அமெரிக்காவில் எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், லதா மங்கேஷ்கரும் இசை நிகழ்ச்சி
நடத்தினர். அன்றைய அமெரிக்க ஜனாதிபதி கிளிண்டன், தனது "வெள்ளை மாளிகை''க்கு
அவர்களை அழைத்து, விருந்தளித்துப் பாராட்டினார்.
1995-ல் "ஆசிய டாக்டர்கள் சங்கம்'', இந்தியாவில் மருத்துவ முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்தது. அதற்காக நிதி திரட்ட, எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், அவர் தங்கை எஸ்.பி.சைலஜாவும் இசை நிகழ்ச்சிகள் நடத்தினர். இதற்கு 10 லட்சம் டாலர் வசூலாயிற்று.
இதுபோல், வடநாட்டில், லதா மங்கேஷ்கர் இசை நிகழ்ச்சி நடத்தினார்.
இப்படி நிதி வசூல் செய்து கொடுத்ததற்காக, அமெரிக்காவில் நடந்த ஒரு மாநாட்டில், லதா மங்கேஷ்கரும், பாலசுப்பிரமணியமும் பாராட்டப்பட்டனர்.
இந்த மாநாட்டின் சிறப்பு விருந்தினராக, அன்றைய அமெரிக்க ஜனாதிபதி கிளிண்டன் கலந்து கொண்டார். அவர் முன்னிலையில் லதாவும், பாலுவும் பாடினார்கள்.
அவர்களுடைய இசைத் திறமையையும், குரல் இனிமையையும் கிளிண்டன் பாராட்டினார்.
அத்துடன், அவர்கள் இருவரையும் ஜனாதிபதி மாளிகைக்கு ("வெள்ளை மாளிகை'') வரச்செய்து, கிளிண்டனும், அவர் மனைவியும் விருந்தளித்து கவுரவித்தனர்.
`39 ஆண்டுகளில் 36 ஆயிரம் பாடல்கள் பாடி இருக்கிறார்; இசை அமைக்கிறார்; படங்களில் நடிக்கவும் செய்கிறார்; வெளிநாடுகளுக்குச் சென்று இசை நிகழ்ச்சிகளும் நடத்துகிறார். இதெல்லாம் எப்படி முடிகிறது?'' என்று பலரும் வியப்புடன் கேட்கிறார்கள்.
இதற்கு பாலசுப்பிரமணியம் காலை 7 மணி முதல் 9 மணி வரை டப்பிங் பேசுகிறேன். அதன் பிறகு ஒரு மணி வரை படத்தில் நடிக்கிறேன்.
பிறகு, பிற்பகல் 3 மணி வரை மீண்டும் டப்பிங். அதன் பிறகு மாலை 6 மணி வரை படப்பிடிப்பு. மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை பாடுகிறேன். தேவையானபோது இதில் மாற்றங்கள் செய்து கொள்வேன்.
இரவு - பகலாக வேலை செய்தாலும், வருடத்தில் 2 மாதம் விடுமுறை எடுத்துக் கொள்கிறேன். அப்போது, குடும்பத்துடன் வெளிநாடு செல்கிறேன்.
சில சமயம் ஒரே நாளில் அதிக பாடல்களைப் பாடி பதிவு செய்திருக்கிறேன்.
1981 பிப்ரவரி 8-ந்தேதி பெங்களூரில் காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை தொடர்ந்து 17 பாடல்கள் பாடினேன். அவற்றை கன்னட இசை அமைப்பாளர் உபேந்திரகுமார் பதிவு செய்தார்.
இதற்கு முன் ஒரு சமயம், ஒரே நாளில் தமிழில் 19 பாடல்கள் பாடி இருக்கிறேன். ஒரே நாளில் 16 இந்திப் பாடல்கள் பாடி இருக்கிறேன்!'' என்றார், பாலசுப்பிரமணியம்.
பாலுவின் தங்கை எஸ்.பி.சைலஜா ஒரு நல்ல பாடகி. 10 வயதில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். கமலஹாசன் நடித்த "சலங்கை ஒலி'' படத்தில், ஜெயப்பிரதாவின் மகளாக நடித்துள்ளார்.
தமிழிலும், தெலுங்கிலும் பல படங்களில் பின்னணியில் பாடியுள்ளார்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இசை அமைப்பாளராக ஆனபோது, தங்கைக்கு சலுகை காட்டியது இல்லை. அவரை பாடச்சொல்லும்படி பட அதிபர் கூறினால் மட்டும் வாய்ப்பு அளிப்பார்.
