Thursday, November 15, 2012

நிலவு தேன் இறைக்கும் நேரத்திலே -புது உறவு பூத்து நிற்கும் நாணத்திலே!

தண்மையான அதாவது குளுமையானஇரவு நேரத்திலே, இனிமையான நேரத்திலே, நிலவு தேன் இறைக்கும் நேரத்திலே, அவளின் ‘தேனிலவு’ நேரத்தில் (அவள் முதலாம் இரவில் புது உறவை சந்திக்கச் செல்லும் நாள்)
தாழை மரம் என்றால் தாழ் விட்டிருக்கும் மரம். ஒரு பெண் குலம் வழங்க அந்த தாழை மரம் நீர் (பனி பொழிகிறது) தெளித்து (பன்னீர் தெளித்து) அவளை மணவறைக்குள் வரவேற்கிறது. அவள் குலம் தழைத்து வளர வாழ்த்துகிறது.
இப்படிப் பட்ட சூழ்நிலையில் அந்த கன்னிப் பெண்... செல்கிறாள். எப்படிச் செல்கிறாள்? நடை பயின்று செல்கிறாள். நடந்து செல்லவில்லை.... நடைபயின்று என்றால்... குழந்தை எப்படி மெதுவாய், தட்டுத் தடுமாறி, யோசித்து, தயங்கி, அடிமேல் அடி வைத்து நடக்குமோ அதற்குப் பெயர் ‘நடை பயில்’ தல். அப்படி நடை பயின்றபடி செல்கிறாள். சென்றவள் கணவனை/காதலனைக் கண்டு நாணி நிற்கிறாள்.
புதுமணப் பெண்ணிற்கு மனநிலை எப்படி அச்சமும், கலக்கமும், மகிழ்ச்சியும், மயக்கமும் கலந்து இருக்குமோ, அப்படியெல்லாம் அவள் மனமும் ஒவ்வொரு உணர்ச்சியில் தடுமாறுகிறது.
நெஞ்சமதில் அலை எழும்ப, நெஞ்சத்தில் அலை எழும்ப, எப்படிப்பட்ட அலை என்பது அவரவர் மனநிலையைப் பொறுத்தது. அது பய அலையாக மயக்க அலையாக தயக்க அலையாக என பலவகைப் படலாம்.
நெஞ்சத்தில் ஏதேதோ எண்ண அலைகள் எழும்ப தஞ்சம் புகுந்த அந்த மலர் (மங்கை) அடி கலங்க மெதுவாய், நடுங்க வருகிறாள். அல்லது தஞ்ச மலரடி அதாவது தஞ்சம் புகுந்த அவளின் மலரடி (மலர் போன்ற பாதம்) கலங்க நடந்து வருகிறாள். (எப்படியும் அவள் அவனிடம் தஞ்சம் புகுந்து விட்டாளாம்)
பயந்து தயங்கி இடை துவண்டு (பயத்தால் இடை துவண்டு) வருகிறாள். இடையை இப்படியும் அப்படியாக ஆட்டி வருகிறாள் என்பது இன்னொரு பொருள். வந்தவள் தன் பயத்தைப் போக்கிக்கொள்ள அவள் காதலனின் அன்பை, காதலை நினைந்து தன்னை சற்றே அமைதிப் படுத்தி நின்றாள்.
