம் தெரியவில்லை.
இதே படத்தை தியேட்டரில் பார்த்த போது நடுங்கிவிட்டேன். திகில் காட்சிகளில் எப்படி நடித்தேன் என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை. தமிழில் பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் எந்த கதையும் மனதை கவரவில்லை. இதையடுத்து மும்பையில் குடியேற முடிவு செய்திருக்கிறேன். அங்கேயே தங்கியிருந்து இந்தி படங்களில் கவனம் செலுத்த உள்ளேன். மும்பை எனக்கு நல்ல வரவேற்பு தந்திருக்கிறது. அதை அனுபவிக்கிறேன். இவ்வாறு மதுஷாலினி கூறினார்.


 

எம். ஜி. ஆரின் தகப்பனார் வழி பூர்வீகம்

மக்கள் திலகத்துடைய தந்தை கோபாலன். அவர்களுடைய தந்தை, பாட்டனார் உடைய பாரம்பரியம் கோவை மாவட்டத்தில் காங்கேயம் என்ற ஊருக்கு அடுத்து உள்ள புத்துயிர் என்று கிராமம், அதில் ஒரு சிறிய ஜமீன் போல் ஒரு மிராசுதாரர் ஆகவும் வாழ்ந்து உள்ளார்கள். இவர்கள் வாழும் காலத்தில் கோவை மாவட்டத்திற்கு பெயர் “கொங்கு நாடு” என்று சொல்லப்பட்டதாம். அவர்களுடைய ஜாதி கொங்கு வெள்ளாளர் என்ற சொல்லப்படுகிறது.
இந்த கொங்கு நாட்டில் இருந்து அந்தக் காலத்தில் கோபாலன், அவருடைய தாய் தந்தை, கேரளா பாலக்காடு வடவனூருக்கு வந்து குடியேறிவிட்டதாக தெரிகிறது.
எப்படி இருந்தாலும் கோபாலனுடைய பாரம்பரியம் தமிழ்நாடு கோவை மாவட்டம் என்பது ஆய்வில் தெரிகிறது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடைய பாரம்பரியம் தமிழ்நாடு தான் என்பது திட்டவட்டமாக தெரிகிறது. இப்போது நமக்கு எம்.ஜீ.ஆருடைய வாழ்க்கை வரலாறு தான் முக்கியம். பூர்வீகம் தமிழ்நாடு.
இவர் பிறந்தது இலங்கை கண்டி. இவர் படித்தது வளர்ந்தது பிறகு வேலைக்கு சென்றது செந்தமிழ்நாடு கும்பகோணம் இவருடைய அம்மா, அப்பா, அண்ணன்கள், அக்காக்கள் கேரளா நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நமக்கு எம்.ஜி.ஆர். தான் கணக்கு. இவருடைய வரலாறு எப்படி என்பதைத்தான் நாம் அறிய விரும்புகிறோம். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், தான் ஒரு தமிழன் என்பதை பல முறை சொல்லி இருக்கிறார்.
இது மக்கள் திலகத்துடைய தாத்தா, பாட்டி அவர்களுடைய வரலாறு ஆகும். அந்த வரலாறுக்கு உட்பட்ட மக்கள் திகலம் எம்.ஜி.ஆரின் தந்தை கோபாலன். அவர்கள் கேரளாவிற்கு எந்த சூழ்நிலையில் எந்த வருடத்தில் வந்தார்கள் என்பது ஒரு பக்கம். கோவையிலிருந்து சுமார் 30, 40 மைல் தொலைவில் உள்ள பாலக்காடு என்ற பெரும் நகரத்திற்கு அடுத்து உள்ள 20 மைலில் உள்ள வடவனூர் என்ற ஊரில் மருதூர் என்ற இடத்தில் வசித்து வந்த கோபாலன் திருமணம் செய்து கொண்ட பெண்ணின் பெயர் சத்தியபாமா, அவருடைய ஊர் குழல் அந்தம். வடவனூருக்கு அடுத்து உள்ள குழல் அந்தம். கோபாலன் அவர்கள் பட்டப் படிப்பு வரை படித்து உள்ளவர். எந்த விடயத்திலும் கோபப்படமாட்டார்.
