Thursday, June 12, 2014

ஜானகியை மணக்க மனைவியிடம் சம்மதம் கேட்டவர்

. என். ஜானகியின் சொந்த ஊர் கேரளா பாலக்காட்டுக்கு அடுத்து உள்ள வைக்கம் என்ற ஊர். இவர் பிரபல கர்நாடகப் பாடல் ஆசிரியர் பாபநாசம் என்பருடைய தம்பி’ ராஜகோபால் ஐயருடைய மகள் தான் வி. என். ஜானகி. வைக்கத்தில் பிறந்தவராக இருந்தாலும் படித்தது, நடனம் கற்றுக்கொண்டது எல்லாம் சென்னைதான்.
இவருடன் பிறந்தது ஒரு ஆண். அவர் பெயர் நாராயணன். இவர்கள் சென்னை மைலாப்பூர் சேவகப் பெருமாள் கோயிலுக்கு அருகில் வசித்தார்கள். இவர்கள் பிராமின். வி. என். ஜானகி பிரபல டைரக்டர் கே. சுப்பிரமணி, நடிகை எஸ். பி. சுப்புலட்சுமி நடத்தி வந்த நாடகக் குழுவில் நடித்து வந்தார். பிறகு டைரக்டர் கே. சுப்பிரமணி வழியாக சினிமாவில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. இவர் நடித்த முதல் படம் “ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி” இந்தப் படத்தில் கதாநாயகியாக ரொம்பப் பிரமாதமாக நடித்துள்ளார்.
அந்தப் படத்தில் இவர் ஆயிரம் தலைகளை வெட்டி குவிக்கும் காட்சி மயிர் சிலிர்க்க வைக்கும். அந்தப் படம் எம். ஜி. ஆருடன் கதாநாயகியாக நடிக்க சில படங்களில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. முதல் படம் மோகினி 1948ல் வெளிவந்தது. அதை அடுத்து மதுர நாட்டு இளவரசி, நாம் போன்ற படங்கள் இவர்கள் நடித்த படங்கள்.
இந்தக் கால கட்டத்தில் இல்லற வாழ்க்கையே நமக்கு இனிமேல் இல்லை, தான் உண்டு தன் தொழில் உண்டு உழைப்பே உயர்வு என்ற ஏணியில் ஏறிக் கொண்டு இருக்கும் போது ஒரு பெரிய சறுக்கல் அதாவது எம். ஜி. ஆருக்கு மூன்றாவது கல்யாணம் நடக்க இயற்கை அழைத்தது. மக்கள் திலகம் எம். ஜி. ஆருடன் மூன்று படங்களில் ஜானகி நடித்துள்ளார்.
இதற்கு இடையில் எம். ஜி. ஆர். மீது அன்பு கொண்டார். (காதல்) இதை அறிந்த எம். ஜி. ஆர். அன்புக்கு அடிமையானார். ஆனால் காதல் என்பது சினிமாவில் மட்டும் (நடிப்பில்)தான். என்னுடைய சொந்த வாழக்கையில் இல்லை.
என் தாய் உடனே எனக்கு கேரளாவில் பெண் பார்த்துத் திருமணம் செய்து வைத்தார்கள். நான் அந்தப் பெண்ணுடன் ஒரு வருடம் தான் வாழ்ந்தேன். பிறகு ஒரு வருடம் கழித்து எனக்கு கட்டாயமாக இரண்டாவது கல்யாணம் நடந்தது. அந்தப் பெண்ணோடு ஒரு வருடம்தான் நல்ல சந்தோஷமாக வாழ முடிந்தது.
பிறகு அந்தப் பெண்ணுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அது சரியாகாமல் தொடர்ந்து உடல் நலக் குறைவாகவே இருக்குது.
இந்த மாதிரியான சூழ்நிலையில் உள்ள என்னிடம் என்னை நீங்கள் விரும்புவது எப்படி சரியாகும். தயவு செய்து இது வேண்டாம். நாம் இருவரும் நண்பர்களாக இருப்போம். தொடர்ந்து படங்களில் நடிப்போம் என்று எம். ஜி. ஆர். மிக விளக்கமாகச் சொன்னார். இவ்வாறு தன்னுடைய குடும்ப நிலைகளை விபரமாகச் சொன்னார்.
வி. என். ஜானகி பெண் என்றால் பேயின் மனம் இறங்கும் என்பது போல் எல்லாவற்றையும் யோசித்த எம். ஜி. ஆர். இந்த விஷயத்தில் மிகக் கவனமாக செயல்பட்டார்.
ஒரு பக்கம் தன் தாய். மறுபக்கம் தன் மனைவி, மேலும் மனைவி உயிருடன் இருக்கும் போதே வேறு ஒரு பெண்ணை காதலிப்பதோ, கல்யாணம் செய்து கொள்வதோ சட்டப்படி குற்றம் என்பதை எம். ஜி. ஆர். நன்கு அறிவார்.
அவர் நாடகம், சினிமா, குடும்ப வாழ்க்கையில் மிகவும் அனுபவம் பெற்றவர். எதையும் யோசிக்காமல் செய்யமாட்டார். அப்படிப்பட்ட இவருக்கு வி. என். ஜானகி விஷயத்தில் சிக்கல் ஏற்பட்டுவிட்டது. வி. என். ஜானகியிடமும், சதானந்தாவதியிடமும் பேசுவது நாட்சிகாரக் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலிலேயே விழுந்து விடுவோமெ என்று மிகவும் மனதை தைரியப்படுத்திக் கொண்டு ஒரு நாள் படிப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் முதலில் தன் மனைவியைப் பார்த்து விட்டுத்தான் மற்ற வேலைகளைச் செய்வது வழக்கமாக நடக்கிற விஷயம்.
