நடிப்பு படிப்பு முடிய சில நாட்கள் இருக்கையில் பாலசந்தரைப் பார்க்க போகிறோம் என்று அறிந்தபோது ரஜனிக்கு ஏற்பட்ட உணர்வு
சென்னை நடிப்பு பயிற்சி கல்லூரியில், ரஜினியின் படிப்பு முடிவடைவதற்கு சில நாட்கள் இருந்த வேளையில், அங்கு டைரக்டர் கே. பாலசந்தர் வந்து, மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கப் போகிறார் என்று அறிவித்தார்கள்.
பாலசந்தரைப் பார்க்கப் போகிறோம் என்று அறிந்த போது தனக்கு ஏற்பட்ட உணர்ச்சி பற்றி ரஜினி கூறுகிறார்.
¡லசந்தரின் அரங்கேற்றத்தை பார்த்த போது, சிரித்திருக்கிறேன்; அழுதிருக்கிறேன்; உணர்ச்சி வசப்பட்டிருக்கிறேன்; பிரமித்துப் போயிருக்கிறேன்.
பிறகு ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தை தொடர்ந்து 4 தடவை பார்த்தேன்.. அவர் போட்டோவை பத்திரிகையிலே பார்த்திருந்தேன். அவரைப்பற்றி நிறைய கேள்விப்பட்டிருந்தேன். அவரைப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
அப்போதுதான், பிலிம் இன்ஸ்டிட்டியூட்டுக்கு வரப்போகிறார் என்ற தகவல் வந்தது. எனக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அவரைச் சந்திக்கும் நாளுக்காக ஆவலுடன் காத்திருந்தேன்.
ந்த நாளும் வந்தது. பிரின்சிபல் ராஜாராம்தாஸ் வேகமாக வந்து, ‘பாலசந்தர் சார் இருபது நிமிடம் உங்களுக்காக ஒதுக்கியிருக்கிறார். இங்கே இருபது நிமிடம்தான் இருப்பார். ஆகவே, நிறைய கேள்விகளைக் கேட்காதீர்கள். நல்ல கேள்விகளை மட்டும் கேளுங்கள்’ என்று கூறினார்.
எல்லோரும் ஆவலாக காத்திருந்தோம். இரண்டு பேர் வேகமாக வந்தார்கள். எங்கள் பிரின்சிபல்தான் பாஸ்ட் (வேகம்) என்றால், அதைவிட ‘பாஸ்ட்’ பாலசந்தர் சார்! எனக்கு வேகம்தான் பிடிக்கும் சினிமாவிலும் சரி, வாழ்க்கையிலும் சரி! எங்க அப்பா கொடுத்த பயிற்சி அப்படி!
பாலசந்தர் சார், பார்க்க சின்னப்பையன் மாதிரி இருந்தார். நான் அவரைப் பார்த்து அசந்து போய்விட்டேன். என் கண்கள் மட்டும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தன. மனம் அவர் படங்களை நினைத்துக் கொண்டிருந்தது.
என் பெயரைக் கேட்டார் அது எனக்குக் கேட்கவில்லை. ஏனென்றால் என் மனம் அங்கே இல்லையே! பிறகு சட்டென்று உணர்வு வந்தது. சிலிர்த்து எழுந்து
‘சிவாஜிராவ்’ என்றேன்.
அவர் மெல்ல சிரித்துக் கொண்டார்.
எல்லோரும் கேள்விகள் கேட்டார்கள். நானும், ஏதாவது கேட்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் என் ஸ்டைலில் வேகமாக ஒரு கேள்வி கேட்டேன். ‘ஒரு நடிகனிடம் அவன் நடிப்பைத் தவிர வேறு எதை நீங்கள் எதிர்பார்க்கிaர்கள்?’ என்பதுதான் நான் கேட்ட கேள்விக்கு தமிழ் அர்த்தம்.
நான் வேகமாகக் கேட்டதால், அவருக்கு புரியவில்லை.
‘சாரி புரியவில்லை’ என்றார்.
நான் நிறுத்தி- நிதானமாக மீண்டும் அந்தக் கேள்வியைக் கேட்டேன்.
பாலசந்தர் சிரித்துக் கொண்டே, ‘நடிகன் வெளியே நடிக்கக்கூடாது’ என்றார். இந்தப் பதிலைக் கூறிவிட்டு, மீண்டும் என பெயரைக் கேட்டார் ‘சிவாஜிராவ்’ என்று கூறினேன்.
20 நிமிடங்கள் முடிந்தன. பாலசந்தர் புறப்பட்டார். அவர் என்னை நோக்கி கையை நீட்டினார். நானும் கை நீட்டினேன். அவர் கையில் என் கை! அவர் கையில்தான் என்ன பிடிப்பு! அருகிலிருந்த பார்க்கும் போது எவ்வளவு அழகாக இருக்கிறார்!