மனிதாபிமானத்தோடு நடந்து கொள்பவர். இவர்கள் வடவனூரில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் நான்கு குழந்தைகள் பிறந்தன இதில் இரண்டு பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்து உள்ளன.
இதில் நான்காவது குழந்தைதான் சக்கரபாணி. இந்த குழந்தைகளுடன் கோபாலன் சத்தியபாமா அவர்கள் வடவனூரில் வாழ்ந்து இந்த காலத்தில் கோபாலன் அவர்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கும் இவர்களுக்கும் சொத்து விடயத்தில் தகராறுகள் ஏற்பட்டன.
அது ரொம்ப பெரிய விடயமாக பெரிய அளவில் உண்டாகும் சமயத்தில் கோபாலன் அவர்கள் தர்ம நியாயம் அற்றவர்களுடன் நாம் சேர்ந்து வாழ்வதா என்ற எண்ணத்தோடு இலங்கையில் கண்டியில் உள்ள தன் நண்பர்களுக்கு தன்னுடைய குடும்ப சூழ்நிலையை எழுதுகிறார். அவர்களும் அதை படித்து புரிந்து கொண்டு உங்களுக்கு அங்கு வாழ பிடிக்கவில்லை என்றால் நீங்கள் இங்கு எப்போது வருகிaர்கள் (கண்டி) புறப்பட்டு வரவும்.
வரும் போது தெரியப்படுத்திவிட்டு வரவும் என்று கடிதம் எழுதினார்கள். அந்த கடிதம் கிடைத்த உடனே கோபாலன் மிக ரகசியமாக இந்த விடயத்தை வைத்துக் கொண்டு இலங்கை புறப்படும் ஏற்பாடுகளை செய்கிறார்.
கோபாலன் அவர்கள் பாலகாட்டில் ஒரு சில வருடங்கள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மாவட்ட முனிசிப்பல் நீதிமன்றத்தில் துணை நீதிபதியாக பணியாற்றி வரும் காலத்தில் வடவனூரை சேர்ந்த ஒரு வழக்கில் தனக்கு சாதகமான தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று உறவினர்கள் வற்புறுத்தினார்கள்.
அதை ஏற்றுக் கொள்ளாத துணை நீதிபதி உங்கள் பக்கத்தில் கொஞ்சம் கூட நியாயம் இல்லை. எனவே உங்களுக்கு நான் உதவ முடியாது என்று சொன்னதில் ஏற்பட்ட எதிர்ப்பு அந்த ஊரில் கோபானுக்கு உண்டு.
அதன் படி 1913ல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நான்கு குழந்தைகளையும், தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு இலங்கை வருகிறார். இலங்கை கண்டிக்கு வந்தவுடன் ராமுபிள்ளை வேலுபிள்ளை இருவரும் கோபாலன் குடும்பத்தினருக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கிறார்கள். பிறகு இலங்கையில் கண்டியில் இவர்கள் தங்குகிறார்கள்.
இந்த காலகட்டத்தில் கண்டியில் பிறக்கிறார் எம்.ஜி.ஆர். 1917ல் செவ்வாய் கிழமை காலை 11.36 க்கு பிறக்கிறார். 5 வது குழந்தையாக தாய், தந்தையர் எல்லோரும் சேர்ந்து ராமச்சந்திரா என்று பெயர் வைக்கிறார்கள். அவரை அழைக்கும் போது நான்கு அண்ணன்கள் அக்காமார்கள் ராமச்சந்திரா என்று அழைத்து கொஞ்சி விளையாடும் போதும் அதை பார்த்து கோபால் சத்தியபாமா ரசிப்பார்கள்.
