Friday, November 23, 2012

ஷெரில் பிரின்டோவை காதலிக்க போட்டி

ஷெரில் பிரின்டோவை காதலிக்க கருணாஸ், விவேக் போட்டியிடுவதுபோல் மச்சான் படத்துக்காக படமாக்கப்பட்டது என்றார் இயக்குனர் ஷக்தி சிதம்பரம். இது பற்றி அவர் கூறியதாவது; கருணாஸ், விவேக் இணைந்து நடிக்கும் படம் மச்சான். இருவரும் அவர்வர் பாணியில் கொமெடியில் கலக்குபவர்கள். இது இரட்டை காமெடி விருந்தாக இருக்கும். நண்பர்களுக்குள் மச்சான் என்ற அழைத்துக் கொள்வது சகஜம். அதுபோல் நெருங்கிய நண்பர்களாக ஆல் இன் ஆல் அழகுராஜா கேரக்டரில் கருணாஸ், அனிமல் ராஜா கேரக்டரில் விவேக் நடிக்கின்றனர். இவர் சினிமா ஷ¤ட்டிங்கிற்கு நாய்களை வாடகைக்கு விடும் வேடம் ஏற்றிருக்கிறார்.
நண்பர்களான கருணாஸ், விவேக் இருவரும் ஷெரில் பிரின்டோவை காதலிக்கின்றனர். அவரை கவர்வதற்காக பலவகையில் முயல்கின்றனர். என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சி என்ற டூயட் பாடலில் கருணாஸ், ஷெரில் பிரின்டோ ஆடிப்பாட விவேக்கும் கற்பனையில் மின்சார கனவு பிரபுதேவாவாகவும், ஷெரில் பிரின்டோவை காஜலாகவும் நினைத்து ஆடும் காட்சிகள் நகைச்சுவையாக படமாக்கப்பட்டுள்ளது. டி.பி.கஜேந்திரன், மயில்சாமி, வெ.ஆ. மூர்த்தி, பாண்டு, கோவைசரளா, வையாபுரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஆஞ்சநேயலு ஒளிப்பதிவு, ஸ்ரீகாந்த் தேவா இசை, பாலமுருகன் தயாரிப்பு, இவ்வாறு இயக்குனர் ஷக்தி சிதம்பரம் கூறினார்.

சர்ச்சையில் சோனா

தேவையில்லாத சர்ச்சையில் சிக்க வைத்து என் வாழ்வை சிக்கலாக்கி விட்டார்கள் என்று சோனா கூறினார். அவர் மேலும் கூறியதாவது, பத்திரிகை ஒன்றில் என்னை பேட்டி ஒன்று எடுத்தார்கள். அவர்கள் ஜாலியாக கேட்ட கேள்விக்கு பதில் சொன்னேன். ஆனால் நான் சொல்லாததையும் எழுதி என்னை சிக்கலில் மாட்டிவிட்டார்கள்.
ஆண்களுக்கு எதிராக நான் தவறான கருத்தை சொன்னதாக எழுதிவிட்டார்கள். சில அமைப்புகள் எனக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தின. இதனால் எனது கடையை திறக்க முடியவில்லை. வியாபாரம் முடங்கி பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. நான் புதிதாக வாடகைக்கு குடிபோக இருந்த வீட்டுக்காரர், அட்வான்சை திருப்பித் தந்து, வீடு தர மறுத்துவிட்டார்.
சில இடங்களில் எனது கடையின் கிளையை திறக்க ஏற்பாடு செய்திருந்தேன். அவை அனைத்தும் முடங்கிவிட்டது. எல்லாவற்றையும் விட, கடந்த சில நாட்களாக மனவேதனையில் தவிக்கிறேன். தேவையில்லாத சர்ச்சையில் என்னை சிக்க வைத்து, என் வாழ்வையே சிக்கலாக்கி விட்டார்கள். சொந்தமாக படம் தயாரித்து பல கோடியை இழந்து இப்போது தான் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறேன். எனது வளர்ச்சியை தடுக்கவும், என்னை அழிக்கவும் யாரோ திட்டமிட்டு சதி செய்கிறார்கள் என்று கருதுகிறேன்.
நான் எதையும் வெளிப்படையாக பேசுகிறவள். எனக்கு நண்பர்கள் அதிகம், எதிரிகளும் இருக்கிறார்கள் என்பதை இப்போது தான் உணர்கிறேன். அவதூறாக எழுதிய சம்பந்தப்பட்ட பத்திரிகை மீது வழக்கு தொடர்ந்திருக்கிறேன்.