எங்கள் ஆசிரியர் கோபாலி அப்போது வந்தார். என்னை அவருக்கு ரொம்ப பிடிக்கும். ‘சார் உங்க படம் என்றால் இவனுக்கு உயிர். அவள் ஒரு தொடர் கதையை 6 தடவை பார்த்திருக்கிறான்!’ என்று அவர் பாலசந்தரிடம் கூறினார்.
பாலசந்தர் சிரித்தபடி, ‘உனக்கு தமிழ் தெரியுமா?’என்று கேட்டார்.
‘கொஞ்சம் கொஞ்சம் தெரியும்’ என்று தமிழில் சொன்னேன்.
‘உனக்குத் தமிழ் தெரியாது என்பது உன் பேச்சில் இருந்தே தெரிகிறது’ என்று பாலசந்தர் சார் சொன்னார்.
பிறகு, ‘நான் வருகிறேன்’ என்று விடைபெற்றுக் கொண்டார். கோபாலியுடன் பேசிக்கொண்டே காருக்குச் சென்றார். ‘எம்.எஸ்.எல். 363’ எண் காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.
அவர் போனதும் கோபாலி என்னிடம் வந்தார். ‘பாலசந்தர் சார் உன்னை பார்க்க விரும்புகிறார்’ என்றார்.
எனக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. பாலசந்தர் சார் எதற்காக என்னை பார்க்க விரும்புகிறார்? பட சான்ஸ் தேடி வருகிறதோ என்று மனம் குறுகுறுத்தது.
பாலசந்தர் சாரின் அழைப்பு வரும் என்று ஆவலோடு நாட்களை எண்ணிக் கொண்டிருந்தேன். 15 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. அழைப்பு ஏதும் வரவில்லை.
முன்பு இருந்த உற்சாகம் இப்போது இல்லை. எல்லோரும் சொல்கிற மாதிரி, ஒரு பேச்சுக்காக அப்படி சொல்லியிருப்பார் என்று நினைத்தேன். அந்த விடயத்தை அத்துடன் மறக்க முயன்றேன்.
இவ்வாறு ரஜினி குறிப்பிட்டுள்ளார்.
இந்த சமயத்தில் பெங்களூரில் இருந்து ரஜினிக்கு ஒரு கடிதம் வந்தது. உடனே புறப்பட்டு வா! என்று அதில் அவர் அண்ணன் எழுதியிருந்தார்.
என்றைக்கும் இவ்வளவு அவசரமாக ரஜினியை அவர் அழைத்தது இல்லை. ஆகவே, என்னவோ, ஏதோ என்று எண்ணியபடி, பிருந்தாவன் எக்ஸ்பிரசில் பெங்களூரூக்குப் புறப்பட்டார்.
இலங்கையின் முதல் தமிழ் திரைப்படத்தில் நடித்த நாயகிக்கு குரல் கொடுத்தவர்
தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு என்ற கிராமத்தில் ஜோன் பெர்னாண்டோ ராணி பெர்னாண்டோ ஆகியோருக்கு மூத்தவராகப் பிறந்தார்.இவருக்கு எட்டு சகோதர சகோதரிகள்.
இவரது கணவர் காலஞ்சென்ற ராஜேந்திரன் பெர்னாண்டோ. பிரதீப்குமார் என்ற மகன் உள்ளார். இலங்கை வானொலியில் முதன் முதலில் சிறுவர் மலர் நிகழ்ச்சியில் பங்குபற்றினார். பின்னர்
சி. சண்முகம் லடீஸ் வீரமணி ஜே.பி. ரொபர்ட் உள்ளிட்ட பலரின் நாடகங்களில் நடித்தார். இவர் நடித்த நாடகங்களில் சுமதி, புரோக்கர் கந்தையா போன்றவை அதிக தடவை மேடையேறியவை. இது தவிர தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்திருக்கிறார்.
இலங்கையில் தயாரான முதல் தமிழ் திரைப்படமான தோட்டக்காரி திரைப்படத்தில் கதாநாயகிக்காக குரல் கொடுத்தார். இவர் நடித்த முதல் படம் புதிய காற்று. இது தவிர தென்றலும் புயலும் படத்தில் நடித்தமைக்காக ஜனாதிபதி விருது கிடைத்தது.
இவர் நடித்த திரைப்படங்கள்
புதிய காற்று (1975)
கோமாளிகள் (1976)
தென்றலும் புயலும் (1978)
ஏமாளிகள் (1978)
அனுராகம் (1978)
1978ல் சிறந்த தமிழ்த்திரைப்பட விருதைப்பெற்ற ‘வாடைக்காற்று’
வாடைக்காற்று 1978 ஆம் ஆண்டில் வெளிவந்த ஈழத்துத் தமிழ்த் திரைப்படம். செங்கை ஆழியானின் வாடைக்காற்று என்ற புகழ்பெற்ற புதினம், அதே பெயரில் திரைப்படமாக்கப்பட்டது.கமலாலயம் மூவிஸ் தயாரித்த இந்தத் திரைப்படம் மன்னார் பகுதியில் உள்ள பேசாலையிலும், வட்டுக்கோட்டை, கந்தரோடை, கல்லுண்டாய், வல்லிபுரம் ஆகிய பகுதிகளிலும் படமாக்கப்பட்டது. மீனவ சமூகத்தின் வாழ்வினைக் கூறும் இத்திரைப்படம் 1978 ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படம் என்ற விருதினைப் பெற்றது.