நான்காவது குழந்தையான சக்கரபாணிக்கும் எம்.ஜி.ஆருக்கும் 4 வயது வித்தியாசம் என்று சொல்லப்படுகிறது. எம்.ஜி.ஆருக்கு 3 வயது ஆகும் போது அவர் ஓர் அளவுக்கு ஓடி, ஆடி விளையாடுவதும் அப்பா கோபாலன் வீட்டிற்கு வந்தவுடனே அவரை கட்டிப் பிடித்து கொஞ்சுவாராம்.
இந்த காலகட்டத்தில் கோபாலனுக்கு ஒரு கல்லூரியில் பேராசிரியராக வேலை கிடைத்தது. அதில் இருந்து சில வருடங்கள் கழித்தவர் கண்டி மாவட்ட நீதி மன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்தார். இந்த நான்கு குழந்தைகளுடன் நல்ல வசதியோடு வாழ்ந்து கொண்டு இருக்கும் காலத்தில் கோபாலனுக்கு உடல் நலம் பாதிக்கப்படுகிறது.
கோபாலன் மாரடைப்பால் 1920 ம் ஆண்டு இறந்து விடுகிறார். பிறகு சத்திய தாய் தன் கணவர் இறந்த துயரத்திலே மூழ்கி விடுகிறார். ராமுபிள்ளை, வேலுபிள்ளை ஆறுதல் சொல்லி செல்கிறார்கள்.
அதன் பிறகு தன் கணவரை இழந்த சத்தியபாமா தன் கணவர் வேலை பார்த்த காலத்தில் வாங்கப் பட்ட சொந்த வீடு, சேர்த்து வைத்துக் இருந்த பணம், நகைகள் இவைகளை எல்லாம் செலவுக்கு வைத்து கொண்டு கண்டியிலே வாழ்கிறார். இந்த காலகட்டத்தில் திடீர் என்று விஷகாய்ச்சல் ஏற்பட்டு தன் இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இறந்து விடுகிறார்கள்.
ஏற்கனவே தன் கணவரை பறிகொடுத்து விட்டு துக்கத்தில் இருக்கும் சத்தியபாமாவுக்கு மேலும் ஒன்றுக்கு பின் ஒன்றாக மூன்று குழந்தைகளும் இறந்ததை நினைத்து அழுது புலம்பும் சமயத்தில் எம்.ஜி.ஆர். தன் தாயின் கழுத்தை கட்டிப் பிடித்து அம்மா அழாதே! அம்மா என்று சொல்லுவாராம்.
ஐந்தாவது குழந்தையாக நீ பிறந்த பிறகு தாண்டா பெற்ற அப்பாவையும், உன் கூட பிறந்த 3 பேரும் செத்து போனார்களடா, என்று எம்.ஜி.ஆரை 8pநிt பிடித்து அழுவாராம். அவருடைய சேட்டைகள், விளையாட்டுகள் எந்த கவலையும் தெரியாமல் ஓடி, ஆடி மழலை பேச்சு பேசும் போது எல்லாம் அந்த தாய் பழைய நினைவுகள் எல்லாம் மறந்து சக்கரபாணியையும், ராமச்சந்திரனையும் காப்பாற்ற வேண்டும் என்ற பெரிய சபதத்தோடு மீண்டும் வேலுபிள்ளை, ராமுபிள்ளைகளின் உதவியை நாடுகிறார்கள்.
அந்த சமயம் அவர்கள் இருவரும் அம்மா சத்திய தாயிடம் அண்டி பிழைக்க வந்த இடத்தை விட்டு விட்டு தங்களுடைய சொந்த இடத்திற்கே செல்வது மிகச் சிறந்தது ஆகும். அப்போது சத்திய தாய் சொல்லுகிறார், எனக்கு சொந்த இடம் என்பது கேரளா வடவனூர்தான், அந்த ஊர் வேண்டாம் என்று தான் சபதத்தோடு இங்கு வந்தோம்.