மனம் என்னவோ விண்ணளந்து, பறந்து மகிழ்ந்து, சிறகடித்து, கற்பனையில் மிதக்க,
அவள் கண்கள் மட்டும் மண்ணை நோக்கி தாழ்த்திருக்கிறது. அவள் மண்ணளந்து நடக்கிறாள். மண்ணளக்க வேகமாக நடந்தால் முடியாது. அடிமேல் அடிவைத்து மெதுவாக நடந்தால் தான் மண்ணை அளக்க முடியும். அப்படி அவள் அடிமேல் அடிவைத்து, நடந்து (அடி என்பது அளவுகோல்+பாதம் என்று இரு பொருள் கொள்ளலாம்) நடுங்கியபடி, பயந்து, தயங்கி வருகிறாள்.
அவள் பொன்னை ஒத்த மேனி, பொன்னை சரியாக அளவாக அளந்து செதுக்கிய மேனி மெல்ல நடுங்கியபடி வருகிறாள். வந்த அவள், அவளை (அவள்= பூவை) பூவையை அளந்த அவனின் முகத்தைக் கண்டு நின்றாள்.
பூ போன்ற அவளை அளந்த அவன் என்றும் பொருள் கொள்ளலாம். இங்கு அளப்பது என்பது எடைபோடுவது, அவளை அவள் மனக்கலக்கத்தை, பயத்தை, ஆசையை, அன்பை, அழகை எடைபோடும் அவனின் முகம் கண்டு நின்றாள்.
ஒருவழியாக பலவிதமான எண்ண அலைகள் மோத அறைக்குள் நுழைந்து அவனையும் கண்டுவிட்டாள்... இனி, அந்த அறைக்குள் அவளை பொட்டும் பூவும் அலங்காரங்களும் வரவேற்கின்றன.
பொட்டும் பூவுமாக அவள் மெல்ல வருகிறாள் என்று வரும். அல்லது ‘பூவிருக்க’ என்றால் கொலுவிருக்க, வீற்றிருக்க என்று இன்னொரு பொருளும் உண்டு. எனின், அவன் பூவிருக்கிறான் (வீற்றிருக்கிறான்).
பூவைக்காக காத்திருக்கிறான் என்றும் வரும். எங்கும் அலங்காரங்கள் தொங்க, பூத்தமலர்களின் மணம் அறையெங்கும் பரவியிருக்கிறது. பூத்த அவனின் அல்லது அவளின் மணமும் சேர்கிறது. இனி பயமும் அச்சமும் விலக, மயக்கம் மேலோங்குகிறதாம். அதனால் அவள் ஒருவழியாக கட்டிலுக்கு அருகில் சென்றுவிடுகிறாள். அவனின் இரு கண்விழியில் காதல் எனும்
கவிதை கண்டு நின்றாள்.
அவனின் இரு கண்விழியையே கவிதையாய்
கண்டு நின்றாள்.
அவன் இரு கண்விழியில் தன் நிழல்
இங்கு தன்னைக் கவிதையாய் வரித்துக் கொள்கிறாள்
கண்டு நின்றாள்.
என்று அவரவர் கற்பனைக்கேற்ப எப்படி
வேண்டுமென்றாலும் பொருள் கொண்டு மகிழலாம்.


