* 1936 ஆம் ஆண்டில் கே. சுப்பிர மணியம் இயக்கிய திரைப்படங் களில் ஒன்று ‘பக்தகு சேலா’. இத்திரைப்படத்தில் நடிகை ‘எஸ். டி. சுப்புலட்சுமி’யை ஆணாகவும் (கிருஷ் ணனாகவும்) பெண்ணாகவும் (குசேலரின் மனைவியாகவும்) நடிக்க வைத்து (இரு வேடங்களில்) புதுமைசெய்தார்.
* கே. சுப்பிரணியம் தான் முதன் முதலாக முற்றிலும் குழந்தைகளை வைத்து படம் எடுத்தார். பெயர் ‘பாலயோகினி’, ஆண்டு 1937.
* தமிழ்த்திரைப்படத்தில் நடித்த முதல் வட மாநில நடிகை ‘சாந்தா ஆப்தே’ இயக்கியவர் ஓய். வி. ராவ், படம் சாவித்திரி, ஆண்டு 1941.
* 1939 ஆம் ஆண்டு வெளியான ‘சிரிக்காதே’ என்ற படத்தில் ஐந்து கதைகள் இடம்பெற்றன.
* முதல் கலர் படம்:
20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே பல தயாரிப்பாளர்கள் கலரில் படமெடுக்க முயன்று பல சோதனைகள் செய்திருக்கிறார்கள். அதனால் இதுதான் முதன் முதல் கலரில் வந்த படமென்று எந்த ஒரு படத்தையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாதென்று பிரிட்டிஷ் பிலிம் இன்ஸ்டிடியூட் சொல்லுகிறது. அப்பொழுது பிரபலமான ஒரு பெயர் ‘Melies’ என்பது. ஆனால் டெக்னிக்கலரில் 1935 ஆம் ஆண்டு வெளிவந்த ‘Becky Sharp’ ஷிharp’ என்னும் படம்தான் முதல் முழுநீள வண்ணப்படமாகும்.
* திரைப்பட வரலாற்றில் பெயருக்காக ‘பல லட்சங்கள்’ செலவழித்திருக்கிறார்கள் என்பது ஆச்சர்யமான விஷயம். ‘லெஸ் கேர்ல்ஸ்’ என்ற பெயர் ஒரு ஹாலிவுட் படாதி பதியை மிகவும் கவர்ந்துவிட்டது. ஆகவே, பெயருக்காகவே அந்த நாவலின் உரிமையை வாங்கினார். படத்திற்கு அந்தக் கதையை உபயோகிக்கவில்லை. படத்தின் பெயர் மட்டும் ‘லெஸ் கேர்ல்ஸ்’ என்று பெயர் வைத்தார்.
எனவே ‘லெஸ் கேர்ல்ஸ்’ என்ற இரண்டு வார்த்தைக்காக அவர் கொடுத்த தொகை எவ்வளவு தெரியுமா? 50 இலட்சம் ரூபாய்.
* சில்ட்ரன் கார்டனில் படிக்கும்போது அங்கு செல்லாமல் ஊர் சுற்றிய உலகப் புகழ் நடிகர் ‘மார்லன் பிராண்டோ’வை இவரது சகோதரி ஜோஸ்டான், நாயை பிணைப்பதுபோல் சங்கிலியால் பிணைத்து இழுத்துச் சென்றாராம்.
* இன்று ஆபாச திரைப்படங்களைக் காட்டியதற்காகக் கைது செய்யப்பட்டார்கள் என்று அடிக்கடி பத்திரிகைகளில் பார்க்கிறோம். இம்மாதிரி ஆபாசப் படங்களை ‘ப்ளூ பிலிம்’ என்று கூறுகிறார்கள் அல்லவா? இந்த ஆபாசத்திற்கும், நீல (ப்ளு) நிறத்திற்கும் என்ன தொடர்பு?
1800 ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் ‘ப்ளூ’ என்ற வார்த்தை ஆபாசத்தைக் குறிக்கப் பயன்பட்டதாம். எனவே, பால் உறவுக்காட்சிகளை அப்பட்டமாய்க் காட்டும் ஆபாசப் படங்களை இன்று வரை ‘ப்ளூ பிலிம்’ என்றே குறிப்பிடுகிறார்கள்.
No comments:
Post a Comment