"ஏக் துஜே கேலியே'' படத்தில் சிறப்பாக பாடியதற்காக பாலுவுக்கு தேசிய விருது கிடைத்தபோது, அவர் டெல்லிக்கு சென்று ஜனாதிபதியிடம் பரிசைப் பெற்றுக்கொண்டார். அப்போது, தன் பெற்றோரையும் டெல்லிக்கு அழைத்துச் சென்றார்.
அதுவரை அவர்கள் விமானத்தில் பயணம் செய்ததில்லை. "விமானம் வேண்டாம். ரெயிலில் வருகிறோம்'' என்று தந்தை கூறினார்.
"ரெயிலில் டெல்லிக்கு போக 2 நாட்கள் ஆகும். விமானத்தில் பயணம் செய்தால் சில மணி நேரத்தில் போய் விடலாம். களைப்பு தெரியாது'' என்று எடுத்துக்கூறி, அவர்களை சம்மதிக்க வைத்தார்.
டெல்லியில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பெற்றோர் தங்குவதற்கு ஏற்பாடு செய்தார். அவர்கள் மிக வசதியோடு இருக்க வேண்டும் என்பதற்காக மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டார்.
எல்லோரும் அவரவர் அறையில் படுத்துத் தூங்கினார்கள். நடு இரவில், பாலுவின் அறைக்கதவு தட்டப்பட்டது. பதறிக்கொண்டு எழுந்து கதவைத் திறந்தார். வெளியே அவர் தந்தை நின்று கொண்டிருந்தார்.
"என்னப்பா? என்ன வேண்டும்?'' என்று கேட்டார்,பாலு.
"என் அறைக்கு வாயேன்'' என்று அழைத்துச் சென்றார்.
தண்ணீர் குழாயைக்காட்டி, "இந்தக் குழாயை எப்படி திறக்க வேண்டும்?'' என்று கேட்டார்.
நட்சத்திர ஓட்டல்களில், குழாய்கள் வெவ்வேறு வடிவமைப்பில் இருக்கும். புதிதாகத் தங்குவோர் அவற்றை இயக்க திணறிப்போவார்கள்.
குழாய்களை எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதை, தந்தைக்கு விளக்கினார், பாலு.
"பாலு! இந்த ஓட்டலுக்கு எவ்வளவு வாடகை?'' என்று தந்தை கேட்டார்.
"6 ஆயிரம் ரூபாய்!'' என்றார், பாலு.
"ஏம்பா! படுக்க ஒரு கட்டில், குளிக்க ஒரு பாத்ரூம். இதுதான் நமக்குத் தேவை. இதற்கு ஏன் 6 ஆயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டும்? பணம் வரும்போது அதை கவனமாக செலவழிக்க வேண்டும்'' என்று கூறிவிட்டு, தரையில் படுத்துக்கொண்டார்!
"ஏம்பா தரையில் படுக்கிறீங்க?'' என்று கேட்டார், பாலு.
"எனக்கு அந்த மெத்தை ஒத்துக்கொள்ளவில்லை. தூக்கமே வரவில்லை. எனக்கு இதுதான் சவுகர்யம்'' என்று கூறிவிட்டு படுத்துத் தூங்கிவிட்டார், பாலுவின் அப்பா.
சென்னையில், பாடல்கள் பதிவு செய்யும் "ரிக்கார்டிங் தியேட்டர்'' ஒன்றை அமைக்க பாலு விரும்பினார்.
விருகம்பாக்கம் அருகே, பட அதிபர் "சாண்டோ'' சின்னப்ப தேவர் தனக்குப் பிடித்தமான மிருகங்களை வளர்க்க நிலம் வைத்திருந்தார். ஒரு கட்டத்தில் அதை விற்க முடிவு செய்தார்.
அந்த நிலத்தை பாலு வாங்கினார். அங்கு "ரிக்கார்டிங் தியேட்டர்'' அமைத்தார். தான் சினிமா உலகில் நுழைவதற்குக் காரணமாக இருந்த கோதண்டபாணியின் பெயரை, அந்த ரிக்கார்டிங் தியேட்டருக்கு சூட்டினார்.
இந்த தியேட்டர் அமைப்பதற்காக பாடுபட்டவர் பாலுவின் நண்பர் ராதாகிருஷ்ணன். தியேட்டர் திறக்கப்படுவதற்கு முன், அவர் திடீரென்று காலமாகிவிட்டார்.