தண்ணிலவு தேன் இறைக்க...

தண்ணிலவு தேன் இறைக்க
தாழைமரம் நீர் தெளிக்க
கன்னி மகள் நடை பயின்று சென்றாள்
இளம் காதலனைக் கண்டு நாணி நின்றாள்
நாணி நின்றாள்
நெஞ்சமதில் அலை எழும்ப
தஞ்சமலர் அடி கலங்க
அஞ்சி அஞ்சி இடை துவள வந்தாள் அங்கு
அன்பருள்ளம் தனை நினைந்து நின்றாள்
நினைந்து நின்றாள்.
விண்ணளந்த மனமிருக்க
மண்ணளந்த அடியெடுக்க
பொன்னளந்த உடல் நடுங்க வந்தாள் ஒரு
பூவளந்த முகத்தைக் கண்டு நின்றாள்
கண்டு நின்றாள்
பொட்டிருக்க பூவிருக்க
பூத்தமலர் மணமிருக்க
கட்டிலுக்கு மிக நெருங்கி வந்தாள் இரு
கண்விழியில் கவிதை கண்டு நின்றாள்.

நான் உங்கள் தோழன்

இலங்கையில் அதிகமான தமிழ்த் திரைப்படங்களை தயாரித்தவர் வி.பி. கணேசன்
நான் உங்கள் தோழன் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த ஈழத்து தமிழ்த் திரைப்படம் 1978 ஆம் ஆண்டில் மொத்தம் 6 ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்பட்டமை இலங்கை தமிழ் திரைப்பட வரலாற்றில் ஒரு சாதனை ஆகும். அவற்றுள் முதலாவது திரைப்படந்தான் நான் உங்கள் தோழன். தொழிற்சங்கத் தலைவர்களில் ஒருவரான வி.பி. கணேசன் தனது முதலாவது படமான புதிய காற்றுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து எடுத்த திரைப்படம்.
அவரே இந்த முறையும் பிரதான பாத்திரத்தில் நடித்தார். சுபாஷினி, கே.ஏ. ஜவாஹர், எஸ். ராம்தாஸ், எம்.எம்.ஏ. லத்தீப், ருக்மணி தேவி போன்ற பலரை தன்னுடன் நடிக்கவைத்தார்.
எஸ்.வி. சந்திரன் இத்திரைப்படத்தை இயக்கினார். அவரே படத்தொகுப்பாளரும் கூட எம்.கே. ரொக்சாமி இசையமைக்க, சாந்தி, முருகவேள், சாது ஆகியோர் இயற்றிய பாடல்களை வி. முத்தழகு, கலாவதி, கே.எஸ். பாலச்சந்திரன் (மெல்லிசைப்பாடகர்) (சுண்டிக்குளி பாலச்சந்திரன்) மொஹிதீன் பெக். கனகாம்பாள் என்பவர்கள் பாடினார்கள்.
கொழும்பு, மலையகம் என்பவற்றோடு யாழ்ப்பாணத்து நகர வீதிகளிலும், மட்டக்களப்பு மாமாங்கத் திருவிழாவிலும் கூட படப்பிடிப்பு நடத்தினார்கள்.
வி.பி. கணேசன் ஒருவரே இலங்கையில் அதிகம் (மூன்று) தமிழ்த் திரைப்படங்களை தயாரித்தவர். அவர் மூன்றிலும் வெவ்வேறு இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், கதாநாயகிகள், துணைக் கதாநாயகர்கள் என்று சந்தர்ப்பம் கொடுத்தார்.
அக்கால இந்தியப் படங்களில் சில வேளைகளில் அரசியல் தலைவர்களின் மகாநாடுகள், இறுதி ஊர்வலங்கள் என்பனவற்றை இணைத்துக் கொள்வதைப் போல இத்திரைப்படத்தில் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் இறுதி ஊர்வலம் இணைக்கப்பட்டது.

