அண்ணன் மீது
கோபம் கொண்ட
எம். ஜி. ஆர்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை ஆற்றுக்கு குளிக்கச் சென்று இருக்கும் போது அண்ணன், தம்பி
இருவருக்கும் வாய் தகராறு வந்துவிட்டது. காரணம் இவர்கள் கொண்டு போன ஆடைகளை துவைத்து
காயப்போட்டுவிட்டு ஆற்றில் நீந்தி விளையாடிக் கொண்டு இருக்கும் போது மற்ற பையன்களோடு
எம். ஜி ஆர். குளித்துவிட்டு கரை ஏறும் போது, அண்ணன் சக்கரபாணி கட்டி இருந்த கோமணம்
இடுப்பில் இல்லை.

அந்த நேரத்தில் கரையில் நின்று கொண்டு சிரித்து துள்ளிக் குதித்து ஆடி கொண்டு, நான் தரமாட்டேனே என்று சொல்லி சிரிக்கிறார் எம். ஜி. ஆர். அந்த நேரத்தில் அண்ணன் தம்பியிடம் கோமணத்தைக் கோடுக்க துவைத்துப் போட்ட டவுசரை போட்டுக்கிட்டு தன்னுடைய கோமணத்தை தண்ணீரில் பரிதாபமாக நின்று கொண்டு இருந்த அண்ணிடம் கொடுக்க வேறு வழி இல்லாமல் கோபத்தோடு கரைக்கு வந்து துவைத்து போட்டு இருக்கும் டவுசரை எடுத்து மாட்டிக்கொண்டு தம்பியிடம் பேசாமல் கோபமாக வீட்டிற்கு வந்தார் ஆர். சக்கரபாணி.
வீட்டுக்கு வந்தவுடன், தம்பியின் கோமணத்தை கேட்டு செஞ்சுகிறார். தம்பியோ தன் கோமணத்தை கொடுக்க மறுக்கிறார். கேட்டேன் தர மறுத்துவிட்டான். பிறகு நான் வாதாடிய பிறகு கரையில் காய்ந்து கொண்டிருந்த டவுசரை போட்டு கொண்ட பிறகு அந்த கோமணத்தை கேலி செய்து கொண்டு தண்ணீருக்குள் நிற்கும் என்னைப் பார்த்து தூக்கி போட்டான். நான் அந்த கோமணத்தை எடுத்துக் கட்டிக்கொண்டு கரை வந்தேன். இதை அம்மாவிடம் கோபமாக சொன்னார். இதைக் கேட்ட அம்மா எம். ஜி. ஆரை பார்த்து நீ ஏன்டா இப்படி செய்தாய் என்று கோப்பப்படுகிறார்.
அம்மா கோபமாக பேசி முடித்த உடனேயே எம். ஜி. ஆர். பதில் அளித்தார். அம்மா ஆற்றிலே நானும் அண்ணனும் மட்டும் குளிக்கவில்லை. எங்களைப் போல் எவ்வளவோ பையன்கள் குளிக்கின்றார்கள். அவ்வளவு பேரும் கோமணத்தை கட்டி கொண்டுதான் குளிக்கின்றார்கள். தன்னுடைய கோமணத்தை தண்ணீரிலேயே போயிடிச்சே என்று சொல்லி அடுத்தவங்க கோமணத்தை யாரும் கேட்பதில்லை.
அப்படி இருக்கையில் அண்ணன் தன் கோமணம் போவது கூட தெரியாமல் குளித்து இருக்கிறார். கரைக்கு வரும் நேரத்தில் தன்னிடம் கோமணம் இல்லையே என்று வெட்கப்பட்டு கொண்டு என் கோமணத்தை அவிழ்த்து கொடுக்கும்படி கேட்டார். நான் தண்ணீரிலிருந்து கரைக்கு ஏறும் நேரத்தில், ராமச்சந்திரா உன் கோமணத்தை அவிழ்த்து கொடுடா என்று சத்தம் போட்டு கேட்கிறார்.
நான் உடனே என் கோமணத்தை அவிழ்த்து கொடுத்த விட்டு உடலில் எதுவும் இல்லாமல் துணி காய்கின்ற இடத்திற்கு எப்படி போவேன்? அதனால் நான் காயும் என்னுடைய டவுசரை போட்டிகிட்டு கோமணத்தை தண்ணீரில் நிற்கும் அண்ணன் கிட்டே கொடுத்தேன். அதை கட்டிக்கொண்டு தான் அவர் கரைக்கு வந்தார்.
இது அவரோட தவறு. இந்த விஷயம் ஆற்றோடு முடிந்து விட்டுது. அம்மா இதை வந்து ஒரு பெரிய விஷயமாக எடுத்து கொண்டு உங்களிடம் குறை கூறுகிறாரே இது என்ன நியாயம் சற்று கோபத்தோடு அம்மாவை பார்த்து எம். ஜி. ஆர். இந்த நியாயத்தை கேட்கும் போது அந்தத் தாயினுடைய மன நிலை எப்படி இருந்து இருக்கும்.
No comments:
Post a Comment