ரிக்கார்டிங் தியேட்டரின் மாடியில், ஒரு டப்பிங் தியேட்டரைக் கட்டி, அதற்கு ராதாகிருஷ்ணன் பெயரை சூட்டியுள்ளார், பாலசுப்பிரமணியம்.
1995-ல் "ஆசிய டாக்டர்கள் சங்கம்'', இந்தியாவில் மருத்துவ முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்தது. அதற்காக நிதி திரட்ட, எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், அவர் தங்கை எஸ்.பி.சைலஜாவும் இசை நிகழ்ச்சிகள் நடத்தினர். இதற்கு 10 லட்சம் டாலர் வசூலாயிற்று.
இதுபோல், வடநாட்டில், லதா மங்கேஷ்கர் இசை நிகழ்ச்சி நடத்தினார்.
இப்படி நிதி வசூல் செய்து கொடுத்ததற்காக, அமெரிக்காவில் நடந்த ஒரு மாநாட்டில், லதா மங்கேஷ்கரும், பாலசுப்பிரமணியமும் பாராட்டப்பட்டனர்.
இந்த மாநாட்டின் சிறப்பு விருந்தினராக, அன்றைய அமெரிக்க ஜனாதிபதி கிளிண்டன் கலந்து கொண்டார். அவர் முன்னிலையில் லதாவும், பாலுவும் பாடினார்கள்.
அவர்களுடைய இசைத் திறமையையும், குரல் இனிமையையும் கிளிண்டன் பாராட்டினார்.
அத்துடன், அவர்கள் இருவரையும் ஜனாதிபதி மாளிகைக்கு ("வெள்ளை மாளிகை'') வரச்செய்து, கிளிண்டனும், அவர் மனைவியும் விருந்தளித்து கவுரவித்தனர்.
`39 ஆண்டுகளில் 36 ஆயிரம் பாடல்கள் பாடி இருக்கிறார்; இசை அமைக்கிறார்; படங்களில் நடிக்கவும் செய்கிறார்; வெளிநாடுகளுக்குச் சென்று இசை நிகழ்ச்சிகளும் நடத்துகிறார். இதெல்லாம் எப்படி முடிகிறது?'' என்று பலரும் வியப்புடன் கேட்கிறார்கள்.
இதற்கு பாலசுப்பிரமணியம் காலை 7 மணி முதல் 9 மணி வரை டப்பிங் பேசுகிறேன். அதன் பிறகு ஒரு மணி வரை படத்தில் நடிக்கிறேன்.
பிறகு, பிற்பகல் 3 மணி வரை மீண்டும் டப்பிங். அதன் பிறகு மாலை 6 மணி வரை படப்பிடிப்பு. மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை பாடுகிறேன். தேவையானபோது இதில் மாற்றங்கள் செய்து கொள்வேன்.
இரவு - பகலாக வேலை செய்தாலும், வருடத்தில் 2 மாதம் விடுமுறை எடுத்துக் கொள்கிறேன். அப்போது, குடும்பத்துடன் வெளிநாடு செல்கிறேன்.
சில சமயம் ஒரே நாளில் அதிக பாடல்களைப் பாடி பதிவு செய்திருக்கிறேன்.
1981 பிப்ரவரி 8-ந்தேதி பெங்களூரில் காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை தொடர்ந்து 17 பாடல்கள் பாடினேன். அவற்றை கன்னட இசை அமைப்பாளர் உபேந்திரகுமார் பதிவு செய்தார்.
இதற்கு முன் ஒரு சமயம், ஒரே நாளில் தமிழில் 19 பாடல்கள் பாடி இருக்கிறேன். ஒரே நாளில் 16 இந்திப் பாடல்கள் பாடி இருக்கிறேன்!'' என்றார், பாலசுப்பிரமணியம்.
பாலுவின் தங்கை எஸ்.பி.சைலஜா ஒரு நல்ல பாடகி. 10 வயதில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். கமலஹாசன் நடித்த "சலங்கை ஒலி'' படத்தில், ஜெயப்பிரதாவின் மகளாக நடித்துள்ளார்.
தமிழிலும், தெலுங்கிலும் பல படங்களில் பின்னணியில் பாடியுள்ளார்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இசை அமைப்பாளராக ஆனபோது, தங்கைக்கு சலுகை காட்டியது இல்லை. அவரை பாடச்சொல்லும்படி பட அதிபர் கூறினால் மட்டும் வாய்ப்பு அளிப்பார்.
"ஏக் துஜே கேலியே'' படத்தில் சிறப்பாக பாடியதற்காக பாலுவுக்கு தேசிய விருது கிடைத்தபோது, அவர் டெல்லிக்கு சென்று ஜனாதிபதியிடம் பரிசைப் பெற்றுக்கொண்டார். அப்போது, தன் பெற்றோரையும் டெல்லிக்கு அழைத்துச் சென்றார்.