இப்போ அவர் இல்லாமல் வடவனூருக்கு எப்படி செல்வேன்? என்ற கேள்வி அவருக்கு எழுந்தது. தான் அந்த சமயத்தில் கும்ப கோணத்தில் இருக்கும் மதுரை பாய்ஸ் நாடக கம்பெனியில் வேலை செய்யும் நாராயணன் என்பவரின் ஞாபகம் வந்தது. இவர் சத்தியபாமாவுக்கு நெருங்கிய உறவினர். நாராயணனுக்கு சத்திய பாமா தன் குடும்ப நிலைமைகளை பற்றி விரிவாக கடிதம் போடுகிறார்.
அதன்படி அவருடைய அழைப்பின் படி நீங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு கும்பகோணம் வந்து விடுங்கள் என்று சொல்லுகிறார், அதன்படி வேலுபிள்ளை, ராமுபிள்ளை உதவியுடன் சத்தியபாமா குழந்தைகளை அழைத்துக் கொண்டு கும்பகோணம் வந்து சேருகிறார்கள்.
சத்தியபாமா நாராயணனுடைய உதவியுடன் கும்பகோணத்தில் ஒரு சிறிய வீடு வாடகைக்கு பிடித்து வாழ்ந்து கொண்டு இருக்கும் நாட்களில் தன்னுடைய இரண்டு மகன்களையும் எப்படியாவது ஓரளவுக்கு படிக்க வைக்க வேண்டும் என்று நாராயணனிடம் சத்தியபாமா சொல்கின்றார். அதன்படி, இந்த இரண்டு பையன்களையும் கும்பகோணத்தில் உள்ள யானை அடி இடத்தில் உள்ள அரசாங்க பள்ளிக் கூடத்தில் சேர்த்து விட்டார்கள்.
மேலும் பையன்கள் படிப்பதற்கு சிலேட்டு புத்தகங்களையும் வாங்கி கொடுத்து விட்டு பிறகு இந்த பையன்களின் பள்ளி படிப்புக்கு ஆன செலவுகளுக்கும், சாப்பாட்டிற்கும் என்ன செய்வது என்ற பிரச்சினை உண்டாகிறது.
இந்த நேரத்தில் சத்தியபாமா மிக மன தைரியத்தோடு நான் எங்கேயாவது வேலை செய்து என் பிள்ளைகளை காப்பாற்றுவேன் என்று நாராயணனிடம் செல்கிறார். அடுத்து சத்தியபாமா குடி இருக்கும் பகுதியில் அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் இந்த அம்மாவினுடைய நிலைமைகளை பார்த்து இந்த அழகான பையன்களுடைய நிலைமைகளை அறிந்தும் சிலர் வேலைக்கு செல்ல உதவி செய்கிறார்கள்.
இந்த நிலையில் எம்.ஜி.ஆருக்கும் சக்கரபாணிக்கும் 3 வயதுதான் வித்தியாசம். சக்கரபாணி, தம்பியை ராமச்சந்திரா என்று அழைப்பார். பள்ளிக்கூடம் முடிந்து அவர்கள் வீட்டில் இருக்கும் நேரத்தில் இவர்களுடைய தந்தை பற்றி போதனை சொல்லுவார்கள். சத்தியம், தர்மம், நேர்மை, நீதி, பக்தி எல்லாம் நிறைந்தவர் உங்கள் தந்தை, நன்றாக படித்தவர், நீதிபதியாகவும் பேராசிரியராகவும் பணிபுரிந்து பலரிடம் மதிப்பும், மரியாதையும் பெற்றவர்.
அவர் போல் நீங்களும் நன்கு படித்து வாழ்ந்து காட்ட வேண்டும் இதைக் கேட்ட இருவரும் தன் தாயிடம் உறுதி மொழி எடுத்து கொள்கிறார்கள். தந்தை சொல்லுக்கு மந்திரம் இல்லை என்பார்கள். ஆனால் இவர்களுக்கு தந்தைக்கு பதிலாக தாய் சொல்கிறார் மந்திரத்தை. அந்த மந்திரத்தை மனதில் பதிவு செய்து கொண்டவர்தான் மக்கள் திலகம் எம்.ஜி.அர். தன் தாயினுடைய உழைப்பால் மூன்று வேளையும் சாப்பிட்டு கொண்டு பள்ளிக்கூடம் சென்று வருகிறோம் என்ற எண்ணம் எம்.ஜி.ஆரு மனதுக்குள் நாளுக்கு நாள் வளரத் தொடங்கியது.


