Wednesday, January 29, 2014

உலக சினிமா

தணிக்கைக்குழுவை தவிக்க வைத்த படம்
மகாத்மா காந்தியைப் பற்றிய முதல் விவரணப்படம் 1921ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளிவந்தது. அந்நியத் துணிகளை எரிக்கும் நிகழ்ச்சியோடு முடிவடையும் அப்படம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. தணிக்கைக்குழு படமாக்கப்பட்டுள்ள இரண்டுநாள் வாழ்க்கையில் எதை விடுவது எதை வெட்டுவது என்று புலப்படாமல் குழம்பிப் போனதாம்.
ஆண்களே இல்லாத படம்
கோவிந்த நிஹாலனியின் தயாரிப்பில் பல்லவிஜோசி, கிட்டு கித்வானி நடித்த ‘ருக்மாபாய் கி ஹாவேலி’ என்ற படத்தில் ஒரு ஆண் கதாபாத்திரம் கூட இடம்பெறவில்லை.
ஆயிரம் காதலர்களின் அன்பு மடல்கள் காதலியின் சவப்பெட்டியில்
மறைந்த பிரபல நடிகை ‘சாரா பென்ஹார்டுக்கு’ ஆயிரத்திற்கும் மேற்பட்ட காதலர்கள் அவர் இறந்த பிறகு ரோஸ் உட்டால் ஆன அவளது சவப்பெட்டியினுள் அத்தனை காதலர்களும் எழுதிய காதல் கடிதங்களையும் அவள் சடலத்தைச் சுற்றி வைத்து புதைத்தார்கள்.

No comments:

Post a Comment