ராமையா ஆசாரி முத்துசாமி என்ற
இயற்பெயர் கொண்ட ஆர் முத்துசாமி தமிழ்நாட்டில், நாகர்கோவில் என்ற ஊரில் ராமையா பாகவதர் என்பவருக்குப் பிறந்தார். தந்தை
ஒரு இசையமைப்பாளர்.
சிறு வயதிலேயே முத்துசாமி
இசையில் ஆர்வம் கொண்டிருந்தார். தந்தை அவருக்கு குட்டி வயலின் ஒன்றை வாங்கிக் கொடுத்தார். 10 வயதாகும் போது வயலினில் ஓரளவு
தேர்ச்சி பெற்றார். அதன் பின்னர் மேலும் பயிற்சி பெற்று சென்னையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளில் வயலின் வாசிக்க சந்தர்ப்பங்கள்
கிடைத்தன.
முதலாவது சிங்களத் திரைப்படம் ‘கடவுனு
பொறந்துவ’ 1947, சனவரி 21 ஆம் திகதி இலங்கையில் வெளியிடப்பட்டது. இதன் இசையமைப்பு
சென்னையிலேயே இடம்பெற்றது.[] இப்படத்தின் இசையமைப்பாளர் ஆர். நாராயண ஐயர் முத்துசாமியை
தனது உதவியாளராக ஆக்கிக்கொண்டார்.. தயாரிப்பாளரான எஸ்.
எம். நாயகம் இலங்கைக்கு வருமாறு அவரை அழைத்தார்.
அந்த அழைப்பை ஏற்று இலங்கைக்கு வந்த முத்துசாமி 1952 அக்டோபரில் இலங்கை
வானொலியில் சேர்ந்து கொண்டார். அங்கு டி.
எஸ். மணிபாகவதரின் இசைக்குழுவில் வயலின் இசைக்கலைஞராகப் பணியாற்றினார். எஸ். எம். நாயகம் கொழும்பின் புறநகரான கந்தானையில் 1953 இல் சுந்தர முருகன் நவகலா
சவுன்ட் ஸ்டூடியோ (எஸ். பி. எம். ஸ்டூடியோ) என்ற பெயரில் திரைப்படக் கலையகம் ஒன்றை
ஆரம்பித்து அதன் இசைப் பிரிவுக்கு முத்துசாமியைப் பொறுப்பாளரhக்கினார்.[
இதனையடுத்து 1953 இல் கே.
குணரத்தினம் தயாரித்த ‘பிரேம தரங்கய’ படத்தின் மூலம் தனது 27வது வயதில் முத்துசாமி முதல்
முதலாக இசையமைப்பாளரானார்.. அப்படத்தின் சிறப்பாக இசையமைத்ததற்காக தென்னிந்திய
ஊடகவியலாளர்கள் சங்கம் அவருக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை வழங்கியது..
இதனையடுத்து ‘புதும லேலி’
(1953) ‘அஹங்கார
ஸ்திரீய’, ‘மாதலங்’, ‘ஹித்த ஹொத்த மினிஹெக்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்து
சிங்கள மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார்.
பிரபல இயக்குனர் லெஸ்டர்
ஜேம்ஸ் பீரிசின் "சந்தேஷய" படத்தில் ‘பிருதுகீசிகாரயா’ என்ற பாடல் மூலம் எச். ஆர். ஜோதிபால என்ற புதிய பாடகருக்கு முத்துசாமி வாய்ப்பளித்திருந்தார்.
தென்னிந்தியப் பாடகர்கள் பலர் முத்துசாமியின் இசையமைப்பில் பாடியுள்ளனர். சிங்களப்
பாடகி நந்தாமாலினி ‘தருவா
காகெத’ என்ற
படத்தில் இவர் இசையமைத்த பாடல் மூலம் அறிமுகமானார்.
1972 இல் இலங்கையில் வெளிவந்த குத்துவிளக்கு தமிழ்த் திரைப்படத்திற்கு இசையமைத்துப் பாடியிருக்கிறார். ‘சிதக மஹிம’ என்ற படத்தில்
சுஜாதா அத்தநாயக்கவுடன் இவர் பாடிய ‘மதுரயாமே’ என்ற பாடல் மிகவும் புகழ்பெற்ற பாடலாகும். 1958இல் மீண்டும் இலங்கை வானொலியில் சேர்ந்து கொண்ட
முத்துசாமி மாஸ்டர் 1981 வரை 24 வருடங்கள்
அந்த நிறுவனத்தில் பணியாற்றினார்.
No comments:
Post a Comment