கண்டக்டராக வேலை பார்த்த ரஜனி இரண்டு ஆண்டு விடுமுறையில் படித்தார்

பெங்களூரில் பஸ் கண்டக்டராக வேலை பார்த்த ரஜினிகாந்த், நீண்ட விடுமுறையில் சென்னைக்கு வந்து திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து 2 ஆண்டுகள் நடிப்புப் பயிற்சி பெற்றார்.
நடிப்பு, டைரக்ஷன், ஒளிப்பதிவு, எடிட்டிங், திரைக்கதை, வசனம் எழுதுதல் ஆகியவற்றில் பயிற்சி அளிப்பதற்காக முதன் முதலாக புனேயில் திரைப்படக் கல்லூரியை மத்திய அரசு தொடங்கியது.
அதேபோல் சென்னையில் ‘பிலிம் இன்ஸ்டிடியூட்’ 1973 ல் தொடங்கப்பட்டது. இதற்கு தலைவராக பி. நாகிரெட்டியும், நிர்வாகி (கரஸ்பான்டெண்ட்) ஆக டி. வி. எஸ். ராஜாவும் இருந்தனர். ராஜராம்தாஸ் முதல்வராக இருந்தார்.
இந்த பிலிம் ‘இன்ஸ்டிடியூட்’ விளம்பரம் ஒருநாள் பத்திரிகைகளில் வெளியாயிற்று. நடிப்பு, டைரக்க்ஷன், எடிட்டிங், ஒளிப்பதிவு முதலியவற்றில் பயிற்சி பெற விண்ணப்பம் அனுப்பலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த விளம்பரத்தை ரஜினி பார்த்தார். ‘நடிப்பு பயிற்சி பெற்றால், சினிமாவில் சுலபமாக நுழைந்து விடலாம்’ என்று நினைத்தார். விண்ணப்பம் அனுப்பினார். சில நாட்களில் நேர்காணலுக்கு வருமாறு கடிதம் வந்தது.
நண்பர்களிடம் விடைபெற்றுக் கொண்டு, சென்னைக்கு ரயில் ஏறினார். குறிப்பிட்ட நேரத்தில் நேர்காணலுக்கு பிலிம் ‘இன்ஸ்டிடியூட்’டுக்குச் சென்றார். அங்கு சினிமா பற்றி பல கேள்விகள் கேட்டனர். கேள்விகளுக்கு தன்னம்பிக்கையுடனும் புத்திசாலித்தனத்துடனும் பதில் கூறினார்.
கேள்விகளை அவர் எதிர்கொண்ட முறை, ஸ்டைலாக பதில் சொன்ன விதம், தேர்வு செய்யும் அதிகாரிகளைக் கவர்ந்தன. நடிப்பு பயிற்சி பெற ரஜினியை அவர்கள் தேர்வு செய்தனர்.
ரஜினிக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. பெங்களூருக்கு திரும்பிச் சென்றார். தந்தையிடமும், அண்ணன்களிடமும் விஷயத்தைச் சொன்னார். ரஜினி நடிப்புப் பயிற்சி பெறுவதில், தந்தைக்கு விருப்பம் இல்லை. அண்ணன்கள் அரைகுறை மனதுடன் சம்மதித்தார்கள். ‘கண்டர்டர் வேலையை விட்டு விடாதே! நீண்ட விடுமுறை எடுத்துக்கொண்டு, நடிப்புப் பயிற்சிக்கு போ!’ என்றார்கள்.
ரஜினியின் நண்பர்கள் மத்தியில் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. ‘எதிர்காலத்தில் பெரிய நடிகனாக வருவாய்!’ என்று வாழ்த்தினார்கள். ரயில் நிலையத்துக்குப் பெரும் திரளாக வந்து வழியனுப்பினார்கள்.
பிலிம் இன்ஸ்டிடியூட்டில் நடிப்புப் பயிற்சி பெறுவதற்காக ரஜினி உட்பட மொத்தம் 36 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
சினிமாவில் எப்படி நடிக்க வேண்டும். எப்படி வசனம் பேசவேண்டும் என்றெல்லாம் அங்கு பயிற்சி அளித்தார்கள்.
உலகப் புகழ் பெற்ற திரைப்படங்களை எல்லாம் அங்கு போட்டுக்காட்டுவார்கள். சார்ல்ஸ் லாப்டன், கிளார்க் கேபிள், மார்லன் பிராண்டோ, கிரிகிரிபெக் முதலான நடிகர்கள் நடித்த படங்களை எல்லாம் ரஜினி பார்த்தார். நடிப்பின் பல்வேறு பரிமாணங்களை அறிந்து கொண்டார்.