 

கண்டக்டர் வேலை கிடைத்ததும் ரஜனிக்கு கலெக்டரானது போல் மகிழ்ச்சி

பஸ் கண்டக்டராக வேலை பார்த்துக் கொண்டிருந்த ரஜினிகாந்த். நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றார். அதைத் தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எற்பட்டது. ரஜினிகாந்த் சினிமா பார்க்கப் போனால் ‘கியூ’வில் நிற்பதில்லை. ஒரு ‘ஜம்ப்’ செய்தால் போதும் டிக்கெட் கொடுக்கப்படும் இடத்திற்குப் போய்விடுவார்.
காசு கொடுத்து டிக்கெட் வாங்கிக் கொண்டு போய் படம் பார்ப்பார். ரஜினி இப்படி ‘ஜம்ப்’ செய்து தாவும் போது கியுவில் நிற்பவர்கள் எதிர்ப்புக் காட்டாமல், ‘கப்சிப்’ என்ற இருப்பார்கள். எதிர்ப்புத் தெரிவித்தால் என்ன நடக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும். அந்த வட்டாரத்தில் ரஜினி அவ்வளவு பிரபலம்.
ஒரு சமயம் ‘நாடோடி மன்னன்’ படம் பார்க்க ரஜினியின் நண்பர்கள் கிளம்பினார்கள். ரஜினியின் கையில் பணம் இல்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தார். அடுத்த சில நிமிடங்களில், வீட்டில் இருந்த ஒரு வெள்ளி டம்ளர், மார்வாடி கடைக்கு இடம் பெயர்ந்தது.
ரஜினிக்கு ஐந்து ரூபாய் கிடைத்தது. நண்பர்களுடன் போய், நாடோடி மன்னன் படம் பார்த்தார். இந்த சமயத்தில், குடும்ப நண்பர் ஒருவர் மூலமாக கர்நாடக போக்குவரத்து நிறுவனத்தில், பஸ் கண்டக்டர் வேலை கிடைத்தது.
ரஜினிக்கு ஏக சந்தோஷம். கலெக்டர் வேலை கிடைத்தது போல் மகிழ்ந்து போனார். மகாராணி பெண்கள் கல்லூரி உள்ள சிவாஜி நகர்- சாம்ராஜ் பேட்டை ரூட்டில், 134ம் நம்பர் பஸ்சில்தான் கண்டக்டராக வேலை பார்த்தார் ரஜினி.
பஸ்சில் அவரை பார்ப்பவர்கள் கண்டக்டர் என்றே நம்பமாட்டார்கள். அந்த அளவுக்கு ‘டிப்டாப்’ ஆக உடை அணிவார். பயணிகளுக்கு ‘டிக்கட்’ கிழித்துக் கொடுப்பதும், ரைட் ரைட் என்று கூறுவதும் தனி ஸ்டைலாக இருக்கும்.
கல்லூரி மாணவிகளும், இளம் பெண்களும், ஆள் கறுப்பு என்றாலும், அந்த கண்டக்டர் படு ஸ்டைலுடி என்று தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொள்வார்கள். ஒருநாள் , வேலை முடிந்து ரஜினிகாந்த் வீட்டுக்கு நடந்து போய்க்கொண்டிருந்தார். ஒரு தெருவில் போகும் போது ‘ஐயோ என்னைக் கொன்னுடாதே! விட்டு விடு’ என்று ஒரு பெண் அலறும் சத்தம் கேட்டது.
