தமிழ்த் திரையுலகின் முக்கிய கதாநாயகிகளுள் ஒருவராகத் திகழ்ந்தவர். குமுதம், பாலும் பழமும்,
பார்த்தால் பசிதீரும் போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர். புதிய பறவை படம் திரைப்பட உலகில் அவருக்கென ஒரு தனியிடத்தை ஏற்படுத்தியது.
ஜானகி நடுத்தரமான தெலுங்கு பேசும் குடும்பத்தில் 1931 டிசம்பர் 12 இல் பிறந்தார். தனது 16 வது வயதில் சென்னை வானொலியில் பாடியும் உள்ளார். அப்போது சினியா தயாரிப்பாளர் பி.என்.ரெட்டி, ‘குணசுந்தரி கதா’ என்ற தெலுங்கு படத்தில் நடிக்க அழைத்தும் திருமணம் செய்ய விருப்பதால் மறுத்து விட்டார். பின்னர் சங்கரமராஞ்சி சீனிவாச ராவ் என்பவரை 1947இல் திருமணம் செய்து கொண்டு மேகாலயாவில் தலைநகர் ஷில்லாங்கில் குடி புகுந்தார். இவருக்கு கிருஷ்ணகுமாரி என்ற தங்கையும் ராமு என்ற தம்பியும் உள்ளனர். கிருஷ்ண குமாரி தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக விளங்கியவர்.
திரையுலக வாழ்க்கை
தெலுங்கில் முதல் படம்:சௌகார்; தயாரிப்பு:விஜயா புரடக்சன்ஸ். என். டி. ராமராவுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
கதாநாயகியாக ஏ. நாகேஸ்வர ராவ், என். டி. ராமராவ், ஜக்கையா, சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் இவர்களுடன் நடித்துள்ளார்.
இவர், தெலுங்கு நடிகை கிருஷ்ணகுமாரியின் அக்கா ஆவார்.
No comments:
Post a Comment