40 வயதுக்கு மேற்பட்டோர் மீது மோகம்

சம வயதுடையவர்களுடன் நடிக்காமல் 40 வயதான ஹீரோக்களுடன் நடிப்பது ஏன் என்றதற்கு பதில் அளித்தார் அசின். கோலிவுட் படங்களிலிருந்து பொலிவுட்டுக்கு தாவினார் 27 வயதாகும் அசின். அங்கு 40 வயதை கடந்த ஆமிர்கான், சல்மான், அக்ஷய்குமார் போன்ற ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். சம வயதுள்ள ஷாஹித் கபூருடன் இந்தியில் ரீமேக் ஆகும் ‘வேட்டை’ படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்கவில்லை.
இதுபற்றி அசினிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: 40 வயதை தாண்டிய நடிகர்கள் என்பதைவிட இந்தியில் சுப்பர் ஸ்டார்களாக விளங்கும் நடிகர்களுடன் எனது பொலிவுட் பட வாழ்க்கையை தொடங்கினேன் என்பதுதான் சரி.
அதுதான் எனது வெற்றிக்கு காரணமாக இருந்தது.
அதேநேரம் சம வயதுள்ள நடிகர்களுடன் நடிக்க விரும்புகிறேன். ஆனால் இவர்களுடன் ஷ¥ட்டிங் தளத்தில் பழகும் தன்மை இதுவரை நான் பழகிய தன்மையிலிருந்து மாறுபட்டிருக்கும்.
தென்னிந்திய படங்களிலிருந்து வந்த ஹீரோயின்கள் பொலிவுட்டில் பெரிய அளவில் வெற்றி பெறாதது பற்றி கேட்கிறார்கள். ஸ்ரீதேவிக்கு பிறகு தென்னிந்திய நடிகைகள் யாராலும் பொலிவுட்டில் வெற்றி பெற முடியவில்லை.
இங்குள்ள கலாசாரத்தை புரிந்தவர்களால் மட்டுமே வெற்றிபெற முடியும். அதை என்னால் செய்ய முடிந்ததுதான் வெற்றிக்கு காரணம். என்னைப் பொறுத்தவரை சில கட்டுப்பாடுகள் வைத்திருக்கிறேன். யாருடனும் டேட்டிங் செய்வதில்லை என்பது அதில் முக்கியமானது. இவ்வாறு அசின் கூறினார்.

யாமி

,யக்குனர் கெளதம் மேனன் தயாரிக்கும் படம் தமிழ். செல்வனும் தனியார் அஞ்சலும் பிரேம்சாய் இயக்குகிறார்.
ஜெய் ஹீரோ அவருக்கு ஜோடியாக நடிக்க இந்தி நடிகை யாமி கெளதம் ஒப்பந்தம் செய்யப்பட இருந்தார்.
ஆனால் அப்போது இந்தியில் பிசியாய் இருந்த யாமியால் இந்தப் படத்துக்கு திகதி கொடுக்க முடியவில்லை அதன்பிறகு அனன்யா நடிப்பதாக இருந்தது. ஆனால் படம், தமிழ், தெலுங்கு மொழியில் தயாராவதால் அனன்யா அதற்கு பொருத்தமாக இருக்க மாட்டார் என்று கெளதம் மேனன் கூறியதாக தெரிகிறது.
இதைத் தொடர்ந்து அஞ்சலி, சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் யாமியே வலிய வந்து படத்தில் நடிக்க திகதி தருகிறேன் என்று ஒப்புக் கொண்டிருக்கிறார். இதனால் இம்மாத இறுதியில் படப்பிடிப்பை தொடங்குகின்றனர். அரவான் படத்துக்கு பிறகு பாடகர் கார்த்திக் இசை அமைக்கிறார்.
ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். சந்தானம், வி.டி.வி. கணேஷ் ஆகியோரும் நடிக்கிறாரர்கள், காதல், நகைச்சுவை கலந்த படம் என்கிறார்கள்.



அழகை பேண ஆயுர்வேத சிகிச்சை

சினிமா களத்தில் இரண்டாவது இன்னிங்சில் இறங்கியிருக்கும் நயன்தாராவுக்கு இன்னும் அதே மெளசு இருக்கத்தான் செய்கிறது. மற்ற முன்னணி நடிகைகளிடம் இல்லாத அப்படி என்னதான் அதிசயம் நயன்தாராவிடம் இருக்கிறதோ தெரியவில்லை.
ஒரு படத்திலாவது அவருடன் நெருக்கமாக நடித்துவிட வேண்டும் என்று பல நடிகர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் மெளசை அப்படியே காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கும் நயன்தாரா, மாதம் ஒரு முறை கேரளத்துக்கு சென்று உடம்பு இளமையாகவும், தோல் மினுமினுப்பாகவும் இருப்பதற்காக சில ஆயுர்வேத சிகிச்சை முறைகளை எடுத்து வருகிறாராம்.
பிரபுதேவாவைவிட்டு பிரிந்தபோது அழுது வடிந்த முகத்துடனும், சோர்வடைந்த உடல் கட்டுடனும் இருந்த நயன், இப்போது முகப்பொலிவுடனும், செழிப்பான தேகத்துடனும் பளபளவென்று இருக்கிறார் என்றால் அதற்கு இந்த சிகிச்சைதான் காரணமாம்.
ஆனால் இந்த அழகை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்றால், அந்த சிகிச்சைக்காக ஒவ்வொரு முறையும் நான்கு நாட்கள் வீதம் செலவிட வேண்டுமாம். அதனால் தான் நடிக்கும் எந்தப் படமாக இருந்தாலும், மாதம் ஒரு 4 நாட்கள் தனக்கு கட்டாய லீவு வேண்டும் என்பதை முன்கூட்டியே சொல்லிவிடுகிறார் நயன்.