யாரோ ஒருவன் ஒரு பெண்ணைக் கெடுக்க முயற்சிக்கின்றான் என்று நினைத்தார் ரஜினி. குரல் வந்த திசையை நோக்கித் திரும்பினார். ஒரு பெரிய சுவருக்கு மறுபக்கத்தில் இருந்து அக்குரல் கேட்டது. ‘ஜம்ப்’ செய்து மறுபக்கம் குதித்தார். அங்கே ஒரு ரவுடியின் கையில் சிக்கி இளம் பெண் ஒருத்தி துடித்துக் கொண்டிருந்தாள்.
ரவுடியின் கையில் கத்தி பளபளத்தது. ‘டேய் ராஸ்கல்’ என்ற பாய்ந்தார் ரஜினி. கையில் இருந்த கத்தியை கீழே போட்டு விட்டுத் திரும்பிப் பார்த்தான் ரவுடி. ‘இது என்ன புதுக் குழப்பம்’ என்று கேட்டபடி ஒருவர் ரஜினியிடம் வந்தார். அவர் கையில் ஒரு நோட்டுப் புத்தகம் இருந்தது. அது நாடக வசனப் புத்தகம் என்பதும், அங்கு நடந்து கொண்டிருந்தது நாடக ஒத்திகை என்பதும் ரஜினிக்கு உடனே புரிந்து விட்டது. விழுந்து விழுந்து சிரித்தார்.
இந்த நிகழ்ச்சியினால் எனக்கு நாடகத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. நாடகங்கள் போடத் தூண்டியது என்று கூறுகிறார் ரஜினி. இதன்பின் ஒரு நாடகக் குழுவை ரஜினி அமைத்தார். ‘ஜூவாலை” என்ற நாடகத்தை அரங்கேற்றினார். அந்த நாடகம் மராட்டிய மாவீரர் சத்ரபதி சிவாஜியைப் பற்றியது. சிவாஜி வேடத்தில் ரஜினி நடித்தார்.
சிவாஜி கணேசன் பாணியைப் பின்பற்றி நடித்தார். கையில் தீப்பந்தத்தை பிடித்துக்கொண்டு வீராவேசமாக சிவாஜி பேசுவது போல் ஒரு கட்டம். சிவாஜிகணேசன் பாணியிலேயே சிம்ம கர்ஜனை செய்தார். ரஜனி கூடியிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.
உற்சாகம் அடைந்த ரஜினி, தீப்பந்தத்தை மேலும் தூக்கிப் பிடித்தபடி, வீரவசனத்தைத் தொடர்ந்து, பேசினார். நாடகத் திரையில் தீப்பந்தம் பட்டு, தீ பிடித்துக்கொண்டது. கூடியிருந்தவர்கள் ‘தீ... தீ....’ என்று கத்திக்கொண்டே சிதறி ஓடினார்கள். அப்போதுதான் வீர வசனத்தை நிறுத்தினார் ரஜினி.
ஒருநாள் இப்படி தீ விபத்து ஏற்பட்டாலும், தொடர்ந்து நாடகங்கள் நடத்தி வந்தார். ரஜினி. ‘குருசேத்திரம்’ என்ற நாடகத்தில், துரியோதனன் வேடத்தில் நடித்தார். அவர் நடிப்புக்கு ஏக வ¨வேற்பு நாடகம். முடிந்ததும், முன்னிலை வகித்த கர்நாடக போக்குவரத்து அதிகாரி, மேடைக்கு வந்தார்.
“நம்முடைய சிவாஜிராவ் (ரஜினி) பிரமாதமாக நடித்தார். விரைவில் அவர் சினிமாவில் நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அந்த அளவுக்கு அவர் நடிப்பு பிரமாதம்’ என்று புகழ்ந்தார்.
