Wednesday, September 12, 2012


 

ஹன்சிகாவுக்கு சிம்புவால் கெடுபிடி

வாலு படத்தில் சிம்புவுக்கு ஜோடி சேர்ந்த காரணத்தினால் தற்போது கையை பிசைந்து ¦¡கண்டிரக்கிறாராம் ஹன்சிகா.
‘வேட்டை மன்னன்’, ‘போடா போடி’ என பிஸியாக இருக்கும் சிம்பு, வாலு படத்தை அவ்வப்போது கவனிக்கிறார். இதில் ஜோடியாக நடிக்கும் ஹன்சிகாவும், கொமெடியன் சந்தானமும் கை நிறைய படங்களை வைத்துக் கொண்டுள்ளனர்.
சிம்பு இறுதியாக நடித்த ‘ஒஸ்தி’ படம் எதிர்பார்த்த வெற்றியைத் தராததால், ‘வாலு’ மற்றும் ‘போடா போடி’ போன்ற படங்களை வெற்றிப் பாடமாக்கியே தீருவேன் என்ற வேகத்துடன் உழைத்துக் கொண்டிருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட போடா போடி திரைப்படம் இப்பொழுதுதான் வேகம் எடுத்துள்ளது. இதன் கிளைமேக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளனர்.
‘வாலு’ படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது என்று ஏற்கனவே சிம்பு அறிவித்துள்ளார். எனவே ‘வாலு’ திரைப்படத்தின் படப்பிடிப்பை விரைந்து முடிப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. எவ்வளவு பிஸியாக இருந்தாலும் ‘வாலு’ படப்பிடிப்பில் வந்து வந்து நடித்து தரவேண்டும் என்று நிம்பு ஒப்பந்தம் போட்டுள்ளதால் செய்வதறியாமல் கையை பிசைந்து கொண்டிருக்கிறாராம் ஹன்சிகா.

லட்சுமி ராய்க்கு பதில் ஷார்மி

நாகர்ஜுனா நடிக்கும் படங்களில் ஒரு ஐட்டம் டான்ஸ் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும். அவரது ராசி சென்டிமென்ட் ஷார்மிதான். ஏற்கனவே ‘கிங்’ மற்றும் ‘ரகடா’ படத்தில் ஷார்மியுடன் குத்தாட்டம் போட்டதில் படம் சூப்பர் ஹிட்.
இப்பொழுது நடித்துக் கொண்டிருக்கும் ‘தமருகம்’ படத்திலும் ஒரு ஐட்டம் பாடல் உண்டு. அதில் நாகர்ஜூனா உடன் ஆட லட்சுமி ராயை புக் செய்திருந்தனர். என்ன நினைத்தாரோ எனக்கு லட்சுமி ராய் வேண்டாம் ஷார்மியே போதும் என்று கூறிவிட்டாராம் நாகர்ஜூனா.
தேவி பிரசாரத்தின் இசையில் ‘தமருகம்’ படத்தின் பாடல்கள் ரகளையாய் வந்திருக்கிறதாம். அறிமுகப்பாடல் ஐதராபாத்தில் சில தினங்களுக்கு முன் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இதில் நாகர்ஜூனாவிற்கு ஜோடி அனுஷ்கா ஐட்டத்திற்கு ஷார்மி படம் செம ஹாட்டாக இருக்கும் என்று பேசுகின்றனர் டோலிவுட்டில்.

இன்ப அதிர்ச்சி அளித்த பிபாஷா.

33 வயது கவர்ச்சிப் புயல்

சமீபத்தில் வெளியான ராஸ் 3 படத்தில் இம்ரான் ஹஸ்மியுடன் 20 நிமிடம் முத்தக்காட்சியில் நடித்து சாதனைப் படைத்தார் பிபாஷா. திரைப்படங்களில் இதுவரை எடுக்கப்பட்ட முத்தக்காட்சிகளிலேயே இதுதான் மிக நீளமானது. இந்த காட்சியில் இம்ரானுடன் பேசிக் கொண்டே முத்தமிட வேண்டும் என்பதால் மிகவும் சிரமப்பட்டாராம் பிபாஷா.
இந்த காட்சி குறித்து ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், முத்தக்காட்சியில் நடிப்பதை விட படுக்கை அறை காட்சிகளில் நடிப்பது எவ்வளவோ மேல் என்று கூறி கேட்பவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார். படுக்கை அறை காட்சியில் நடிக்க ஆசைப்படும் ஒரே கதாநாயகி நானாகத்தான் இருப்பேன்.
ஏனெனில் முத்தக்காட்சியை விட அது வசதியானது என்று ஸ்டேட்மென்ட் இந்த 33 வயது கவர்ச்சிப்
புயல் விட்டுள்ளார். அடுத்த படத்தில் பிபாஷாவை புக் செய்யும் இயக்குநர்கள் இதை மனதில் கொள்வது நல்லது.
தன் முன்னாள் காதலர் ஜோன் ஏப்ரஹாம் உடன் முத்தக் காட்சியில் நடிப்பது மட்டுமே வசதியாக இருக்கிறது என்று கடந்த சில தினங்களுக்கு முன் ஏக்கப் பெருமூச்சுடன் பிபாஷா பேட்டி கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