ரிச்சாவுக்கு மிரட்டல்

மணம் புரிந்து கொள்ள
திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தி ரிச்சாவை அவரது காதலரும் நடிகரும் மிரட்டுவதாக கோடம்பாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ‘ஒஸ்தி, மயக்கம் என்ன படங்களில் நடித்தவர் ரிச்சா. கார்த்தி நடிக்கும் ‘பிரியாணி’ படத்தில் கெரக்டர் பிடிக்கவில்லையென்று சமீபத்தில் வெளியேறினார்.
இந்நிலையில் தன்னை மணந்து கொள்ளும்படி ரிச்சாவை அவரது போய் பிரெண்டும் போட்டோகிராபருமான சுந்தர் ராம் மிரட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘மயக்கம் என்ன’ படத்தில் ரிச்சா நடித்தார். அதே படத்தில் தனுஷின் நண்பராகவும், ரிச்சாவின் காதலனாகவும் சுந்தர் ராம் நடித்திருந்தார்.
இவர்களுக்குள் மலர்ந்த நட்பு காதலாக மாறியதாக கூறப்படுகிறது. அதன் அடையாளமாக 7 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள கெமரா ஒன்றை சுந்தர் ராமுக்கு ரிச்சா பரிசளித்தாராம். சமீபகாலமாக ரிச்சா படங்களில் கவனம்
செலுத்த ஆரம்பித்திருக்கிறார். வெங்கட் பிரபுவின் ‘பிரியாணி’ படத்தில் கெரக்டர் பிடிக்கவில்லை என்று வெளியேறிய ரிச்சா தெலுங்கில் அல்லு அர்ஜுன் படத்திலும் நடிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் வேறு இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். திருமணத்துக்கு சம்மதிக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்று சுந்தர் மிரட்டினாராம்.
மேலும் கைகளில் அறுத்துக்கொண்டு பிளாக் மெயில் செய்ததுடன் அன்பாக ரிச்சா வாங்கி கொடுத்த கெமராவையும் அவர் உடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் கோலிவுட் டோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி ரிச்சாவின் மெனேஜர் கல்யாண் கூறும் போது ‘ரிச்சாவின் இமேஜை கெடுக்க சிலர் இதுபோன்ற வநத்தியை கிளப்பிவிட்டிருக்கிறார்கள். ரிச்சாவும், சுந்தர் ராமும் சில காலமாக தொடர்பில் இல்லாமல் இருக்கிறார்கள்.
அப்படி இருக்கும்போது கல்யாணம் செய்துகொள்ள அவர் எப்படி மிரட்டுவார்? அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள். இதுதவிர வேறு எந்த உறவும் இல்லை என்றார். சுந்தர் ராம் கூறும் போது ‘இது எல்லாம் வநத்தி. நாங்கள் இருவரும் எப்போதோ பிரிந்துவிட்டோம் என்றார்.