இதைக் கேட்டு பூரித்துப் போனார் ரஜினி. தொடர்ந்து நாடகங்கள் நடத்தினார். அவர் நடிப்பை சக ஊழியர்கள் புகழ்ந்தனர். ஆனால், ரஜினியின் அப்பாவுக்கு மட்டும் மகன் நாடகத்தில் நடிப்பது கொஞ்சமும் பிடிக்கவில்லை. ‘மாலை நேர கல்லூரியில் சேர்ந்து படி. பொலிசில் சேர்ந்து பெரிய அதிகாரியாகலாம்’ என்று கூறிக்கொண்டிருந்தார். ஆனால், ரஜினிக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டு, நாளுக்கு நாள் வளர்ந்தது. சிலர் அவருடைய கறுப்பு நிறத்தை கேலியாகக் குறிப்பிடுவார்கள் ஆனால், ரஜினி அதையெல்லாம் பொருட்படுத்துவது இல்லை.
சினிமாவில் சேர்ந்தே தீரவேண்டும். நடிகனாக வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டார். இதுபற்றி தன்னுடைய நெருங்கிய நண்பரான புட்ராஜிடம் தெரிவித்தார். ‘சினிமாவில் நடித்தால் நீ நிச்சயம் பெரிய நடிகனாக வருவாய். உன் ஸ்டைல் உனக்கு ரொம்ப உதவும்’ என்றார் புட்ராஜ். ‘கண்டக்டர் வேலைக்கு எப்போது முழுக்குப் போடுவது எப்போது சினிமாவில் சேருவது’ என்று சதா யோசித்தபடி இருந்தார் ரஜினி. அதற்கான வாய்ப்பு எதிர்பாராமல் வந்தது.


 

பாலு மகேந்திரா தேர்ந்தெடுத்த கதை வாடைக் காற்று

வாடைக்காற்று நாவலின் கதைக்களம் நெடுந்தீவாக இருந்த போதிலும், அதே இயற்கைச்சூழலில் பனங்காணிகள், மட்டக்குதிரை  (Ponies) கரை வலை என்பனவுள்ள பேசாலைக் கிராமத்தில் தான் பெரும் பகுதி படமாக்கப்பட்டது.
இலங்கைத் தமிழ்த் திரைப்படமொன்றின் பாடல்கள் இசைத் தட்டாக முதலிலேயே வெளிவந்தது என்ற பெருமையைப் பெற்றது வாடைக்காற்று பாடல்கள்தான்.
வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே என்ற பாடலைப் பாடிய ஜோசப் ராசேந்திரன், இலங்கை வானொலியின் ஒரு அறிவிப்பாளர் இந்தப் பாடல் வானொலி மூலம் இலங்கை, இந்திய ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
விருத்தாசலம் (கே. எஸ். பாலச்சந்திரன்) பாத்திரத்தில் நடிப்பதற்கு பிரபல சிங்கள நடிகர் காமினி பொன்சேகாவைத் தான் முதலில் அணுகினார்கள்.
பிரபலமான கலைஞர்கள் பலர் ஒன்றிணைந்து நடித்த இந்தத் திரைப்படத்தில் பின்னணிக் குரல் கொடுத்தவர்களும் சளைத்தவர்களல்ல. ‘தணியாத தாகம்’ வானொலி நாடகத்தில் ‘யோக்ம்’ பாத்திரத்தில் நடித்த விஜயாள் பீற்றர்,
(அப்புக்குட்டி ரி. ராஜகோபால், அருட்பிதா கரவையூர் செல்வம் ஆகியோரே அவர்கள் வீரகேசரி பிரசுரங்களை செங்கை ஆழியானின் வாடைக்காற்று, அ. பாலமனோகரனின் நிலக்கிளி எனும் இரண்டு நாவல்களிடையே ஒன்றைத் தெரிவு செய்து தரும்படி இயக்குனர் பாலுமகேந்திராவிடம், அவரது நெருங்கிய நண்பரான தயாரிப்பாளர் சிவதாஸன் கேட்டபொழுது நிலக்கிளி நாவலில் வரும் ‘பதஞ்சலி’ பாத்திரத்தில் நடிக்க தென்னிந்தியாவிலும் நடிகைகள் இல்லை. ‘வாடைக்காற்றை’ இலங்கைச் சூழலுக்கேற்ப இலகுவாக படமாக்கலாம் என்றார் பாலு மகேந்திரா.