நிதி நெருக்கடியில் காவேரி

நடிகை காவேரியை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்து விட முடியாது. காசி படத்தில் பார்வையற்ற விக்ரமிற்கு எல்லாமுமாக இருந்து தேற்றுபவர். இந்த காவேரிதான்.
கேரளத்தை பூர்வீகமாக கொண்ட காவேரி தமிழில் கண்ணுக்குள் நிலவு படத்தில் மூலம் அறிமுகமானார். அதற்கு பிறகு அப்பு, நினைக்காத நாளில்லை, சமுத்திரம், புன்னகை பூவே, கண்ணாடி பூக்கள், உட்பட பல படங்களில் நடித்தார். குடும்ப பாங்கான கேரக்டர்களுக்கு புகழ்பெற்ற காவேரி தெலுங்கில் கொஞ்சம் கிளாமராக நடித்து அங்கே கல்யாணி என்ற பெயரில் புகழ் பெற்றார்..
கே. பாக்யராஜ் இயக்கிய மெளன கீதங்கள் படம் நினைவிருக்கிறதா அதில் பாக்கியராஜின் சுட்டி மகனாக நடித்து டாடி டாடி ஓ மை டாடி பாட்டு பாடியவர் சூரிய கிரன். அவர் இப்போது தெலுங்கில் பிரபல இயங்குனர். இவரைத்தான் காவேரி காதலித்து திருமணம் செய்து கொண்டார். நன்றாக போய்க்கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் சொந்தப் பட தயாரிப்பு ஆசை வந்தது..
செப்டெம்பர் 6 என்ற படத்தை காவேரி தயாரிக்க சூரிய கிரன் இயக்கினார். இதே படத்தை அத்யாயம் 6 என்ற பெயரில் தமிழிலும் ஒரே நேரத்தில் தயாரித்தார்கள். 6 விதமான காதல்களை சொல்லும் 6 தனிதனி கதைகள் கொண்ட படம் 6 கதையிலும் 6 விதமான வண்ணங்களை பயன்படுத்தினார். அதாவது ஒரு கதை பச்சை நிறம் என்றால் ஹீரோ, ஹிரோயின் அணிகிற ஆடை, வீட்டு ஸ்கிரீனு இப்படி எல்லாமே அதிகபட்சம் பச்சையாக இருக்கும்.
இதை வித்தியாசமாக செய்தார் சூரிய கிரன். இதில் சோனியா சூரிய என்ற நடிகை டாப்லசாக வேறு நடித்திருந்தார்.
இப்படி பல்வேறு கொமர்ஷியல் அம்சங்கள் இருந்தபோதும் படம் தெலுங்கில் பெரும் தோல்வியை தழுவியது. மீடியாக்கள் படத்தை கிழித்து தொங்க விட்டது. ஒரு பெண் தயாரிப்பாளர். அதுவும் நடிகை இப்படி ஆபாச படம் எடுக்கலாமா என்று போட்டுத் தாக்கினார்கள். படத்துக்கான பட்ஜெட் இரு மொழியிலும் சேர்த்து சுமார் 6 கோடி ரூபாய். தெலுங்கில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து தமிழில் அதை வெளியிடும் திட்டத்தை கைவிட்டார் காவேரி.
6 கோடி ரூபாய் என்பது காவேரி போன்ற நடுத்தர நடிகைகளுக்கு பெரும் தொகை, இப்போது அதை மீட்டெடுக்க காவேரி தொலைக்காட்சி தொடர், சினிமா என்று கிடைக்கிற வாய்ப்பையெல்லாம் பயன்படுத்தி நடித்துக் கொண்டிருக்கிறார். ராம நாராயணன் இயக்கி சுட்டி பிசாசு என்ற படத்தில் ஒரு சிறிய கேரக்டரில்கூட நடித்தார். சூரிய கிரனும் படங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார்.


No comments:

Post a Comment