ஆம்பள’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சுந்தர்.சி-விஷால் கூட்டணி மீண்டும் இணைய உள்ளது.
சுந்தர்.சி-விஷால் இருவரும் முதன் முறையாக கூட்டணி அமைத்த படம் மதகஜராஜா. ஆனால் அந்தப் படம் சில காரணங்களால் இன்று வரை வெளியாகாமல் பெட்டிக்குள் முடங்கிவிட்டது. இதையடுத்து தான் இருவரும் ஆம்பள படத்தில் மீண்டும் கூட்டணி அமைத்தனர். இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு கடந்த 15ம் வெளியானது. படத்துக்கு அனைத்து தரப்பில் இருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் சுந்தர்.சி-விஷால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்நிலையில் அதே உற்சாகத்தோடு சுந்தர்.சி-விஷால் வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் கைகோர்க்க உள்ளது. எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படம் சுந்தர்.சிக்கு மிகவும் பிடித்த திரைப்படமாம். இதே பாணியில் ஒரு படத்தை இயக்க வேண்டுமென நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தாராம்.
ஆனால், அதே போன்றதொரு படமெடுக்க வேண்டுமேயானால் பல நாடுகளுக்குச் சென்று படப்பிடிப்பு நடத்துவதற்கு பெரிய பட்ஜெட் தேவைப்படும் என்பதால் அந்தத் திட்டத்தை தள்ளிப்போட்டு வைத்திருந்தாராம். இப்போது சுந்தர்.சியின் நீண்ட நாள் திட்டம் விரைவிலேயே நிறைவேறப் போகிறது. ஆம், விஷாலை நாயகனாக்கி அப்படத்தை இயக்கும் திட்டத்தில் இருக்கிறாராம் சுந்தர்.சி. இப்படத்தின் வேலைகள் இந்த வருட இறுதிக்குள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுந்தர்.சி-விஷால் இருவரும் முதன் முறையாக கூட்டணி அமைத்த படம் மதகஜராஜா. ஆனால் அந்தப் படம் சில காரணங்களால் இன்று வரை வெளியாகாமல் பெட்டிக்குள் முடங்கிவிட்டது. இதையடுத்து தான் இருவரும் ஆம்பள படத்தில் மீண்டும் கூட்டணி அமைத்தனர். இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு கடந்த 15ம் வெளியானது. படத்துக்கு அனைத்து தரப்பில் இருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் சுந்தர்.சி-விஷால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்நிலையில் அதே உற்சாகத்தோடு சுந்தர்.சி-விஷால் வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் கைகோர்க்க உள்ளது. எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படம் சுந்தர்.சிக்கு மிகவும் பிடித்த திரைப்படமாம். இதே பாணியில் ஒரு படத்தை இயக்க வேண்டுமென நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தாராம்.
ஆனால், அதே போன்றதொரு படமெடுக்க வேண்டுமேயானால் பல நாடுகளுக்குச் சென்று படப்பிடிப்பு நடத்துவதற்கு பெரிய பட்ஜெட் தேவைப்படும் என்பதால் அந்தத் திட்டத்தை தள்ளிப்போட்டு வைத்திருந்தாராம். இப்போது சுந்தர்.சியின் நீண்ட நாள் திட்டம் விரைவிலேயே நிறைவேறப் போகிறது. ஆம், விஷாலை நாயகனாக்கி அப்படத்தை இயக்கும் திட்டத்தில் இருக்கிறாராம் சுந்தர்.சி. இப்படத்தின் வேலைகள் இந்த வருட இறுதிக்குள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment