என் உடன் பிறந்த சகோதரர்களைக்கூட நான் பெயர் சொல்லித்தான் அழைப்பேன். ஆனால்
சிவாஜியை ‘அண்ணா’ என்றுதான் சொல்வேன். ‘எதிர்பாராதது’ என்ற படத்தில்தான்
முதன்முதலில் சிவாஜியுடன் நடித்தேன். என்னுடைய காட்சி முடிந்துவிட்டாலும்
படப்பிடிப்புத் தளத்தைவிட்டு மேக்-அப் ரூமுக்குச் சென்று ஓய்வு எடுக்கச்
செல்ல சிவாஜி அனுமதிக்க மாட்டார். அங்கேயே உட்காரச் சொல்லி மற்றவர்கள்
நடிப்பதைப் பார்க்கச் சொல்வார். வசனம் எப்படிப் பேச வேண்டும் என்று
கற்றுக்கொடுப்பார். அன்று அவர் எங்களுக்குக் கற்றுக்கொடுத்ததால்தான் இன்று
இங்கே நிற்கிறோம். அவரோடு சேர்ந்து நடித்தது நான் செய்த புண்ணியம். அந்தக்
காலம்தான் சினிமாவின் பொற்காலம். அந்தக் காலம் இனித் திரும்ப வராது.
No comments:
Post a Comment