
ஏவி.எம். தயாரித்த முரட்டுக்காளை படத்தில் ரஜனிகாந்த் கதாநாயகனாக நடித்தார். முக்கிய வேடத்தில் மகேந்திரன் நடித்தார். படம் பெரிய வெற்றி பெற்றது. ரஜpனியும் மகேந்திரனும் நெருங்கிய நண்பர்களானார்கள்.
மகேந்திரனின் மனைவி சுதாவின் தங்கை லதா, கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். கல்லூரி இதழுக்காக அவர் ரஜpனியை பேட்டி காண விரும்பினார்.
அப்போது தில்லுமுல்லு படப்பிடிப்பில் ரஜpனி இருந்தார். லதாவை அங்கே மகேந்திரன் அழைத்துச் சென்றார். லதா கேட்ட கேள்விகளுக்கு ரஜpனி பதில் அளித்தார். லதாவை ரஜpனி பார்த்துப் பேசியது சில நிமிடங்கள்தான் என்றாலும் அவர் மனதில் லதா குடியேறி விட்டார்.
மறுநாள் மகேந்திரனுக்கு ரஜpனி போன் செய்தார். மகேந்திரன்! நான் லதாவை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்றார்.

மகேந்திரனுக்கு மகிழ்ச்சி பொங்கியது. என்றாலும் தமா'hக, "என்னய்யா! அடிமடியில் கை வைக்கிறே! என்றார். பதிலுக்கு சிரித்த ரஜpனி, எனக்கு ஏற்ற பெண் லதாதான் என்று உறுதியாக சொன்னார்.
பிறகு இரு வீட்டாரும் திருமணப்பேச்சு நடத்தினார்கள். ரஜpனி - லதா திருமணம் திருப்பதியில் நடந்தது.
ரஜpனிகாந்திடம் மட்டுமல்லாமல் கமலஹாசனிடமும் நெருக்கமானவர் மகேந்திரன்.
கமலஹாசனுடன் மகேந்திரன் நடித்த குரு படம் அவருடைய சிறந்த கொமெடிக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.
இதுபற்றி மகேந்திரன் கூறியதாவது:-
நடிகர் திலகம் சிவாஜpக்குப் பிறகு மிகச்சிறந்த நடிகராக நான் மதிப்பது கமலஹாசனைத்தான். மாறுபட்ட வேடங்களில் நடித்து அசத்தி வருகிறார்.
நாடக நாட்களில் நாங்கள் ஒன்றாக ஓட்டலில் சாப்பிடுவோம். ஸ்கூட்டரில் அவர் வீட்டுக்குப்போவோம்.

கமலஹாசன் ஒருநாள் எனக்கு போன் செய்தார். போனை என் அப்பா எடுத்தார்.
என் அப்பாவுக்கு ஒரு வழக்கம். அன்பு ரொம்பவும் அதிகமாகிவிட்டால், கொஞ்சிப் பேசுவதுடன் சில அசைவ வார்த்தைகளையும் கூறுவார். நான் கமல் பேசறேன் என்று அவர் சொன்னதும், என்ன கண்ணா, எப்படி இருக்கே! என் ராஜh! உன்னை எப்ப பார்க்கலாம் கண்ணா என்று பேச ஆரம்பித்து விட்டார். கமல் உடனே
ரோங் நம்பர் என்று கூறி போனை வைத்து விட்டார்.
சற்று நேரம் கழித்து மீண்டும் கமல் போன் செய்ய நான் எடுத்தேன். ரோங் நம்பர் என்று கூறி போனை வைத்தது ஏன் என்று நான் கேட்டதற்கு உங்க அப்பா ராஜh,கண்ணா என்றெல்லாம் இதற்கு முன் என்னிடம் பேசியது கிடையாது. அதனால் போனை வைத்து விட்டேன் என்று கமல் கூறினார்.
அவருக்கு அன்பு அதிகமாகி விட்டால் இப்படியெல்லாம் பேசுவார். இன்னும் அதிகமாகவும் பேசுவார் என்று நான் சொன்னேன்.
சினிமாவில் நடிக்கும்போது, எல்லா நடிகர்களுடனும் இயல்பாக நடித்து விடுவேன். ஆனால் தசாவதாரம் படத்தில் எம்.ஆர்.ராதாவுடன் நடித்தபோது கொஞ்சம் பயம் ஏற்பட்டது. வசனம் பேசும்போது தடுமாறினேன். சில வசனங்களை மறந்து விட்டேன். உடனே ராதா, என்னப்பா! ஒய்.ஜp.பி. மவனே! என்னைப் பார்த்து ஏன் பயப்படுறே! உங்கப்பாவும் நானும் நல்ல நண்பர்கள், தெரியுமா? என்று கூறினார்.
எம்.ஆர்.ராதாவின் ரத்தக்கண்ணீர் நாடகத்தை முதன் முதலாக மைலாப்பு+ரில் பிராமணர்கள் வசிக்கும் பகுதியில் நடத்தியவர் என் அப்பா. தைரியமாக இப்படி நாடகம் போட்டதற்காக என் அப்பாவைப் பாராட்டிய ராதா, யோவ்... நீ பு+ணூல் போட்ட எம்.ஆர்.ராதா என்று கூறினார்.
இந்த நட்பு அடுத்த தலைமுறையிலும் தொடருகிறது.
என் நாடகக் குழுவில் நடித்த ராதாரவி இன்று என்னுடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவர்.
இவ்வாறு மகேந்திரன் கூறினார்.
No comments:
Post a Comment