படப்பிடிப்பில் புதுமுக நடிகை காயம்
கெளரவம் என்ற பெயரில் உருவாகி வரும் படத்தின் சூட்டிங்கில் ஏற்பட்ட விபத்தில், புதுமுக நாயகி யாமி காயமடைந்தார். மொழி படத்தை இயக்கி பிரபலமானவர் ராதா மோகன். இவர் தற்போது கெளரவம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் நாயகனாக அல்லு சிரிஷ், நாயகியாக யாமி கவுதம் நடிக்கின்றனர். யாமி மும்பையை சேர்ந்தவர்.கெளரவம் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். இந்த படத்தை பிரகாஷ்ராஜ் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு ராஜமுந்திரியில் விறுவிறுப்பாக நடக்கிறது. இதற்காக படக்குழுவினர் அங்கு முகாமிட்டுள்ளனர். பாடல் காட்சியொன்றை படமாக்கியபோது யாமி கவுதம் கீழே விழுந்து காயம் அடைந்தார். பாடல் காட்சியில் யாமி கவுதம் சைக்கிள் ஓட்டி செல்வது போல் படமாக்கினர்.
அப்போது நிலை தடுமாறி சைக்கிளோடு கீழே விழுந்தார். அவருக்கு பலத்த அடிபட்டு ரத்தம் கொட்டியது. உடனடியாக டாக்டர் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. வலி நிவாரண மாத்திரைகளை யாமி சாப்பிட்டு ஓய்வு எடுத்தார். இந்த விபத்தால் சூட்டிங் நிறுத்தப்பட்டது.
தண்ணி பார்ட்டிக்கு டாட்டா
மனீஷா கொய்ராலா

தற்போது மலையாள படமொன்றில் நடித்து வருகிறார். திருமணத்துக்குப் பிறகும் மனிஷா கொய்ராலா தொடர்ந்து மதுவிருந்துகளில் பங்கேற்று தள்ளாடித் தடுமாறி செய்திகளில் இடம்பெற்று வந்தார். இதனால் அவரது இமேஜ் ஏகத்துக்கும் டேமேஜ் ஆகிவிட்டது. இந்த நிலையில் இப்போது தான் ரொம்ப மாறிவிட்டதாகக் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில்; நான் ரொம்ப மாறிவிட்டேன் எதற்கும் ஆசைப்படுவதில்லை. விருந்துக்கு போவதையும் நிறுத்தி விட்டேன். இப்போது வீட்டில் ஓவியம் வரைகிறேன். இது எனக்கு மன அமைதியை கொடுக்கிறது. இதனால் என் உடல் நிலையிலும் நல்ல ஆரோக்கியத்தை உணர்கிறேன் என்றார்.
யார் என்ன சொன்னாலும் அய்யரை விட மாட்டேன்
ஜனனி

நடிகைகள் பலர் தங்கள் பெயருக்கு பின்னால் சாதிப் பெயரை வைத்துள்ளது பற்றி விமர்சனம் எழுந்துள்ளது.
அதிலும் குறிப்பாக ஜனனி அய்யர் பெயர் இந்த விவகாரத்தில் பெரிதும் அடிபடுகிறது.
ஜனனி அய்யர் நடித்து அண்மையில் ரிலிஸான பாகன் இசை வெளியீட்டு விழா நடந்தபோது அதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் கரு பழனியப்பன். நடிகையின் இந்த சாதி அடையாள மோகத்தைக் கண்டித்தார். இந்தப் படத்தின் நாயகி தன் பெயரை ஜனனி அய்யர் என்று வைத்திருக்கிறார். அதென்ன அய்யர்? இப்படி தன் பெயரோடு சாதி அடையாளத்தை வைத்திருப்பதை நான் ஆட்சேபிக்கிறேன் என்றார்.
இந்த விமர்சனங்கள் எல்லாம் ஜனனிக்கு தெரியாமலா இருக்கும் அதற்கு அவர் கூறுகையில், யார் என்ன விமர்சனம் செய்தாலும் சரி என் பெயருக்கு பின்னால் இருக்கும் அய்யரை நீக்க மாட்டேன் என்று தில்லாகக் கூறியுள்ளார்.
காலையில் எழுந்ததும் முகம் கழுவாதீங்க
பொலிவுடன் திகழ சல்மா கூறும் அறிவுரை

ஹாலிவுட்டில் இன்று வரை ஹாட் நாயகிகள் பட்டியலில் நீடித்து வருபவர் சல்மா. வயது 46 ஆனாலும் இன்னு ஜொலிக்கிறார். இவரது இளமைக்கும், வயதுக்கும் சற்றும் சம்பந்தமில்லாமல் இருப்பது ரசிகர்களை வியக்க வைக்கிறது.
இந்த நிலையில் தனது அழகு ரகசியத்தை சிக்கிசுத்துள்ளார் சல்மா. இதுகுறித்து அவர் கூறுகையில்; நான் காலையில் எழுந்ததும் முகத்தைக் கழுவ மாட்டேன் அப்படியே விட்டு விடுவேன். இதுதான் எனது முகம் பொலிவுடன் பளிச்சென, தோல் சுருக்கமின்றி விளங்க முக்கியக் காரணம்.
மேலும் எனது தோல் பாதுகாப்புக்காக நான் சிறப்பாக எதையும் செய்வதில்லை. ஆரோக்கியமாக சாப்பிடுகிறேன். இதுதான் எனது சருமம் இயல்பான நிலையில் இருக்க இன்னொரு முக்கியக் காரணம் என்னைப் போன்ற முதுமையை நெருங்கும் பெண்களுக்கும் சரி, இளம் பெண்களுக்கும் சரி நான் சொல்ல விரும்பும் அட்வைஸ் இயற்கையாக இருங்கள், இயற்கையாகவே உங்களது சருமத்தைப் பாதுகாத்து பராமரித்து வாருங்கள் அதுவே போதுமானது என்று கூறுகிறார் சல்மா.
தமிழ் படங்களில் நடிக்க விடாமல் சதி

கார்த்தியுடன் நடித்த ‘பையா’படம் ஹிட்டானதால் மார்க்கெட் இன்னும் உயர்ந்தது. தொடர்ந்து சிறுத்தை, சுறா, வேங்கை, படங்களில் நடித்தார். தற்போது திடீரென தமிழ்ப்பட வாய்ப்புகள் நின்று போய் உள்ளது.
தெலுங்கில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். இந்தியிலும் ஹம்மத் வாலா படத்தில் நடிக்கிறார். ஆனால் தமிழ் படங்களில் நடிக்க யாரும் அழைக்கவில்லை. தமிழ்ப்பட உலகினர் தன்னை ஒதுக்குவதாக நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறார். தமிழ்பட வாய்ப்புகள் தனக்கு கிடைக்க விடாமல் யாரோ மறைமுகமாக சதி செய்வதாகவும் புகார் கூறி வருகிறார்.
இந்தி, தெலுங்கு படங்களில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார். விஜயகாந்த நடித்து வெற்றிகரமாக ஓடிய ரமணா படம் இந்தியில் ரீ மேக் ஆகிறது. இப்படத்தில் அக்ஷய்குமார் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
No comments:
Post a Comment