வடிவேலுக்கு ஆப்பு

கடந்த தேர்தலுக்குப்பிறகு சினிமா வாய்ப்புகளே இல்லாமல் வீடே கதியென்று கிடக்கிறார் வடிவேலு. மீண்டும் வடிவேலுவுக்கு சான்ஸ் கொடுத்தால் தங்களுக்கு எதேனும் பிரச்சினைகள் வருமோ என்று இயக்குனர்களும் தயங்கி வருகிறார்கள். ஆனால் இந்த நிலையிலும், சிம்புதேவன் இயக்கும் இம்சை அரசன் இரண்டாம் பாகம் உட்பட சில படங்களில் தான் கதாநாயகனாக மீண்டும் பிரவேசிக்கப்போவதாக அவ்வப்போது செய்திகள் வெளியிட்டு தன்னை சினிமா உலகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நினைவுபடுத்தி வருகிறார் வடிவேலு.
இந்த நிலையில் தேமுதிகவில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்துள்ள மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் பட்டத்து யானை படத்தின் மூலம் ரீ.என்ட்ரி ஆக முயற்சி எடுத்திருக்கிறார் வடிவேலு. ஆனால் கடைசி நேரத்தில் அப்படத்தில் நாயகனாக நடிக்கும் விஷால், தனது நண்பரான சந்தானத்தை உள்ளே இழுத்து விட்டாராம்.
வடிவேலு அப்படத்தில் நடிக்க முயற்சி எடுக்கிறார் என்பதை சிலர் சொன்ன போதும், வடிவேலுவுக்காக எனக்கு வந்த வாய்ப்பை விட நான் தயாராக இல்லை. அப்படி நான் விட்டால் எனது நண்பர் விஷால் என்னை கோபித்துக்கொள்வார். விஷாலா? வடிவேலா? என்று பார்த்தால் எனக்கு விஷால்தான் முக்கியம் என்று நெத்தியடியாக சொல்லிவிட்டாராம் சந்தானம்.

ஒரு முத்தத்துக்கு ரூ.5 இலட்சம்

சேட்டை என்று தலைப்பு வைத்ததால்தானோ என்னவோ அந்தப் படத்தில் நடிக்கும் அஞ்சலி ஹன்சிகா இருவரும் ஆரம்பத்திலிருந்தே ஏதாவது சேட்டைத் தனம் செய்து கொண்டேயிருக்கிறார்களாம். ஆரம்பத்தில் டெல்லி பெல்லி படத்தில் இருந்தது. போல் வல்கரான வசனங்களை நான் பேச மாட்டேன் என்று அடம்பிடித்தார் ஹன்சிகா. இதனால் சில வார்த்தைகளை அவருக்காக திருத்தம் செய்தனர்.
அதையடுத்து முத்தக் காட்சியில் நடிக்கவே முடியாது என்று கடும் சேட்டை செய்திருக்கிறார் அஞ்சலி. அதிலும் அவரது தாய்குலம் புகுந்து என் மகளாவது? முத்தம் கொடுப்பதாவது? இப்படியொரு படமே எங்களுக்குத் தேவையில்லை என்று சொல்லி ஸ்பாட்டில் இருந்தே அஞ்சலியை இழுத்துச் சென்று விட்டாராம். இந்தப் பிரச்சினை காரணமாக சில நாட்கள்
படப்பிடிப்பே தடைப்பட்டிருக்கிறது. என்றாலும் அப்படியொரு காட்சி படத்திற்கு அவசியம் தேவை என்று ஒரு வழியாக அஞ்சலியிடம் விளக்கி, அவரது தாய்க்குலத்தையும் சம்மதிக்க வைத்து ஆர்யா அஞ்சலியின் உதட்டு முத்தக்காட்சியை படமாக்கியிருக்கிறார்கள்.
ஆனால் இந்த ஒரு காட்சியை வைத்தே எக்ஸ்ட்ராவாக 5 லட்சத்தை கறந்து விட்டாராம் தாய்குலம். செய்தியறிந்து அடி ஆத்தி, அப்படின்னா அஞ்சலியோடு ஒரு இச்சியோட ரேட்டு 5 லட்சமா? ரொம்ப ஜாஸ்தியா இருக்குதே அம்மணி என்று அடுத்தடுத்து அஞ்சலியை புக்பண்ணவிருக்கும் படாதிபதிகள் கரண்ட் கம்பத்தில் கை வைத்தது போல் ஷொக்கில் நிற்கின்றனர்.






No comments:

Post a Comment