கார்த்திகாவுக்கு திட்டு

கோ படத்திற்கு பிறகு அன்னக்கொடியும் கொடி வீரனும் என்ற படத்தில் மட்டுமே நடித்துள்ளார் கார்த்திகா. இதற்கிடையே அவரை தேடி சட்டம் ஒரு இருட்டறை மதகஜராஜா உட்பட சில படங்கள் வந்தன. ஆனால் மொத்த கதைகளையும் கேட்டு விட்டு, சில முன்னணி ஹிரோக்கள் சீன பை சீன கதையில் திருத்தம் சொல்வது போல், கார்த்திகாவும் தனது கெரக்டரில் திரத்தம் செய்தார். இதனால் கடுப்பான டைரக்டர்கள் அவரை கழட்டிவிட்டு விட்டு அவர் இடத்துக்கு மாற்று நடிகைகளை புச் பண்ணினர்.
இந்த செய்தி கோடம்பாக்கத்தில் காட்டுத் தீயாய் பரவியதைத் தொடர்ந்து, இப்போது எந்த பிரபல இயக்குனர்களும் கார்த்திகாவை அணுகவில்லை. அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்கும் டீல் என்ற படத்தில் மட்டுமே நடிக்கிறார்.
அதையடுத்து எந்தப்படத்திற்கான அறிகுறியும் இல்லை. இதனால் நடித்த ஒரு படம்தான். வெளியாகியிருக்கு. அதுக்குள்ள என்னை ரொம்பப் பெரிய நடிகையா நானே பீல் பண்ணிக்கிட்டு ஓவரா பேசிட்டேனோ? என்று இப்போது கண்ணாடி முன் நின்று கொண்டு தன்னைத்தானே திட்டித் தீர்த்திக் கொண்டிருக்கிறார். கார்க்திக்கா, அதோடு, அன்னக்கொடியும் கொடி வீரனும் படத்தின் ரீலிசுக்குப்பிறகு சில ரைக்டர்களை சந்தித்து அடக்க ஒடுக்கமாக சான்ஸ் கேட்கவும் முடிவு செய்திருக்கிறாராம்.

வித்யாபாலனை விமர்சிக்கும் காஜல் அகர்வால்

தமிழ், தெலுங்கில் முக்கிய நடிகையாக திகழும் காஜல் அகர்வால் தனது மனதளவில் ஒரு கொள்கையை கடைபிடித்து வருகிறார். அதாவது, எத்தனை பெரிய ஹீரோவின் படமென்றாலும், படுகவர்ச்சியாக நடிப்பதில்லை என்பதுதான் அது நல்ல சினிமா என்பது குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து கண்டுகளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். எனது படங்கள் அனைத்தும் அப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்றுதான் நான் ஆசைப்படுகிறேன் என்று சொல்லும் காஜல், வித்யாபாலன் நடித்த தி தாட்டி பிக்சர்ஸ் படத்தின் ரீமேக்கில் நடிக்க தனக்கு வாய்ப்பு வந்தபோது ஆபாச காட்சிகளில் நடிக்க வேண்டியதிருக்கும என்பதற்காகவே அந்தப் படத்தை தவிர்ந்து விட்டேன் என்கிறார்.
மேலும் எனக்கு அப்படத்தில் நடித்த வித்யாபாலன் மீது நிறைய மரியாதை இருந்தது. ஆனால் ஒரு பெரிய, நடிகையான அவர் போய் இந்த மாதிரியான கதைகளில் நடிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அதனால் தி தர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் நடித்ததில் இருந்து எனக்கு அவர் மீதிருந்த தனிப்பட்ட மரியாதை என்பது படிப்படியாக குறைந்து வருகிறது என்கிறார் காஜல்.

மீண்டும் வசுந்தரா தாஸ்

வசுந்தரா தாஸை நினைவிருக்கிறதா? ஒரு பாடகியாக அறிமுகமாகி, தொடர்ந்து கமலின் ஹேராமில் நாயகியானவர்.
அஜித்துக்கு ஜோடியாக பின்னர் சிட்டிசனில் நடித்தார். குஷ்பு ரேஞ்சுக்கு தமிழில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்டார். வாய்ப்புகளும் குவிந்தன. அவரே வழக்கம் போல, இந்தியில் நடிக்க ஆர்வத்துடன் கிளம்பினார். மான்சூன் வெட்டிங்கில் நடித்தார். ஆனால் திடீரென காணாமல் போனார். பெங்களூரை விட்டு மும்பைக்கே நிரந்தரமாகக் குடியேறிய வசுந்தரா. ஒரு மியூசிக்கில் பேண்டில் பாடிக்கொண்டிருந்தார்.
குரல் பாதிக்கப்பட்டதால் பாடுவதும் நின்றுபோனது இப்போது நான்கைந்தாண்டுகள் கழித்து பின் நதிகள் நனைவதில்லை என்ற படம் மூலம் மீண்டும் பாடகியாகியுள்ளார்.
இந்தப் படத்துக்கு இசை செளந்தர்யன் கதை, வசனம் எழுதி நாஞ்சில் பி. சி. அன்பழகன் இயக்குகிறார்.





No comments:

Post a Comment