இத்திரைப்படத்தில் ஏ. ஈ. மனோகரன், கே. எஸ். பாலச்சந்திரன் கலாநிதிக்கே. இந்திரகுமார், எஸ். ஜேசுரட்ணம், ஆனந்தராணி பாலேந்திரா, (இராசரத்தினம்) சந்திரகலா, கே. ஏ. ஜவாஹர் முதலானோர் நடித்திருத்தனர். பல சிங்களத் திரைப்படங்களை இயக்கிய பிரேம்நாத் மொறாயஸ் இந்தத் திரைப்படத்தை இயக்கினார். கே. எஸ். பாலச்சந்திரன் உதவி இயக்குனராக பணியாற்றினார்.
ஈழத்து இரத்தினம், சில்லையூர் செல்வராசன் ஆகியோர் இயற்றிய பாடல்களை ஜோசப் ராசேந்திரன், வி முத்தழகு, சுஜாதா அத்தநாயக்க ஆகியோர் பாடினார்கள். நடன அமைப்பை வேல் ஆனந்தனும் சண்டைப்பயிற்சியை நேருவும் கவனித்துக்கொண்டார்கள்.
தாழையாம் பூ முடிச்சு தடம் பாத்து நடை நடந்து...
தன்னதானதானதன்னா தந்தனன்ன தானானாதந்தானனே தானே தந்தினன்னா ஓ.... ஓ.... தந்தானெனோ
தாழையாம் பூ முடிச்சு தடம் பாத்து நடை நடந்து
வாழை இலை போல வந்த பொன்னம்மா
பொன்னம்மா என்
வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா - என்னம்மா
தாழையாம் பூ முடிச்சு தடம் பாத்து நடை நடந்து
வாழை இலை போல வந்த பொன்னம்மா - என்
வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா
பாளை போல் குணமிருக்கு பக்குவமா குணமிருக்கு – குணமிருக்கு
ஆளழகும் சேர்ந்திருக்கு கன்னையா - கன்னையா - இந்த
ஏழைகளுக்கென்ன வேணும் சொல்லையா
பாளை போல் குணமிருக்கு பக்குவமா குணமிருக்கு
ஆளழகும் சேர்ந்திருக்கு கன்னையா இந்த
ஏழைகளுக்கென்ன வேணும் சொல்லையா
தந்தான தந்தனத் தன்னே ததனன்ன தானானா தானானே
தாயாரின் சீதனமும் ஓ..... தம்பிமார் பெரும் பொருளும் ஓ....
தாயாரின் சீதனமும் தம்பிமார் பெரும் பொருளும்
மாமியார் வீடு வந்தால் போதுமா - அது
மானாபி மானங்களைக் காக்குமா
மானாபி மானங்களைக் காக்குமா
தாழையாம் பூ முடிச்சு தடம் பாத்து நடை நடந்து
வாழை இலை போல வந்த பொன்னம்மா - என்
வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா
தானதான தானதன்னா தானேனனோ
மானமே ஆடைகளாம் மரியாதை பொன்நகையாம்
மானமே ஆடைகளாம் மரியாதை பொன்நகையாம்
நாணமாம் துணை இருந்தால் போதுமே எங்கள்
நாட்டு மக்கள் குலப் பெருமை தோன்றுமே
நாட்டு மக்கள் குலப் பெருமை தோன்றுமே
பாளை போல் சிரிப்பிருக்கு பக்குவமா குணமிருக்கு
ஆளழகும் சேர்ந்திருக்கு கன்னையா இந்த
ஏழைகளுக்கென்ன வேண்டும் சொல்லையா
அங்கம் குறைந்தவனை அங்கம் குறைந்தவனை
அங்கம் குறைந்தவனை அழகில்லா ஆண்மகனை
மங்கையர்கள் நினைப்பதுண்டோ சொல்லம்மா வீட்டில்
மணம் பேசி முடிப்பதுண்டோ சொல்லம்மா
மண் பார்த்து விளைவதில்லை மரம் பார்த்து படர்வதில்லை
மண் பார்த்து விளைவதில்லை மரம் பார்த்து படர்வதில்லை
கன்னியரும் பூங்கொடியும் கன்னையா அவர்
கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா
கண்ணிலே களங்கமுண்டோ சொல்லையா
பாளை போல் சிரிப்பிருக்கு பக்குவமா குணமிருக்கு
ஆளழகும் சேர்ந்திருக்கு கன்னையா இந்த
ஏழைகளுக்கென்ன வேண்டும் சொல்லையா
தாழையாம் பூ முடிச்சு தடம் பாத்து நடை நடந்து
வாழை இலை போல வந்த பொன்னம்மா - என்
வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மாரப்படம் :
No comments:
Post a Comment