இப்போது தன் மனைவியிடமே நேரடியாக இதைப் பற்றிப் பேசிவிடலாம் என்ன எண்ணத்துடன் தன் மனைவியிம் வி. என். ஜானகியைப் பற்றி முழுவிபரத்தையும் சுருக்கமாகச் சொல்லிவிட்டு பிறகு காதல் கல்யாணம் விஷயத்தையும் கடகடவென்று சொல்லிவிட்டு தன் மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டார். இந்த விஷயத்தில் மனைவியின் சம்மதம் இருந்தால் போதும். பிறகு மற்றவர்களுடைய சம்மதத்தைப் பெற்று விடலாம். தன் கணவர் தன்னிடம் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த சதானந்தவதியின் கண்களில் கண்ணீர் வடிந்தது.
இதைப்பார்த்த எம். ஜி. ஆர். உடனே கண்ணீரைத் துடைத்து விட்டுக் கொண்டே தன் மனைவியிடம் உனக்கு இது பிடிக்காவிட்டால் விட்டிவிடு அழாதே. உன்னுடைய சம்மதம் இல்லாமல் இனி மேல் அந்தப் பெண்ணிடம் பேசக் கூட மாட்டேன். கவலைப்படாதே எந்த விஷயத்தை அம்மாவிடம் கூட நான் சொல்லவில்லை. நீ நல்லா யோசித்து உன் முடிவை மெதுவாகச் சொல். அவசரம் இல்லை என்று சொல்லிவிட்டு அவருடைய அறைக்குள் போய்விட்டார்.
இவர் சென்ற பிறகு தன்னுடைய கணவருடைய நிலைமையைப் பற்றியும் அவருடைய வேண்டுகோளைப் பற்றியும் நினைத்து இந்த விஷயத்தை அடுத்த நாள் தன் மாமியாரிடமும் எம். ஜி. சியிடமும் பேசினார்.
இந்தச் செய்தியைக் கேட்ட இந்த இருவரும் அதிர்ச்சி அடைந்து போனார்கள். பிறகு சதானந்தவதி சத்தியதாயிடமும் எம். ஜி சியிடமும் தன் கணவர் விருப்பப்படி அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளட்டும். எனக்கு என் கணவருடைய மன நலம்தான் முக்கியம். அவருடைய மனம் நோகக்கூடாது.
என்னுடைய உடல் இனிமேல் நலம் பெற்று நான் எழுந்து மீண்டும் என்னடைய பொறுப்புக்களை, சேவைகளை அவருக்கு செய்ய முடியும் என்ற நம்பிக்கை இல்லை. எனவே தயவு செய்து அவரிடம் எந்தவித மறுப்பும் சொல்லாமல் கேள்விகள் கேட்காமல் நீங்களே உங்களுடைய சம்மதத்தைச் சொல்லுங்கள். அவர் மனம் புண்படாமல் நல்ல சந்தோஷமாக இருப்பதுதான் நமக்கு முக்கியம் என்று சொல்லிக் கொண்டு சத்தியதாயுடைய கையைப் பிடித்துக் கண்ணீர் விட்டார்.
இந்து ஆசாரப்படி கணவன் தன் மனைவியிடம் நான் இரண்டாவது கல்யாணம் செய்து கொண்டு போகிறேன் என்று சம்மதம் கேட்பதும் இல்லை. மனைவி கணவருக்கு சரி செய்து கொள்ளுங்கள் என்று சொல்வதுமில்லை. எந்த சூழ்நிலையிலும் தன் கணவர் எவ்வளவு மோசமானவராக இருந்தாலும் வைப்பாட்டியோ இரண்டாவது பெண்டாட்டி வைத்துக் கொள்ளவோ நல்ல மனதுடன் சம்மதிக்க மாட்டார்கள்.
ஆனால் சதானந்தவதி தன் கணவர் தன்னிடம் நான் திருமணம் செய்து கொள்ள அனுமதி கேட்பதை நினைத்து பூரிப்பு அடைந்து போனார். தன் மனைவி ஒரு படுக்கை நோயாளி என்று நினைக்காமல் பாசத்தோடும் பற்றோடும் கேட்டாரே இவர் வேறு திருமணம் செய்து கொண்ட பின் நம் மீது வைத்துள்ள அன்பும் பாசமும் பற்றும் போய்விடுமோ என்று நினைத்து எதுவானாலும் சரி அவர் நல்லா இருந்தால் போதும், நாம் சாகும் வரை அவருடைய முகத்தைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்தால் போதும்.
இந்த விஷயத்தில் சத்தியதாயும் எம். ஜி. சியும் எந்தவித மறுப்பும் சொல்லவில்லை. அப்படி இப்படின்னு எப்படியோ 1957ல் எம். ஜி. ஆரும் வி. என் ஜானகியும் பதிவுத் திருமணம் செய்து கொண்டார்கள். பின் ராயப்பேட்டையிலேயே ஒரு தனி வீடு பார்த்து குடித்தனம் போனார்கள். திருமணம் செய்து கொண்ட உடனே வி. என். ஜானகியை சதானந்தவதிக்கு அறிமுகப்படுத்தினார். உடனே வி. என். ஜானகி சதானந்தவதியுடைய காலைத் தொட்டு வணங்கி விட்டு அக்கா நான் உங்களுடைய உடன் பிறவாத் தங்கை என்னை உங்கள் தங்கை போல நினைத்துக் கொள்ளுங்கள். இப்போ என் உடன்பிறந்த தம்பியைத் தவிர வேறு யாரும் இல்லை. இதைக் கேட்ட சதானந்தவதி வி. என். ஜானகியுடைய கையைப் பிடித்துக் கொண்டு “நான் இருக்கிறேன் கவலைபடாதே” என்றார்.

No comments:

Post a Comment