அதுவரை அவர்கள் விமானத்தில் பயணம் செய்ததில்லை. "விமானம் வேண்டாம். ரெயிலில் வருகிறோம்'' என்று தந்தை கூறினார்.
"ரெயிலில் டெல்லிக்கு போக 2 நாட்கள் ஆகும். விமானத்தில் பயணம் செய்தால் சில மணி நேரத்தில் போய் விடலாம். களைப்பு தெரியாது'' என்று எடுத்துக்கூறி, அவர்களை சம்மதிக்க வைத்தார்.
டெல்லியில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பெற்றோர் தங்குவதற்கு ஏற்பாடு செய்தார். அவர்கள் மிக வசதியோடு இருக்க வேண்டும் என்பதற்காக மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டார்.
எல்லோரும் அவரவர் அறையில் படுத்துத் தூங்கினார்கள். நடு இரவில், பாலுவின் அறைக்கதவு தட்டப்பட்டது. பதறிக்கொண்டு எழுந்து கதவைத் திறந்தார். வெளியே அவர் தந்தை நின்று கொண்டிருந்தார்.
"என்னப்பா? என்ன வேண்டும்?'' என்று கேட்டார்,பாலு.
"என் அறைக்கு வாயேன்'' என்று அழைத்துச் சென்றார்.
தண்ணீர் குழாயைக்காட்டி, "இந்தக் குழாயை எப்படி திறக்க வேண்டும்?'' என்று கேட்டார்.
நட்சத்திர ஓட்டல்களில், குழாய்கள் வெவ்வேறு வடிவமைப்பில் இருக்கும். புதிதாகத் தங்குவோர் அவற்றை இயக்க திணறிப்போவார்கள்.
குழாய்களை எப்படி உபயோகிக்க வேண்டும் என்பதை, தந்தைக்கு விளக்கினார், பாலு.
"பாலு! இந்த ஓட்டலுக்கு எவ்வளவு வாடகை?'' என்று தந்தை கேட்டார்.
"6 ஆயிரம் ரூபாய்!'' என்றார், பாலு.
"ஏம்பா! படுக்க ஒரு கட்டில், குளிக்க ஒரு பாத்ரூம். இதுதான் நமக்குத் தேவை. இதற்கு ஏன் 6 ஆயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டும்? பணம் வரும்போது அதை கவனமாக செலவழிக்க வேண்டும்'' என்று கூறிவிட்டு, தரையில் படுத்துக்கொண்டார்!
"ஏம்பா தரையில் படுக்கிறீங்க?'' என்று கேட்டார், பாலு.
"எனக்கு அந்த மெத்தை ஒத்துக்கொள்ளவில்லை. தூக்கமே வரவில்லை. எனக்கு இதுதான் சவுகர்யம்'' என்று கூறிவிட்டு படுத்துத் தூங்கிவிட்டார், பாலுவின் அப்பா.
சென்னையில், பாடல்கள் பதிவு செய்யும் "ரிக்கார்டிங் தியேட்டர்'' ஒன்றை அமைக்க பாலு விரும்பினார்.
விருகம்பாக்கம் அருகே, பட அதிபர் "சாண்டோ'' சின்னப்ப தேவர் தனக்குப் பிடித்தமான மிருகங்களை வளர்க்க நிலம் வைத்திருந்தார். ஒரு கட்டத்தில் அதை விற்க முடிவு செய்தார்.
அந்த நிலத்தை பாலு வாங்கினார். அங்கு "ரிக்கார்டிங் தியேட்டர்'' அமைத்தார். தான் சினிமா உலகில் நுழைவதற்குக் காரணமாக இருந்த கோதண்டபாணியின் பெயரை, அந்த ரிக்கார்டிங் தியேட்டருக்கு சூட்டினார்.
இந்த தியேட்டர் அமைப்பதற்காக பாடுபட்டவர் பாலுவின் நண்பர் ராதாகிருஷ்ணன். தியேட்டர் திறக்கப்படுவதற்கு முன், அவர் திடீரென்று காலமாகிவிட்டார்.
ரிக்கார்டிங் தியேட்டரின் மாடியில், ஒரு டப்பிங் தியேட்டரைக் கட்டி, அதற்கு ராதாகிருஷ்ணன் பெயரை சூட்டியுள்ளார், பாலசுப்பிரமணியம்.
No comments:
Post a Comment