 

குண்டுராவ்

அபூர்வ ராகங்கள் படத்தில் குடிகாரனாக நடித்த நாகேஷ் தன்னுடைய நிழலை பார்த்து பேசி “சியர்ஸ்” சொல்லி சுவற்றில் கோப்பையை எறிவார். இடைவேளையின் போது ரசிகர்களும் சுவாரஸ்யமாக அவரைப் போலவே சுவரில் கோப்பையை எறிந்து அவரைப் போல் நடந்து கொண்டனர்.
“தமிழ் சினிமாவில் பத்தாண்டுகளுக்குப் பிறகு செய்ய வேண்டியவற்றை இப்போதே செய்பவர் கமல்” என்று அவர் பற்றி நாகேஷ் பெருமையாக கூறினார். நடிகர் கமல் தனது படங்களில் நாகேஷை தவறாமல் இடம்பெற செய்வார். “அபூர்வ சகோதரர்கள்” ‘மைக்கேல் மதன் காமராஜன்’, ‘மகளிர் மட்டும்’ ஆகிய படங்களில் துவங்கி ‘தசாவதாரம்’ வரை கமலின் பெரும்பாலான படங்களில் இவர் இடம்பெற்றார்.
மகளிர் மட்டும் படத்தில் ‘பிணமாக வாழ்ந்த’ நாகேஷ் நடிப்பு ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றது. கலாட்டா கல்யாணம், சுமதி என் சுந்தரி, அன்பே வா உள்ளிட்ட படங்களில் அவரது நகைச்சுவை எல்லாரையும் கவர்ந்தது. நவக்கிரகம், யாருக்காக அழுதான், சர்வர் சுந்தரம், நீக்குமிழி, எதிர் நீச்சல் ஆகிய படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
ஒருமுறை ரசிகர் ஒருவர் நாகேஷிடம் “உங்களுக்கு ஹீரோ மாதிரி பெர்சனாலிட்டி எல்லாம் இல்லை. ஆனா நடிப்பு டான்ஸ் எல்லாவற்றிலும் பிரமாதப்படுத்துaங்களே.... எப்படி உங்களால் இப்படி நடிக்க முடியுது?” என்றார்.
சிரித்தபடியே நாகேஷ், “உங்கள் வீட்டில ஆட்டுக்கல் இருக்குமில்லையா.... அதுல இட்லி தோசைக்கு மாவு அரைச்சு பார்த்திருக்கீங்களா? ஆறு மாசம், ஒரு வருஷத்துக்கு ஒரு தடவை அந்த ஆட்டுக்கல்லை கொத்து வைப்பாங்க. எதுக்கு தெரியுமா? ஆட்டுக்கல்லை பொளிஞ்சா.... மாவு நன்றாக அரைபடும். இட்லி நன்றாக வரும். ருசி உசத்தியா இருக்கும்.
என் முகமும் ஆட்டுக்கல்ப் போல்தான். ஆண்டவன் “அம்மை” என்கிற உளியை வெச்சு முகம் முழுக்க நல்லா பொளிஞ்சுட்டாரு. அதனால் தான் நடிப்புங்கிற இட்லி வருது” என்றார். இந்த பதில் ரசிகரை நெகிழ வைத்தது.
சிரித்து வாழ வேண்டும் என்ற வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் நாகேஷ் இதைத் தெரிவித்திருந்தார். ஐம்பது ஆண்டுக்கும் மேற்பட்ட தமிழ் சினிமா வாழ்க்கையில் மனோரமாவும், நாகேஷ¤ம் ஏராளமான படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர். நாகேஷின் மனைவி ரெஜினாவுடன், மனோரமாவுக்கு மிகுந்த நட்பு உண்டு. திரையில் சாதித்த அவர் விருதுகளில் நம்பிக்கை இல்லாதவர். அவர் இல்லத்தில் எந்த ஒரு விருதும் அலங்காரப் பொருளாக இடம்பெற்றது இல்லை.





No comments:

Post a Comment