மதியம் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள். கல்யாணத்திற்கு பின் வி.என். ஜானகி இனிமேல் சினிமாவில் நடிப்பதில்லை. நான் உங்கள் மனைவி, வீட்டோட இருந்து விடுகின்றேன் என்று எம்.ஜி. ஆரிடம் சபதம் எடுத்துக் கொண்ட வி.என். ஜானகி கடைசிவரை அப்படியே வாழ்ந்தார். மக்கள் திலகம் எம்.ஜி. ஆருடன் வாழ்ந்த காலங்கள் 40 ஆண்டுகள் 1957 முதல் 1987 வரை (1958ல் சத்தியதாய் இறந்துவிட்டார்.

அந்த படத்தை அவரே டைரக்கட் செய்தார். படம் சூட்டிங் முடிந்து வெளியிடப்பட்டது அந்தப் படம் பெரிய வெற்றியை கொடுத்தது. இதற்கு முன் “எம்.ஜி.ஆர். நாடக மன்றம்” என்ற பெயரில் சில நாடகங்கள் சொந்தமாக நடாத்தினார். எம்.ஜி. ஆருடைய இலட்சியமும் சத்தியதாயுடைய தெய்வ வேண்டுதலும் வீண் போகாமல் கொஞ்சம் நிறைவேறியது.
தன்னுடைய கடும் உழைப்பும் தன் அண்ணனுடைய உழைப்பும் தாயுடைய சிக்கன செலவும், அதாவது சிக்கனம் முக்கியம். சேமிப்பு அவசியம் என்ற சொல்படி எல்லாமே வெற்றிகரமாக நடந்தது.
சொந்தத்தில் வீடு சொந்தத்தில் கார், சொந்தத்தில் நாடக கம்பனி, சொந்தத்தில் ஸ்டூடியோ, சொந்தத்தில் சினிமா படம் தயாரிப்பு, சொந்தத்தில் கல்யாண மண்டபம், சொந்தத்தில் ஒருசிறிய மார்க்கட், சொந்தத்தில் பாடசாலை, சென்னை நகருக்கு வெளியே ஒரு தோட்டத்தில் ஒரு சிறிய பங்களா, ஆடு மாடு, கோழி, குருவிகள், பழமரங்கள், பண்ணையில் வேலை செய்ய பல வேலை ஆட்கள் உணவு உண்ணும் நேரத்தில் தன்னை காண வீட்டுக்கு வந்து இருப்பவர்களுக்கு எல்லாம் உணவு வழங்கக்கூடிய விதத்தில் தனக்கு வேண்டிய அளவிற்கு சம்பாத்தியம்.
எம்.ஜி.ஆர் எப்படி வாழனும் என்று நினைத்தாரோ அதே போல் வாழ்ந்தார் நினைத்ததை முடித்தவர். மக்கள் திலகம் தன் தாயுடைய கனவுகளை எல்லாம் நிறைவேற்றிய மகன் எம்.ஜி.ஆர் மக்கள் திலகத்திற்கு தாய்க்கு பின் தாரம் சொல் என்ற எம். ஜி.ஆருக்கு மிக பொருத்தமாய் அமைந்தது. நோயால் அவதிபட்டுக்கொண்டிருந்த சதானந்தவதி 1962ல் இறந்து போனார்.
பின் இரண்டு மாதம் கழித்து சென்னை நகருக்கு வெளியே இராமபுரம் என்ற இடத்தில் ஒரு தோட்டத்தில் புதிதாக கட்டியிருந்த வீட்டிற்கு தன்னுடைய மூன்றாவது மனைவி வி.என்.ஜானகியுடன் சென்று வாழ்ந்தார்.
No comments:
Post a Comment