
இந்த விஷயத்தில் அண்ணனிடம் எனக்கு பாடவரவில்லையே என்ன செய்யலாம் என்று கேட்டார். அதற்கு அண்ணன், தம்பி இதை தவிர மற்றதெல்லாம் உனக்கு சரியாக வருகிறது. அவற்றை விடாமல் ஒழுங்காக கற்றுகொள். இந்த மாதிரி சின்ன விஷயங்களை எல்லாம் நினைத்து வருத்தப்படக்கூடாது. எனக்கு எல்லா கலைகளும் சரியாக வரவில்லை.
அதைபற்றி நான் என்ன கவலைப்பட்டு கொண்டா இருக்கின்றேன். தொடர்ந்து வாரத்தில் இரண்டு மூன்று விதமான நாடகங்கள் நடந்துகொண்டு வரும், ஒருநாள் நல்லதங்காள் நாடகம் அன்று முதல் முதலாக நடைபெற இருக்கிறது. அந்த நாடகத்தில் நல்லதங்காளுக்கு 7 பிள்ளை அதில் கடைசி மகனாக எம்.ஜி. ஆருக்கு மட்டும் தான் நடிப்பும், வசனமும் உண்டு. இது தினமும் எம். ஜி. ஆருக்கு பயிற்சி அளித்து வந்தார்கள்.
No comments:
Post a Comment